Category: பெரியார் முழக்கம் 2016

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம்  (2) கொளத்தூர் மணி

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2) கொளத்தூர் மணி

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) மொழித் தூய்மைவாதம் என்பது தன் மொழி மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை எதிர்ப்பது. சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் என்று நம் மீது செலுத்தப்படும் எல்லா ஆதிக்கத்தையும் எதிர்க்கும் நாம், நம் மொழி மீது வேற்று மொழி ஆதிக்கம் செலுத்துவதை எதிர்ப்பது நியாயம் தான். பெரியாரும் பேசியிருக்கிறார் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்கும்போது னுளைiகேநஉவயவே என்ற சொல்லுக்கு பூத நாசினி என்று சொல்லுகிறார்கள். நச்சு நீக்கி என்று சொன்னால் என்ன? நுடநஉவசடிடலளளை என்ற சொல்லை ஏன் விக்தியோஜனம் என்று மொழிபெயர்க்கிறீர்கள்? மின் பருக்கை என்று ஏன் கூற மறுக்கிறீர்கள்? பெரியார் கேட்கிறார். நம் மொழி மீது இன்னொரு மொழியின் ஆதிக்கம் வேண்டாம் என்பது சரி; ஆனால் இனத் தூய்மை வாதம் பேசுகிறபோதுதான் சிக்கலே வருகிறது. இனத் தூய்மைவாதம் பேசுகிறவர்களிடம்...

பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பு

பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகப் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் சின்னப் பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி, திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் அரு. நல்லதம்பி தலைமையில் பள்ளத்தூரில் நடைபெற்றது. சின்னபிள்ளை யின் படத்தினை பெரியார் பெருந் தொண்டர் அழகிய நாயகிபுரம் ப.அ. வைத்தியலிங்கம் திறந்து வைத்தார்.  சின்னப்பிள்ளையின் தொண்டினை நினைவு கூர்ந்து, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன், ஆசிரியர் வீரமணி, த.மா.கா. நிர்வாகி வை.ராகவன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி முருகேசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் பொறுப்பாளர் பசுபதி, கூத்தலிங்கம், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆத்மநாதன், தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ், திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.பாரி, ‘மெய்சுடர் இதழ்’ ஆசிரியர் வெங்கடேசன், இ.சி.ஐ. திருச்சபை ஆயர் ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சி கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி பொன்முருகு,...

‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’

‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’

ஒரிசா பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாநிலம். மயூர்மஞ்ச் மாவட்டத் தில் பழங்குடி மக்களிடையே பேய், பிசாசு, சூன்ய நம்பிக்கைகள் தலை விரித்தாடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ‘பேய் பிடித்தவள்’, ‘சூன்யக்காரி’ என்று அறிவித்து 47 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் பழங்குடி மக்களிடையே இந்த மூட நம்பிக்கை களுக்கு எதிராக பகுத்தறிவாளர்களைக் கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வருகிறது. ‘சூன்யக்காரி’ தங்கள் பகுதியில் வாழ்வதால் பல தீங்குகள் வருவதாக மக்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல கிராமங்களில் இதே போன்ற மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக வாழ் நாள் முழுதும் பேராடியவர் மறைந்த டாக்டர் கோவூர். இலங்கையைச் சார்ந்த மனநல மருத்துவர். பேய், பில்லி, சூன்யம், ஆவி மோசடிகளை அம்பலப்படுத்தியவர். சென்னையில் பல முறை மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரைகளை செய்தவர். ‘மந்திர வாதி’களால் ஏமாற்றப்பட்டு, பிறகு தன்னிடம் மனநல சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் கதைகளை அவர் பதிவு செய்திருக்...

‘கடவுள்’ பெயரால்…

‘கடவுள்’ பெயரால்…

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற 28 அமைச்சர்களும் ‘ஆண்டவன்’ பெயரில் உறுதி ஏற்றனர். தலா 14 பேர் கொண்ட இரண்டு அணிகளாக உறுதி ஏற்றனர். கடவுளை மறுத்து ‘உளமார’ என்று உறுதி ஏற்கும் வாய்ப்பு அமைச்சர்களுக்கு இந்த முறை யினால் மறுக்கப்பட்டது. (அப்படி உளமார உறுதி ஏற்கும் துணிவு எந்த அமைச்சருக்காவது இருக்குமா என்பது வேறு கேள்வி; கடந்த முறை சட்டமன்ற உறுப் பினர்களாக பதவியேற்றபோது ஜோலார்பேட்டை வீரமணி மட்டும் கடவுள் பெயரால் உறுதியேற்கவில்லை என்ற ஒரு செய்தியும் உண்டு) 1967ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவை அமைந்தவுடன் முதன்முதலாக கடவுள் பெயரால் உறுதியேற்கும் முறையை முதல்வர் அண்ணா மாற்றி ‘உளமார’ என்று கூறி உறுதி ஏற்கச் செய்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். தலைமையில் அ.இ. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த  போதும் ‘கடவுள்’ பெயரால் உறுதி ஏற்கவில்லை. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹண்டே போன்ற பார்ப்பனர்கள் மட்டும் கடவுள் பெயரால் உறுதி ஏற்றனர். கடவுள்,...

‘காவல்’ தரும் காவலாண்டியூர்

‘காவல்’ தரும் காவலாண்டியூர்

மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந் துள்ள காவலாண்டியூர் கிராமம், கழகக் கட்டமைப் புடன் செயல்படக்கூடிய பகுதி. பெயரிலேயே ‘காவல்’ அடையாளத் தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. குடும்பத் தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராள மான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டி யூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டி யூர்’ என்ற ஊரின் பெயர்ப் பலகையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டு, ‘இனி நமக்குப் பயமில்லை’ என்று அவர்கள் கூறுவதாக அந்தக் காட்சி இருக்கும். காவலாண்டியூரில் கடும் எதிர்ப்புக்கிடையே கழகம் கால்பதித்து வளர்ந்த நிகழ்வுகளை காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் முகாமில் நினைவு கூர்ந்தார். தோழர்கள் சித்துசாமி, ஈசுரவன், சுப்ரமணியம் ஆகியோர் முன்னின்று...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (20) பெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (20) பெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்! வாலாசா வல்லவன்

சென்னை-தலைநகர் மீட்பு போராட்டத்தில் பெரியார்-காமராசர் கருத்துகளை பொய்யாகப் பதிவு செய்தவர் ம.பொ.சி. (சென்ற  இதழ் தொடர்ச்சி) ம.பொ.சி. வரலாற்றையே புரட்டி எழுதி விட்டார். “சென்னைப் பற்றிய பிரச்சினை யில் தமிழினத்தார் நிலை ஆரம்பத்தில் பரிதாபகரமானதாக இருந்தது. தி.க. தலைவர் பெரியார் ஈ.வெ. ரா., “சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன தமிழகத் தில் இருந்தாலென்ன! எங்கிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று அறிவித்து விட்டார்” என்ற பச்சையான பொய்யை (எனது போராட் டத்தில் பக். 619இல்) ம.பொ.சி. எழுதி யுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. காமராஜரைப் பற்றிக்கூடப் பொய்யான தகவலையே ம.பொ.சி. எழுதி யுள்ளார். “ஆம் சென்னை நகர் பற்றிக் கூட எதுவும் கூறாமல் அவர் மௌனம் சாதித்தார்.” (எனது போராட்டம் பக். 619) ம.பொ.சியின் கூற்று உண்மையல்ல. காமராசரின் தலைமையில் தான் அக்கட்சி யினர் நீதிபதி வாஞ்சுவைச் சந்தித்து ஆந்திராவின் தலைநகர் சென்னையில் இருக்கக் கூடாது என்று...

