புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையில் கழகத்தின் சார்பில் சென்னையில் மனு !

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையில் கழகத்தின் சார்பில் சென்னையில் மனு !

08.03.2018 அதிகாலை திருவெற்றியூர் கிராம தெருவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை மீது சில சமூக விரோதிகள் சிவப்பு ( காவி ) நிற பெயின்டை ஊற்றி அவமதித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு திரிபுராவில் தோழர். லெனின் சிலையை உடைத்த போது, தமிழக பாஜக தேசிய செயலர் H .ராஜா சமூக வலைதளத்தில் அதை ஊக்கப்படுத்தியும் தமிழகத்திலும் இதே போல் ஈவெரா ( தந்தை பெரியார்) உடைபடும் என பதிந்ததால் தமிழகமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள் வீரியமானது. அதன் தொடர்ச்சியாய் திருப்பத்தூரிலும், திருவெற்றியூரிலும் மனித விடுதலைக்காக உழைத்த தலைவர்கள் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியும் டாக்டர் அம்பேத்கர் சிலை பெயின்ட் ஊற்றியும் அவமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு காவல்துறை தலைமை ஆணையரிடம் மனு தரப்பட்டது . திவிக வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. செந்தில்குமார் தலைமையில் , மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் அய்யனார் , தோதென் சென்னை மாவட்ட துணை செயலாளர் தோழர் சுகுமார் , வட சென்னை மாவட்ட தலைவர் தோழர் ஏசு ,தோழர் ராஜி, மயிலை பகுதி தோழர் மயிலை சிவா , தோழர் குமரன் , தாமு ,சாரதி , சரவணன் , தீபக் ஆகியோர் உடனிருந்தனர்.

No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: 6 people, people standing, tree, child and outdoor

You may also like...