‘எஸ்.வி.ஆர்.’ ஆவணப் படம் திரையிடல்

சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் 4.6.2016 மாலை 4.30 மணியளவில்

நடைபெற இருந்த “மனித நேயப் போராளி தோழர் எஸ்.வி.ஆர். ஆவணப் படத்

திரையிடல் நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.

உடனே கழகத் தலைவர் ஆலோசனைப்படி கழகத் தலைமைக் குழு உறுப்பினர்

அன்பு தனசேகரன் இல்லத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சிக்கான இடம் மாற்றப்பட்டது. இரவு 7.15 மணிக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் நல்லகண்ணு வெளியிட ஆவணப் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார் நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தியாகு, வ.கீதா, ஓவியர் டிராட்ஸ்கி மருது, பேராசிரியர் வீ.அரசு மற்றும் பல தோழர்கள் இயக்க நண்பர்கள் பங்கேற்றனர். கீழே காவலர்கள் நின்றிருக்க வீட்டின் மாடியில் ஆவணப் படம் திரையிடப்பட்டது.

பெரியார் முழக்கம் 09062016 இதழ்

You may also like...