பிப். 16இல் தொடங்கி, பிப்.25 வரை சுயமரியாதை சமதர்மப் பரப்புரை 2ஆம் கட்டப் பயணம்

ஜாதி மறுப்பு திருமணங்களை தடுக்காதே!

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் ‘சுயமரியாதை சமதர்ம’ப் பரப்புரையின் இரண்டாவது கட்ட பரப்புரைப் பயணம் பிப். 16 ஆம் தேதி சிவகங்கையில் தொடங்கி, 25 ஆம் தேதி மேட்டூரில் நிறைவடைகிறது. பயணத்தில் தமிழர் சுயமரியாதைக்கு எதிரான ஜாதியமைப்பைத் தகர்த்திட ஜாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்தி பரப்புரை நிகழும். ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களால் ஏற்படும் உடல் ரீதியிலான உளவியல் ரீதியிலான பாதிப்புகளை அறிவியல் பார்வையில் விளக்கப்படும். ஜாதியற்றோருக்கு தனி இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும். பயணத் திட்டங்களை விளக்கி பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை:

16.2.2014 ஞாயிறு – பகல் 1 – சிவங்கை, மாலை 4 – காளையார் கோவில், இரவு 7 – காரைக்குடி.

17.2.2014 திங்கள் – காலை 10 – நத்தம், மாலை 4 – அஞ்சுகுழிப்பட்டி, மாலை 5.30 – கோபால்பட்டி, இரவு 7 – சாணார்பட்டி.

18.2.2014 செவ்வாய் – பகல் 1 – திண்டுக்கல் பெரியகடைவீதி, மாலை 5 – இராமநாதபுரம், இரவு 7 – பாளையங்கோட்டை.

19.2.2014 புதன் – பகல் 1 – போடி, மாலை 5 – தேனி பி.சி.பட்டி, மாலை 7 – தேனி அல்லி நகரம்.

20.2.2014 வியாழன் – பகல் 1 – திண்டுக்கல் நாகல்நகர், மாலை 4 – பாடியூர், இரவு 7 – வலையபட்டி.

21.2.2014  வெள்ளி – பகல் 1 – கடவூர், மாலை 4 – பாளையம், இரவு 7 – கரூர்.

22.2.2014 சனி – காலை 10 – கொடுமுடி, பகல் 1 – காங்கேயம், மாலை 5 – பல்லடம்.

23.2.2014 ஞாயிறு – காலை 10 – சூலூர், பகல் 1 – பெரியநாயக்கன்பாளையம், மாலை 4 – கோவை காந்திபுரம்.

24.2.2014 திங்கள் – பகல் 1 – கோவை கணபதி, மாலை 5 – அன்னூர்.

25.2.2014 செவ்வாய் – காலை 10 – புளியம்பட்டி, பகல் 1 – சத்தியமங்கலம், இரவு 7 – மேட்டூர்.

பெரியார் முழக்கம் 06022014 இதழ்

You may also like...