சென்னையில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் காதலர் தினத்தை யொட்டி ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர்களுக்கு பாராட்டு விழா 14.02.2017 அன்று மாலை 6 மணியளவில் கழக தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டச்செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். செந்தில் குனுடு முன்னிலை வகித்தார். 10 ஜாதி மறுப்பு இணையர்களைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரங்க. குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ரவிபாரதி, தாஜ் நிஷா ஆகியோர் கவிதை வாசித்தனர்.  அருள்தாஸ் பாடல்களை பாடினார். இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பாராட்டு விழா 9 மணியளவில் நிறை வடைந்தது.

பாராட்டுப் பெற்ற  ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர்

ஜெயமாலா-மனோகர்; கௌதமி-சதிஷ்; தரணி-குமரேசன்; ஜெமீன்-ரவி; கோமதி-திவாகர்; கோகிலா-கண்ணதாசன்; புவனேஷ்வரி-பார்த்திபன்; ரேஷ்மா-சார்லஸ்; கார்த்திகா-செல்வன்; சங்கரி-பாலு; லாவண்யா-சுரேஷ்.

பெரியார் முழக்கம் 23022017 இதழ்

16640673_1892618904355334_3882383969260664043_n 16711629_1892619377688620_2607822238889460315_n 16806785_1892619001021991_2855978981946096077_n 16806862_1892619004355324_5045413408677471712_n 16806996_1892618907688667_7809654768318616374_n 16807184_1892619007688657_3280461922192563402_n 16807188_1892618901022001_2951310895789392138_n 16830947_1892618777688680_9108513741237360501_n

You may also like...