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம்  (1) கொளத்தூர் மணி

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1) கொளத்தூர் மணி

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற பெயரில் இந்த கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருக்கும் இளந்தமிழகம் இயக்கத் தோழர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் சில செய்திகளை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெரியார், தமிழ்த் தேசியம் அல்லது தேசியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அதனடிப்படையில் அல்லது அதற்கு பொருத்தமாக ஒரு தேசியத்தை முன் வைத்தாரா என்றால் இல்லை. அவர் எடுத்துக் கொண்ட ஜாதி ஒழிப்புக் கொள்கையின் நீட்சியாகத்தான் தனித் தமிழ்நாட்டு கருத்தை முன்வைத்தார். என்றாலும்கூட தேசியம் என்ற சொல்லாடலில் உள்ள அனைத்து கூறுகளும் அதில் உள்ளடங்கி இருந்தன. பெரியார் தனது கொள்கைகளை, கோட்பாடு களாக வரையறுக்கவில்லை. அவர் அறிஞர்களை நோக்கி எழுதியவர் அல்ல; அறியாத பாமரர்களிடம்...

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் கல்கி – தேஜஸ்ஸ்ரீ இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள். படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தேஜஸ்ஸ்ரீ ஆந்திராவைச் சார்ந்தவர். அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார். அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஸ்ரீ – கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கல்கியின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர். வினோத் – ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவர். இந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஸ்ரீயின் பெற்றோருக்கு முறைப்படி தகவல்...

இலண்டனும் புதுடில்லியும்

இலண்டனும் புதுடில்லியும்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாதிக்கான் என்ற இஸ்லாமியர், கடந்த மே 5ஆம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டி யிட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியான ‘கன்சர்வேட்டிவ்’ கட்சியைச் சார்ந்த ஜாக். கோல்ட் ஸ்மித் என்ற பெரும் பணக்காரர். ‘நான்தான் சாதிக் கான்; இலண்டன் மாநகரத்தின் மேயர்’ என்று மக்களிடம் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவரின் மூதாதையர் பாகிஸ்தானியர்கள். இவரது தந்தை, இலண்டன் மாநகர வீதிகளில் பேருந்து ஓட்டுனர். சாதிக் கான் 1970இல் இலண்ட னில் பிறந்தவர்; சட்டம் படித்தவர். எதிர்த்துப் போட் டியிட்ட கோல்ட்ஸ்மித், சாதிக் கானை இஸ்லாமிய பயங்கரவாதி என்று பிரச்சாரம் செய்தார். இஸ்லாமிய பயங்கரவாதம் இலண்டனுக்குள் ஊடுருவிவிடும் என்று மக்களிடம் மத வெறுப்புகளைத் தூண்டி விட்டார். இலண்டன் நகர மக்கள், இந்த ‘மதவெறி’ப் பிரச்சாரங்களை புறந்தள்ளி விட்டார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் பல்வேறு அடையாளங்கள் உண்டு. ஒற்றை...

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

இந்தியாவின் தலைநகரில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அரசு அதிகாரத் திமிருடன் மதவாதம் படை எடுக்கிறது. மாணவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கடந்த பிப்.9 ஆம் தேதி இந்தியாவின் ஆளும் பார்ப்பன ஆதிக்க சக்திகளால் முறைகேடாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாளில் தூக்குத் தண்டனைக்கு எதிராகவும்  இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் காஷ்மீர் மக்களுக்காகவும் மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அவ்வளவுதான். மாணவர் தலைவர் கன்யாகுமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் மீது ‘தேச விரோத சட்டம்’ பாய்ந்தது.  கன்யாகுமார் என்ற புரட்சிகர சிந்தனையை ஏற்றுக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வந்த இளைஞர். கன்யாகுமார் பிணையில் வெளிவந்த பிறகும் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மாணவர்களை விட்டு வைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைமை, பல்கலைக்கழகங்களில் ‘இந்துத்துவா’ வுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது என்று மோடி ஆட்சிக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்  வெளிப் படையாகவே எச்சரித்தார். மாணவர்களைப்...

மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தவுடன் மாட்டிறைச்சிக்கு முழுமையான தடை விதித்தது. மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக ஒரு புகார் வந்தால் அதற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ள முடியும் என்ற அளவுக்கு உணவு உரிமைக்கே சவால் விட்டது அந்த சட்டம். மாடுகளை வெட்டக் கூடாது; வீட்டில் மாட்டிறைச் சியையும் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் கூறியது. ஏதோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பா.ஜ.க. கருதியது. உண்மை என்னவென்றால் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி. மிகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய புரதச் சத்துணவு. சட்டமன்றத் தேர்தல்களில் தலித் மக்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் பா.ஜ.க., தலித் மக்களின் உணவு உரிமைக்கு தடை போட்டு பார்ப்பனிய உணவு கலாச்சாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கிறது. பார்ப்பனர்களே மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள்தான். புத்தர் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பார்ப்பனர்களே மாட்டிறைச்சி...

ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி

ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி

மோடியின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதற்கு சான்றாக செய்திகள் வந்து கொண் டிருக்கின்றன. இஸ்லாமிய எதிர்ப்பை முன்வைத்து இந்தியாவில் இந்துக்களை அணி திரட்டி, ‘இந்துத்துவா’ நாடாக மாற்றுவதற்கான திட்டத்தின் கீழ் ‘சங்பரிவார்’ காய் நகர்த்துகிறது. இதற்காகவே அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. புதுடில்லியில் அமைச்சகங்களில் ‘சவுத் பிளாக்’ என்று அழைக்கப்படும் வெளியுறவுத் துறை அதிகார வலிமையுடன் திகழ்வதாகும். பார்ப்பனர்கள் அதிகாரப் பிடிக்குள் இந்தத் துறை சிக்கியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு சூழ்ச்சிகரமான செயல் திட்டங்களை உருவாக்கியது இந்த ‘சவுத் பிளாக்’தான்! இப்போது ‘சவுத் பிளாக்’கையே ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நேரடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. பிரதமர் மோடியின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருக்கும் அஜீத் டோவல் என்பவரிடம் வெளிநாட்டுத் துறை தொடர்பான கொள்கைகளை முடிவெடுக்கவும் செயல்படுவதற்குமான அதிகாரங்கள் வந்துவிட்டன. மோடியே இந்த அதிகாரத்தை வழங்கிவிட்டார்....

ஜனநாயகம் என்றால்… பெரியார்

ஜனநாயகம் என்றால்… பெரியார்

ஜனநாயகம் என்றால் மெஜாரிட்டிகள் மைனாரிட்டிகளை ஆளுவது என்றுதான் அர்த்தம். அதாவது ஒரு விஷயத்தை 51 பேர் ஆதரித்து 49 பேர் எதிர்த்தாலும் அதற்குச் ஜனநாயக வெற்றி என்றுதான் அர்த்தம்… வடநாட்டுத் தென்னாட்டு ஆட்சியை எடுத்துப் பார்த்தால் நமக்கு எப்போது வரப்போகுது மெஜாரிட்டி? நம் வாழ்வெல்லாம் இன்றைக்கு இருக்கிற அமைப்புகள் மாறாமல் இருக்கிற வரையில் மைனாரிட்டியாகத்தானே இருக்க முடியும்?               (‘விடுதலை’ 20.1.1959) கட்சியின் பெயரால் அரசாங்கம் நடை பெறுகிறதென்றால் அது எப்படி ஜனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடுவதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும்.                       (‘விடுதலை’ 12.1.1956) ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதுதான் உண்மையான...

