பணிந்தது அதிகாரம் ஈரோட்டில் கழகத்தின் வெற்றி!

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப் பாளரும் மத விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளித்ததால் கழகம் அறிவித் திருந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இராமாநுஜரின் ஆயிரமா வது ஆண்டு ஜெயந்தி விழா என்ற பெயரில் 18.02.17 அன்று ஈரோடு, பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது.

இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு பதாகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு

இருந்தது.

மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இதுபோன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, நிகழ்வு நடைபெற உள்ள ஈரோடு பரிமளம் மகால் முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அனைத்து முற்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாரி களுக்கும் தகவல்  தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் கழக நிர்வாகி களை தொடர்பு கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப் பாளரும் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து கழகம் அறிவித்தப் போராட்டம் இரத்து செய்யப்பட்டது.

பெரியார் முழக்கம் 02032017 இதழ்

You may also like...