தேவை, பெண்களுக்கான நிலையம் ச. தமிழ்ச் செல்வன்

தேவை, பெண்களுக்கான நிலையம் ச. தமிழ்ச் செல்வன்

“பெரியார் எப்போதும் வாழ்வனுபவத்திலிருந்து அறிவுத் தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்பவர்.” பெரியாரின் பெண் விடுதலைப் பார்வையை மிக நுட்பமாக முன் வைக்கிறது இக்கட்டுரை. கட்டுரை யாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர். சமீபகாலமாக என் தலையி ல் ஏறிவிட்ட ஒரு கருத்து, ‘போராட் டங்கள் எல்லாமே கல்வி முறையி லிருந்துதான் துவக்கப்பட வேண்டும்’ என்பது. ‘பெண் விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, சனநாயகத்துக்கான போராட்டம் எல்லாமே பள்ளிக் கல்வியிலிருந்து ஆரம்பம் ஆக வேண்டும்’ என்று எல்லாக் கூட்டங் களிலும் பேசிக் கொண்டு திரிகிறேன். சமீபத்தில், அக்கருத்தின்மீது ஒரு சின்ன ஆப்பைப் பெரியார் வைத்து விட்டார். இம்மாதம் மகளிர் தினக் கூட்டங் களுக்கான வாசிப்பில் தந்தை பெரியாரின் கட்டுரைகளைக் கையில் எடுத்திருந்தேன். ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்தது: “மேல்நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் முதலிய குணங்களுக்கும் நம் நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி,...

‘அட்சய திருதியை’ சிறப்பு வினா-விடை!

‘அட்சய திருதியை’ சிறப்பு வினா-விடை!

‘அட்சய திருதியை’ நாளில் தங்கம் வாங்கினால், அது மேலும் மேலும் பெருகும்.  – நகைக்கடை விளம்பரங்கள்                 அப்படின்னா, கடைக்காரங்க தங்கத்தை வாங்கத் தானே வேண்டும்! ஏன், கூவிக் கூவி விக்குறாங்க? ‘அட்சயம்’ என்றால், ‘வளரும்’ என்பது அர்த்தம். தங்கம்தான் வாங்க வேண்டுமென்பது அல்ல, எதை வாங்கினாலும் வளரும்.              – செய்தி                 அப்ப இந்தியா, உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கும் அதுதான் உகந்த நாள்ன்னு சொல்லுங்க! ‘அட்சய திருதியை’ நாளில் ஒவ்வொரு நொடியும் புனிதமானது. தனியாக முகூர்த்த நேரம் பார்க்க வேண்டியதில்லை.          – செய்தி                 ஆமாம்! வர்த்தக நலன் கருதி அன்றைக்கு ‘ராகு காலம்’, ‘எமகண்டம்’ எல்லாம் ‘தள்ளுபடி’! வைகாசி மாதத்தில் வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் உண்மை அட்சய திருதியை திருநாள். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்து விட்டால், நன்மை பயக்காது என்பதற்காக, அது சித்திரை மாத வளர்பிறை நாள் திருதியைக்கு மாற்றப்பட்டு, அட்சய திருதியை...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (19) தமிழகத் தலைநகராக சென்னை தொடர பெரியாரின் பங்களிப்பு வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (19) தமிழகத் தலைநகராக சென்னை தொடர பெரியாரின் பங்களிப்பு வாலாசா வல்லவன்

சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துத் தந்ததே பிரதமர் நேரு தான் என்ற கருத்தை வலியுறுத்தி, 13.2.1953 அன்று சென்னை கடற்கரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் பேசினார். பெரியார் உரையின் தொடர்ச்சி இது. சென்னை நகரம் பறி  போவதை எதிர்த்து பெரியார் ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக பல வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது கட்டுரை. (சென்ற  இதழ் தொடர்ச்சி) கடற்கரைக் கூட்டத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி முன் நின்று நடத்தியிருக்கிறது. ம.பொ.சி எனது போராட்டத்தில் கூறியிருப்பதுபோல இராஜாஜி சொல்லி ம.பொ.சி ஏற்பாடு செய்ததல்ல. மேலும் பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் மேயரின் அலுவலகத்தில் நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது தெரிய வருகிறது. பெரியாரின் கிளர்ச்சியைக் காட்டித்தான் முதலமைச்சர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் “சென்னை யில்...

“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”

“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வே. மீனாட்சி சுந்தரம், ‘மார்க்சிஸ்ட்’ ஏப்ரல் மாத இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். “பகுத்தறிவு சித்தாந்தமும் – தி.மு.க., அ.தி.மு.க. சீரழிவும்” என்பது அக்கட்டுரை தலைப்பு. இக்கட்டுரை பெரியார் நடத்திய சமுதாயப் போராட்டத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கிறது. மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ‘தோழர் ஏ.பி.’ என்று அழைக்கப்பட்ட ஏ.பாலசுப்பிரமணியம், பெரியார் இயக்கம் குறித்து கொண்டிருந்த மதிப்பீடுகளை இக்கட்டுரை பதிவு செய்கிறது. மார்க்சியம் – பெரியாரியத்தை காலத்தின் தேவைக்கேற்ப உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்துகிறது.  முக்கியத்துவம் கருதி, கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.  வாசிப்பை எளிமையாக்க, ஆங்காங்கே கருத்துச் சிதையாமல் சொற்றொடர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  (ஆர்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1857-58 சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு தங்களது நிர்வாக முறையில் மாற்றம் கொண்டுவர இந்திய அரசாங்க சட்டம் என்ற தலைப்பில் ஒரு சட்டமியற்றினர் அன்றைய விக்டோரியா மகாராணியின் மீது இந்திய...

தூக்குத் தண்டனைக்கு உள்ளாவது யார்?

தூக்குத் தண்டனைக்கு உள்ளாவது யார்?

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. இராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறையில் வாழும் 7 தமிழர்கள் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள். ஆனாலும், ஏனைய சிறைவாசி களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகிறவர்கள், சமூகப் பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற ஆய்வை  கடந்த வெள்ளிக் கிழமை (மே 6, 2016) டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுவரை தூக்கிலிடப்பட்டவர் களில் பெரும்பான்மையினர், எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள். மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளாகவே இருப்பதை ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது. தற்போது தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் 385 பேரில் 241 பேர் முதன்முறையாக குற்றம் செய்தவர்கள். இதில் பல இளஞ்சிறார்களும் உண்டு. இளம் சிறார்களையும் முதியவர்களையும் தூக்கிலிடக் கூடாது...

கமலஹாசனின் “சபாஷ் நாயுடு”

கமலஹாசனின் “சபாஷ் நாயுடு”

நடிகர் கமலஹாசன் தன்னை பெரியாரிஸ்ட், கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்தி வருகிறார். மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர்கள் இப்படி பெரியார் கொள்கையோடு தங்களை இணைத்துக் கொள்ள முன் வருவது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதுதான். ஆனால், சமூக நீதிக் கொள்கையில் அவர்கள் வேறுபடுகிறார்கள். குறிப்பாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக கமலஹாசன் கருத்துகளைத் தெரிவிக்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பு கோட்பாடு, சமூக நீதியையும், பார்ப்பனிய சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்டதாகும். மக்கள் விடுதலைக்கான சமூகநீதியைக் கொண்டதே பெரியார் பேசிய நாத்திகம். இது கமலஹாசன் பேசும் நாத்திகத்திலிருந்து மாறுபட்டது. இப்போது கமலஹாசன் தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என்ற பெயரை சூட்டியிருப்பது விவாதங்களை கிளம்பியிருக்கிறது. படத்தின் பெயரோடு ஏன் ஜாதியை இணைக்க வேண்டும்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகின்றன. ‘படத்தின் கருத்தைப் பாருங்கள். தலைப்பை பார்க்காதீர்கள்’ என்று பதில் கூறுகிறார் கமலஹாசன். இப்படிப்பட்ட விவாதங்களை உருவாக்குவதேகூட...

“அன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்

“அன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்

மே 8 – உலக அன்னையர் நாள். 1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெர்ஜினியாவில் உள்ள கிராம்டன் நகரில்தான் இது முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. இப்போது இந்தியா உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 2ஆவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. சமூக வரலாற்றில் பெண்களே சமூகத்துக்குத் தலைமை தாங்கினார்கள். தனிமனித சொத்துடைமை உருவான பிறகு தாய்வழிச் சமூகம், தந்தை வழிச் சமூகமாகியது. தனது வாரிசுகளுக்கே சொத்துகள் போய்ச் சேர வேண்டும் என்ற சமூக வேட்கை, பெண்களை ஆண்களுக்கு  அடிமைப்படுத்தியது. இந்து பார்ப்பனிய மதம், அன்னையர்களை கொடுமைப் படுத்தியே வந்திருக்கிறது. வர்ணக் கலப்பைத் தடுப்பதற்கு கணவன் இறந்தவுடன் அவனை எரியூட்டும் நெருப்பில் அவனது மனைவியையும் உயிருடன் எரிக்கும் சமூகக் கொடுமைகளை பார்ப்பனர்கள் திணித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடியதால், பிரிட்டிஷ் ஆட்சி உடன்கட்டை ஏறும் கொடுமைக்கு சட்டப்படி முற்றுப்புள்ளி வைத்தது. தடைச் சட்டத்தையும்...

ரூ.86 கோடி கனிம வள கொள்ளைக்காரர்; காவல் நிலையத்தில் ‘ரவுடி’ பட்டியலில் அறிவிக்கப்பட்டவர்!  ‘தளி’ இராமச்சந்திரனை தோற்கடியுங்கள்! கெலமங்கலம் கூட்டத்தில் கொளத்தூர் மணி முழக்கம்

ரூ.86 கோடி கனிம வள கொள்ளைக்காரர்; காவல் நிலையத்தில் ‘ரவுடி’ பட்டியலில் அறிவிக்கப்பட்டவர்! ‘தளி’ இராமச்சந்திரனை தோற்கடியுங்கள்! கெலமங்கலம் கூட்டத்தில் கொளத்தூர் மணி முழக்கம்

4-5-2016 புதன் அன்று மாலை 5-00 மணிக்கு, கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேருந்து நிலையத் திடலில், கிருட்டிணகிரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக தேர்தல் நிலைப்பாட்டு விளக்கப் பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவர் தி.க.குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தலைவர் குமார், மாவட்டப் பொருளாளர் மைனர் (எ) வெங்கடகிரியப்பா, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் பழனி நன்றி கூறினார். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழ்கிற அப் பகுதியில் மைனர் வெங்கடகிரியப்பா தெலுங்கு மொழியிலேயே உணர்வுபூர்வமாக, அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத் தப்பட்டிருக்கிற தளி இராமச்சந்திரனின் அடாவடி சமூக விரோத நடவடிக்கைகளை விளக்கிப் பேசியதோடு, பொதுவுடமைக் கட்சிக்கு  இது ஒரு களங்கமே என்பதை விரிவாக விளக்கிப் பேசினார். பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன்,...

‘தளி’ தொகுதியில் தி.முக. வேட்பாளரை ஆதரித்து கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை

‘தளி’ தொகுதியில் தி.முக. வேட்பாளரை ஆதரித்து கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் பழனி, 2012ஆம் ஆண்டில் துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தளி பகுதியில் கடும் குற்றப் பின்னணிகளோடு சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பு, குவாரி கொள்ளைகளை நடத்தி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் என்பவரை எதிர்த்து, மக்கள் உரிமைக்காகப் போராடியதற்காக பழனி படுகொலைக்கு உள்ளானார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தளி இராமச்சந்திரன். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகி விட்டார். கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தளி’ தொகுதி வேட்பாளராக இராமச்சந்திரனை அக்கட்சி நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் ஆதரிக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் ‘தளி’ தொகுதியில் மட்டும் அக்கட்சி தனது வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இந்திய...

களமிறங்கினர் கழகத் தோழர்கள்:7 மணி நேரப் போராட்டம் வெற்றி! பொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு

களமிறங்கினர் கழகத் தோழர்கள்:7 மணி நேரப் போராட்டம் வெற்றி! பொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் அருகில் உள்ளது சி.எம் நகர். 27.4.16 அன்று அவ்வூரைச் சார்ந்த மாரியம் மாள் (எ) சாந்தி என்பவர் மரண மடைந்தார். ஆர்.என் புதூர், சி.எம் நகர் பகுதி வாழ் மக்கள் அங்குள்ள காவிரிக் கரையோரம் உள்ள மங்கலத்துறை என்ற பகுதியை தங்கள் சுடுகாடாக அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சுடுகாட்டில் அரசு சார்பில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு, தகனமேடை அமைக்கப்பட்ட பிறகு, ஆதிக்க சமூகத்தினர் அதற்கு பூட்டு போட்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முனைந்துள்ளனர். இந்நிலையில் இறந்து போன மாரியம்மாள் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சி.எம். நகர் பகுதி மக்கள் உடலை எடுத்துச் சென்றனர். ஆனால், ஒரு ‘சக்கிலிச்சி’ யின் பிணத்தை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, சுடுகாட்டின் பூட்டைப் பூட்டி சாவியை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுத்த ஆர்.என் புதூரைச் சார்ந்த ஆதிக்க சமூகத்தினர்...

விளிம்பு நிலை சமூகங்களை புறக்கணிக்கும் ஆதிக்க சாதி தேர்தல் அரசியல்!

விளிம்பு நிலை சமூகங்களை புறக்கணிக்கும் ஆதிக்க சாதி தேர்தல் அரசியல்!

தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஜாதியம் குறித்து ‘தமிழ் இந்து’ (ஏப்.29) நாளேடு வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: தமிழ்நாட்டு அரசியல் இன்றைக்கு யார் கையில் இருக்கிறது என்று கேட்டால், கருணாநிதி, ஜெய லலிதா பெயர்களைச் சொல்வது சுலபமான பதில். அது உண்மையும்கூட. அதேசமயம், அது மட்டுமே உண்மை அல்ல. தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் சாதிப் பின்னணி இது தொடர்பான உண்மைகளை நாம் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 7. பொதுத் தொகுதிகள் 32. மொத்தமுள்ள 39 தொகுதி களில் 32 இடங்கள் அ.தி.மு.க. வசம் இருக்கின்றன. பொதுத் தொகுதிகளில் அதன் பிரதிநிதிகளின் சமூகம் சார் பின்னணி இது: வன்னியர் 23.33ரூ, கவுண்டர் 23.33ரூ, முக்குலத்தோர் 20ரூ, நாடார் 6.7ரூ, நாயுடு 3.33ரூ. தமிழகத்தின் சட்டசபைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (18) வாஞ்சு அறிக்கைக்கு எதிராக பெரியார் போர்க் கொடி! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (18) வாஞ்சு அறிக்கைக்கு எதிராக பெரியார் போர்க் கொடி! வாலாசா வல்லவன்

சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துத் தந்ததே பிரதமர் நேரு தான் என்ற கருத்தை வலியுறுத்தி, 13.2.1953 அன்று சென்னை கடற்கரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் பேசினார். பெரியார் உரையின் தொடர்ச்சி இது. சென்னை நகரம் பறி  போவதை எதிர்த்து பெரியார் ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக பல வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது கட்டுரை. (14.4.2016 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழின் தொடர்ச்சி) இந்தக் கூட்டம் வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கெடுதியை எடுத்துச் சொல்ல மாத்திரம் ஏற்படுத்தப்பட்டக் கூட்டம் அல்ல. அந்த அறிக்கையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும் என்கிற பரிகாரத்திற்கு ஆகவும் கூட்டப்பட்ட கூட்டமாகும். வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கேடு இந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததுதான்; இங்குக் கூடி உள்ள உங்கள் எல்லோருக் கும் தெரிந்ததுதான். இதற்குப் பரிகாரம் என்ன? இதில் யார் யார் எவ்வளவு தூரம் ஒன்றுபட்டு வேலை செய்ய...

‘தளி’ இராமச்சந்திரனை நியாயப்படுத்துகிறார் தோழர் முத்தரசன்

‘தளி’ இராமச்சந்திரனை நியாயப்படுத்துகிறார் தோழர் முத்தரசன்

தளி தொகுதியில் போட்டி யிடும் குற்றப் பின்னணி கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் இராமச்சந்திரன் குறித்து அக் கட்சியின் மாநில செயலாளர் ‘தினமலர்’ நாளிதழுக்கு (ஏப்.28) அளித்துள்ள பேட்டி இது: கேள்வி: ‘ஊழலற்ற ஆட்சி; நேர்மையான நிர்வாகம்’ என பிரச்சாரம் செய்யும் நீங்கள், கிரானைட் முறைகேடு மற்றும் கொலை வழக்கில் சிக்கி உள்ள எம்.எல்.ஏ., தளி இராமச்சந்திரனை மீண்டும் வேட்பாள ராக்கியது ஏன்? பதில்: தளி இராமச் சந்திரன் மீதான புகார்கள் குறித்து, கட்சி யின் மாநிலக் குழு தீவிர விசாரணை நடத்தியது. அவர் மீதான புகார்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி யில் செய்யப்பட்டவை என தெரிகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற விசாரணை யில் உள்ள நிலையில், ஒரு தலைபட்சமாக முடிவெடுத்து, அவரை ஒதுக்கி வைக்க முடியாது. அவர் எம்.எல்.ஏ. ஆன பின், கிரானைட் தொழிலை செய்ய வில்லை. கிரானைட் தொழிலை, இராமச் சந்திரன் குடும்பத்தினர், நீண்டகாலமாக செய்து...

தலையங்கம் அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்

தலையங்கம் அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்

இந்திய தொழில்நுட்பக் கழகமான அய்.அய்.டி.களில் சமஸ்கிருதம் கற்றுத் தருவதற்கு மத்திய மனித வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி எழுத்து மூலம் அளித்த பதிலில், “வேதங்களில் கூறப்பட்ட அறிவியலை மாணவர்கள் படித்து அறிவதற்காக, சமஸ்கிருதத்தை கற்பிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்” என்று அய்.அய்.டி.களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். புராணம் மற்றும் வேதங்களில் கூறியுள்ள ‘அறிவியல்’ கருத்துகளைப் பரப்பிடவும், சமஸ்கிருதத்தைப் பாதுகாத்திடவும் மோடி ஆட்சி ஒரு குழுவை நியமித்திருக்கிறது. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான தமிழ்நாட்டைச் சார்ந்த கோபால்சாமி அய்யங்கார், இந்தக் குழுவின் தலைவர். இந்தக் குழு நவீனகால படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், பொறியியல், தொழில் நுட்பம் தொடர்பாக வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாம். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மோடி ஆட்சி இந்த முடிவை  எடுத்துள்ளதாம். இதற்கு ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த...

தமிழக அரசே! உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடைபாதைக் கோயில்களை அகற்று! கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகை

தமிழக அரசே! உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடைபாதைக் கோயில்களை அகற்று! கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகை

உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து தமிழக அரசு நடைபாதைக்  கோயில்களை அகற்ற வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. திருப்பூரில் : திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் 28.04.2016 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக மாநகர தலைவர் நீதிராசன் தலைமையில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “சட்ட விரோதமான நடைபாதைக் கோயில்களை அகற்று! உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் கால தாமதப்படுத்தாதே!” என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் முகில்ராசு, பல்லடம் நகர தலைவர் கோவிந்தராசு, ஒன்றிய தலைவர் சண்முகம், சூலூர் பன்னீர்செல்வம்,  அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, அகிலன், மாதவன், முத்து....

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி !

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி !

டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதித் திட்டம் (னுச.ஹஅநெனமயச ளுஉhநஅந கடிச ளுடிஉயைட ஐவேநபசயவiடிn வாசடிரபா ஐவேநச-ஊயளவந ஆயசசயைபநள) என்று ஒரு திட்டம் மத்திய அரசால் முடங்கிப் போய் கிடக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக அங்கீகாரத்துக் காகவும் பொருளாதார பாதுகாப்புக்காகவும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு அமைச்சகம் 2013இல் இந்த நிதித்திட்டத்தை உருவாக்கியது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அம்பேத்கர் ஃபவுண்டேஷனிடம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டுக்கு இந்தியா முழுவதும் 500 தம்பதிகளைத் தேர்வு செய்து ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதை அம்பேத்கர் ஃபவுண்டேஷன் இறுதி செய்து நிதியுதவியை அளிக்கும். கொடுமை என்னவென்றால், திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை இந்த நிதியுதவியைப்ய பெற்றவர்கள், வெறும்...

கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு: ஒரு விளக்கம் !

கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு: ஒரு விளக்கம் !

கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் இங்கு பதிவிடப்படுகின்றன. முதலில் – திடீர் தமிழ் கம்பெனிகளின் எதிர்ப்பை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இவர்கள் எப்போதும் நம்மை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நாம் எது செய்தாலும் எதிர்ப்பவர்கள், அதனால் அவர்களின் எதிர்ப்பு குறித்து நமக்கு ஒரு போதும் கவலை இல்லை. இரண்டாவதாக – நம் தோழமை சக்திகளின் விமர்சனங்கள்.அவற்றிற்கு நாம் கட்டாயம் பதில் சொல்லவேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் ஆதாயம் கருதியோ, பலாபலன் கருதியோ நாம் இந்த பெரியாரிய பணியில் இல்லை என்பது போலவே இயங்கும் தோழமை அமைப்பு தோழர்களிடம் நாம் நம் நிலையை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நாளை தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் நாம் இணைத்து பணியாற்றத்தான் போகிறோம் என்பதை இவ்விடம் சொல்லத் தேவையில்லை. பெரியார் இயக்கங்கள் தேர்தல் ஆதரவு நிலைப்பாடு என்பது “யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் வந்துவிடக் கூடாது” என்பதை...

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவின் – அங்கீகரிக்கப்பட்ட மொழி களில் ஒன்று சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தையும்  இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கலாம் என்று கூறியதற்காக அம்பேத்கரை ‘இந்துத்துவவாதி’ பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்தியாவின் தேசிய மொழியாக ‘சமஸ்கிருதம்’ மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் ‘இந்துத்துவா’ கொள்கை.  ஆர்.எஸ்.எஸ்சுக்கு தத்துவார்த்த நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (க்ஷரnஉh டிக கூhடிரபாவள) நூலில் இதை கோல்வாக்கரே எழுதியிருக் கிறார். அம்பேத்கர் – இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட பல்வேறு மொழிகளில் சமஸ்கிருதமும் இருக்க லாம் என்றார். இரண்டுக்கும் மலையளவு வேறு பாடுகள் உண்டு; இந்த உண்மையை மறைக்கிறார்கள். சமஸ்கிருதம் எல்லோருக்கும் பொதுவான மொழியாக இருந்ததாம். அது மக்கள் மொழியாம்; இந்த நூலில்  எழுதியிருக்கிறார்கள். அப்படி இருந் திருக்குமானால்...

இந்துத்துவவாதிகளுக்கு அம்பேத்கரின் கேள்விகள்!

இந்துத்துவவாதிகளுக்கு அம்பேத்கரின் கேள்விகள்!

தலித் மக்களை இந்து மதத்துக்குள்ளும், ‘இந்துத்துவா’ எனும் கோட்பாடுக் குள்ளும் அடக்க முயலும் சங்பரிவாரங்களின் வாதங்களை உடைத்து நொறுக்கு கிறார், டாக்டர் அம்பேத்கர்! டாக்டர் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்விகள் என்ன? இந்துஸ்தானத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ‘இந்து’ தான் என்று வாதிட்டால், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகளும் இந்துக்களா? ‘இந்து’ என்ற சொல் மதத்தைக் குறிப்பிடுவதாக இருந்தால், அதில் இரண்டு பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று இந்து மதம் வலியுறுத்தும் விதிகளான சூத்திரங்கள். இந்த சூத்திரங்களைக் கூறும் சாஸ்திரங்கள், இவைகள் ஜாதியையும் தீண்டாமையையும் வலியுறுத்துவதால், தீண்டப்படாத மக்கள் ஏற்க முடியாது; மற்றொன்று – வழிபாட்டு முறைகளைப் பற்றியது. ஏனைய இந்துக்களைப் போலவே – தீண்டப்படாத மக்களும் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களை வணங்கும்போது, அவர்களும் இந்துக்களாகி விடுகிறார்களே என்று வாதிடப்படுகிறது. இரு பிரிவினரின் வழிபாட்டு முறை ஒன்றாக இருப்பதாலேயே இருபிரிவினரின் மதமும் ஒரே மதம் – பொது மதம்...

‘தமிழ் இந்து’ அம்பலப்படுத்துகிறது தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணி

‘தமிழ் இந்து’ அம்பலப்படுத்துகிறது தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணி

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தி யுள்ள வேட்பாளர் தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணியை சுட்டிக்காட்டி அவரை மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அந்த வேட்பாளரின் குற்றப் பின்னணியையும், கம்யூனிஸ்ட்  கட்சி அவரை வேட் பாளராக்கியதையும் விமர்சித்து, ‘தமிழ் இந்து’ நாளேட்டில் (எப்.25) சம்ஸ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி: தருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்தர். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக் கொண்டிருப்பவர் ராமச்சந்திரன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப்...

அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

தமிழகத்தில் கழகத்தினர் பல்வேறு ஊர்களில் அம்பேத்கர் பிறந்த நாளில் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்றனர் . களத்தூரில் : 14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சி யோடு நடத்தப்பட்டது. ஜாதி ஒழிப்புப் போரில் உயிர்நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் நன்றி கூறினார். களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள். மன்னையில் : திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின்...

பவானியில் எழுச்சியுடன் நடந்த ‘பெரியாரியல் பயிலரங்கம்’

பவானியில் எழுச்சியுடன் நடந்த ‘பெரியாரியல் பயிலரங்கம்’

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 2 நாள் பயிலரங்கம் பவானியில் தோப்பு துரைசாமி தோட்டத்தில் நடை பெற்றது. 17.04.2016 (ஞாயிறு) மற்றும் 18.04.2016 (திங்கள்) – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிலரங்கில் பல்வேறு தலைப்பு களில் தோழர்கள் வகுப்புகளை எடுத்தனர். முதல் நாள் நிகழ்வு 17.04.2016 அன்று காலை துவங்கியது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். காலையில் “பெரியாரியல் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மதியம் “இந்துத்துவா” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பெடுத்தனர். இரண்டாம் நாள் நிகழ்வு 18.04.2016 அன்று காலை துவங்கியது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி  தலைமை தாங்கினார். சாமிநாதன் நிகழ்வை ஒருங் கிணைத்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, “போக்குவரத்து விதிமுறைகள்” எனும்...

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா?

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா?

கோயில்களைக் கட்டி காசு வசூல் செய்யும் நபர்கள் எப்போதும் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும்தான் கட்டுகிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியம். சாலைகளில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணம் சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டடங்களேயாகும். ஆகவே, சாலைகளில் திடீரென்று ஆங்காங்கே முளைத்துள்ள கோவில்களை இடிக்க வேண்டும் என்று கூறி குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத கோயில்களை இடிக்க உத்தரவிட்டனர். கோயில்களை இடித்தால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கூறி கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்யுமாறு அகமதாபாத் நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்ற நீதிபதிகள் கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்தனர். அந்த இரத்து உத்தரவை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு அமைப்புகள்...

கள்ளழகரின் கதை

கள்ளழகரின் கதை

மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா குறித்து ஏடுகள் வெளியிடும் செய்திகள், கடவுள் நம்பிக்கை மோசடிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்தத் திருவிழாவுக்காக மட்டுமே வைகை ஆற்றில் தண்ணீர் 2 நாள் மட்டும் திறந்து விடப்படு கிறது. அதிகாலையில் கள்ளழகர் ‘திருமஞ்சனம்’, அதாவது திருமணம் செய்து கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த கூத்து.  அழகர் தங்கப் பல்லக்கில் வந்தார்; பிறகு தங்கக் குதிரைக்கு தாவினார்; தனது பக்தை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சூடிக் கொண்டார்; பிறகு பச்சைப் பட்டாடை உடுத்திக் கொண்டார்; அதன் பிறகு ஆற்றில் இறங்கினார் – இப்படி ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன. பக்தர்கள் எல்லாவற்றையும் நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக் கிறார்கள். உண்மையிலேயே அழகர் தானாக பல்லக்கில் அமர்ந்தாரா? தானாக குதிரைக்குத் தாவினாரா? தானாக பச்சை பட்டாடை உடுத்திக் கொண்டாரா? அனைத்தையும் செய்வது அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான்! ஆனாலும் இப்படி ஒரு கற்பனையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அழகர் ஆற்றில்...

நேரு பல்கலைக் கழகத்தில்  தீட்டு கழிக்கும் சடங்காம்!

நேரு பல்கலைக் கழகத்தில் தீட்டு கழிக்கும் சடங்காம்!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் பெண்களும் தடையின்றி நுழைய முடிந்தது. தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்று திரும்பியபோது நிகழ்த்திய உரையிலும் இதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் மாணவிகளுக்கு 5 புள்ளிகள் மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோருக்கு 10 புள்ளிகள் மதிப்பெண்ணும் சலுகைகளாக வழங்கப்பட்டு வந்ததை பல்கலைக் கழக நிர்வாகம் திடீரென இரத்து செய்துவிட்டது. இதற்கிடையே கன்யாகுமாரும், மாணவர்களும் ‘தேச விரோத’ செயலில் ஈடுபட்டார்கள் என்றும், அதனால் பல்கலைக்கழகம் தீட்டாகிவிட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள்,  பார்ப்பன புரோகிதர்களை வைத்து தீட்டு கழிக்கும் சடங்குகளை ‘ராம நவமி’ அன்று நடத்தியுள்ளனர்.   பெரியார் முழக்கம் 21042016 இதழ்

தமிழ் மொழியில் ஊடுருவி நிற்கும் ஆண் ஆதிக்கம்

தமிழ் மொழியில் ஊடுருவி நிற்கும் ஆண் ஆதிக்கம்

தமிழ் இலக்கியங்கள் மீது பெரியார் வைத்த விமர்சனங்களுக்கான காரணங் களில் ஒன்று அதில் அடங்கியுள்ள ஆணாதிக்க கருத்துகள் தான், பெண் களுக்கு ‘விதவை’ என்ற சொல் லிருக்கும் போது ஆண்களுக்கு ‘விதவன்’ என்ற சொல் ஏன் இல்லை என்று கேட்டார் பெரியார். தமிழ் மொழி சொற்கள் பயன்பாட்டில் ஆண் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டுகிறது இந்தக் கட்டுரை. ‘கவிஞன் என்பவன்’, ‘எழுத்தாளன் என்பவன்’, ‘நடிகன் என்பவன்’, ‘உழைப்பாளி என்பவன்’, ‘புரட்சி யாளன் என்பவன்’ என்றெல்லாம் தொடங்கும் ஏராளமான வாக்கியங் களை நமது அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் தினசரி நாம் எதிர்கொண்டுவருகிறோம். இந்த வாக்கியங்களை ஒரு பெண் படிக்கும் போது அவருக்கு என்ன தோன்றும்? ‘ஓஹோ, கவிதை, எழுத்து, நடிப்பு, உழைப்பு, புரட்சி என்று அனைத்தும் ஆண்களால்தான் செய்யப்படு கின்றனவோ?’ என்ற கேள்விதானே எழும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த வாக்கியங்களைவிட அதிகமாக நாம் தினசரி எதிர்கொள்வது, ‘மனிதன் என்பவன்’, ‘மனிதன் இருக்கின்றானே’ ரீதியிலான...

துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஜாதி ஆணவப் படுகொலை: உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்

துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஜாதி ஆணவப் படுகொலை: உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்

ஜாதி ஆணவப் படுகொலைகளில் சமூகத்தில் நிலவும் ஜாதிவெறிக்கு அரசு நிர்வாகமும் காவல்துறையும் துணை போவதை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உடுமலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக சங்கர் என்ற தலித் பொறியாளரை ஜாதி வெறியர்கள் படுகொலை செய்தனர். முன்கூட்டியே காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டும்கூட காவல்துறை அலட்சியம் காட்டியது. எனவே ‘ஆதித்தன்’ வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை யில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இது குறித்து மேலும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைத் திரட்டி விரிவான மனுவை தேர்தல் முடிந்த பிறகு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டதற்கு இணங்க மனு திரும்பப் பெறப்பட்டது. இப்போது கழக சார்பில் முன் வைத்த கோரிக்கைகளை வேறு ஒரு ஜாதி ஆணவப் படுகொலை வழக்கில்...

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. அம்பேத்கர் – இந்துத்துவக் கொள்கையின் தீவிர ஆதரவாளர் என்று நிலைநிறுத்த சங்பரிவாரங்கள் துடிக்கின்றன. இதற்காக வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் வழிபடக் கூடிய தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரையும் இணைத்துக்  கொண்டிருப் பதாக கூறுகிறார்கள். இன்னும் சில காலம் கழித்து காந்தியையும் ஆர்.எஸ்.எஸ். வழிபாட்டுத் தலைவர் பட்டியலில் இடம் பெற்றாலும் வியப்பதற்கு இல்லை. அருண்ஷோரி என்ற ஒருவர் வாஜ்பாய் அமைச்சரவை யில் இருந்தார். அரசு பொதுத் துறை பங்குகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்காகவே நியமிக்கப்பட்ட அமைச்சர். அவர், ‘அம்பேத்கர் – பிரிட்டிஷ் ஆதரவாளர், பிரிட்டிஷ் உளவாளி’ என்று ஒரு ‘ஆராய்ச்சி’ நூலையே எழுதினார். பா.ஜ.க. – சங்பரிவாரங்கள் –  அந்த நூலைத் தலையில் தூக்கி வைத்து ஆடின. இப்போது தமிழக பா.ஜ.க., அம்பேத்கருக்கு சொந்தம்...

இந்திய அரசே! உச்சநீதிமன்றமே! நுழைவுத் தேர்வை திணிக்காதே! மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிடாதே!

இந்திய அரசே! உச்சநீதிமன்றமே! நுழைவுத் தேர்வை திணிக்காதே! மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிடாதே!

கல்வி அந்தந்த மாநிலங்களுக்கான பிரச்சினை; இதில் அவ்வப்போது மத்திய அரசு தலையிடுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? 1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் அன்றைய காங்கிரஸ் ஆட்சி கல்வியின் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடலாம் என்று பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டதுதான். அதன் காரணமாக தமிழ்நாட்டில் இனி மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர வேண்டுமானால் ‘பிளஸ் டூ’ மதிப்பெண் மட்டும் போதாது; அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்றை எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. இதை உச்சநீதிமன்றமும் வலியுறுத்திவிட்டது. நுழைவுத் தேர்வு கிராமத்திலிருந்து படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் தடை என்பதால் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டது. இப்போது அந்த சுமை மேலும் ஏற்றப்பட்டுவிட்டது. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கல்வி அமைப்பு முறைகள் இருக்கும் போது அனைத்து மாநிலங் களுக்கும் ஒரே மாதிரியான அகில இந்திய தேர்வு முறையை நுழைப்பது...

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

நியூயார்க்கில் அய்.நா.வின் தலைமையகத்தில் ஏப்.13 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகம், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தது. “ஏற்றத்தாழ்வு களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் முன்னெடுப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து அம்பேத்கரின் பிறந்த நாளுக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும் அய்.நா.வின் வளர்ச்சித்திட்ட அதிகாரி யுமான ஹெலன் கிளார்க், கருத்தரங்கில், ‘அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளம்’ என்று பேசியிருப்பது அம்பேத்கரின் சமூக விடுதலை இலட்சியத்துக்கு சூட்டப்பட்ட மணிமகுடமாகும். ஹெலன், அய்.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளமாக அம்பேத்கர் உயர்ந்து நின்றாலும், அவர் வாழ்ந்து உழைத்துப் போராடிய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை கவலையுடன் எழுப்ப வேண்டியிருக்கிறது.  2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுதும் ஏழ்மை,...

நடைபாதை கோயில்கள் கடவுளை அவமதிப்பதாகும்: உச்சநீதிமன்றம் கண்டனம்

நடைபாதை கோயில்கள் கடவுளை அவமதிப்பதாகும்: உச்சநீதிமன்றம் கண்டனம்

“நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக கோயில்களை கட்டுவது, கடவுளையே அவமதிப்பதாகும். பொது மக்கள் பாதையை முடக்குவதற்கு கடவுள் ஒரு போதும் விரும்ப மாட்டார்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டு நடைபாதைக் கோயில்களை அகற்றக் கோரும் பொது நலன் வழக்கில் மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ‘சம்மன்’ அனுப்ப உச்சநீதிமன்றம் முடிவு செய்தபோது, மாநில அரசு வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய நிலையில் உச்சநீதி மன்றம் ‘சம்மன்’ அனுப்புவதை தவிர்த்தது. அதே 2006ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தில் கட்டப்பட்ட அனைத்து சட்டவிரோத நடை பாதை கோயில்களையும் இடித்துத் தள்ள மாநகராட்சிகளுக்கு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய பா.ஜ.க. ஆட்சி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் மீண்டும் கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளது. இரண்டு வாரத்துக்குள் நடைபாதை...

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு; இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள்

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு; இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதர தொகுதிகளில் தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது. 19.4.2016 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி தோட்டத்தில் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் கூடியது. தலைமைக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத அளவில் குழப்பங்களும் முரண்பாடுகளும் மேலோங்கியிருக்கின்றன. ஆட்சி அதிகாரத்திற்காக பல்வேறு கட்சிகள் தனித் தனியாக களத்துக்கு வந்துள்ளன. கொள்கைப் பார்வையோடு எந்த ஒரு அணியையும் முழுமையாக அடையாளம் காண முடியாத அரசியல் சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம் இரு கண்ணோட்டங்களில் இந்தத் தேர்தலை அணுகிட முடிவு...

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு (1)

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு (1)

புரட்சியாளர் அம்பேத்கரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக சித்தரிக்கும் நூல் ஒன்று இந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது. நூலாசிரியர் ம.வெங்கடேசன். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்ட இந்த நூலில் அடங்கியுள்ள வரலாற்றுப் புரட்டுகளுக்கு இது ஒரு மறுப்பு. பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோரை அம்பேத்கரே ‘இந்து’ மதத்துக்குள் உள்ளடக்கியிருக்கிறார். அனைவரையும் இந்துக்களாக அடையாளப்படுத்திய அம்பேத்கர், எப்படி ‘இந்து’ எதிர்ப்பாளராக இருப்பார்? – இப்படி ஒரு வாதம். நமது பதில் : ‘இந்து’ என்ற பெயரைத் தந்து அவர்களுக்கான மத சட்டங்களை உருவாக்கியதே பிரிட்டிஷ்காரர்கள் தான். அம்பேத்கர் அல்ல. சற்று வரலாற்றைப் பார்ப்போமா? கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவிலுள்ள மக்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் என்றே பிரிக்கப் பட்டனர். இந்தியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொதுவான சட்டங் களை இங்கிலாந்திலுள்ளதைப் போல் உருவாக்க பிரிட்டிஷார் நினைத்தனர். முஸ்லிம் அல்லாத அனைவரையும் ‘இந்து’க்கள் என்றாக்கி, அவர்களுக்கான சட்டங்களை உருவாக்க முயன்ற போது அதற்கான அடிப்படை...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து ‘விடுதலை’ ஏட்டில வந்த செய்திகள்: பிரகாசம் – வாஞ்சு சந்திப்பு 100 நிமிடம் பேச்சு: பல்வேறு தரப்பினரும் நீதிபதி வாஞ்சுவிடம் தம் கோரிக்கைகளை முன் வைத்தனர். தோழர் டி. பிரகாசம் நேற்று நீதிபதி வாஞ்சுவைக் கண்டு சுமார் 100 நிமிட நேரம் ஆந்திரப் பிரிவினைப் பிரச்சனைகளைக் குறித்துத் தமது கோரிக்கைகளை வெளியிட்டதாகவும் சென்னையில் இரு இராஜ்ஜியங்களின் தலைநகரங்களும் இருக்க வேண்டு மென்று வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. (விடுதலை 11.01.1953) கம்யூனிஸ்டுகள் சந்திப்பு: ஆந்திரக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குழுவினர்களாகிய தோழர்கள் டி. நாகி ரெட்டி, சி. ராஜேஸ்வரராவ், பி. வெங்கடேசுவரலு, ஓய். ஈஸ்வராரெட்டி, ஓய்.வி. கிருஷ்ணாராவ் ஆகியவர்கள்  நீதிபதி வாஞ்சுவை நேற்று பிற்பகல் கண்டு ஒரு மணி நேரம் வரை விவாதித்தனர். பொது...

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

இந்து பார்ப்பனிய மதத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். “இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று அறிவித்த அவரை ‘இந்துத்துவ’ ஆதரவாளராக சித்தரிக்க சங் பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ‘இந்து’ மதம் ஒரு மதமல்ல; அது ஒரு சமூகமும் அல்ல; இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்பு என்கிறார் அம்பேத்கர். பொருளாதாரச் சார்பாகப் பார்த்தாலும், ஜாதி நன்மை தரக்கூடியதல்ல. ஜாதி ஏற்பாட்டினால் மக்கள் சமூகம் விருத்தியடைய முடியாது; விருத்தியடையவு மில்லை. எனினும் ஜாதியினால் ஒரு பலன் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜாதி, இந்து சமூகத்தைச் சின்னாபின்னமாக்கிச் சீரழித்து விட்டது. இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதன்முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்தியச் சுதேசிகளையும் பிரித்துக் காட்டும் பொருட்டு முகம்மதியர் இந்தியச் சுதேசிகளை இந்துக்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே...

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை  திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ‘வைகோ’ சென்னையில் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர் பிறந்த ‘ஜாதி’யை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன. ‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன் மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரை சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, “தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக்...

கர்ப்பகிரக நுழைவு உரிமையை வென்றெடுத்தனர் மராட்டிய பெண்களின் புரட்சி

கர்ப்பகிரக நுழைவு உரிமையை வென்றெடுத்தனர் மராட்டிய பெண்களின் புரட்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சிங்னாபூர் எனும் ஊரில் சனி பகவான் கோயிலின் கர்ப்பகிரகத்தில் நுழையும் உரிமையைப் பெண்கள் போராடி பெற்றுள்ளனர். இது மகத்தான வெற்றி. கோயில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதை மறுத்து ‘பூமாதா பெண்கள் படை’ என்ற போராட்ட அமைப்பை பெண்கள் உருவாக்கினார்கள். துருப்தி தேசாய் என்பவர் தலைமையில் 3 மாத காலமாக பெண்கள் போராடினார்கள். பம்பாய் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். கோயில் நுழைவு பெண் களின் அடிப்படை உரிமை என்றும், ஆண் களுக்கு உள்ள அத்தனை உரிமையும் பெண் களுக்கும் உண்டு என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகம், கர்ப்ப கிரகத்துக்குள் இனி ஆண்களுக்கும்  அனுமதி இல்லை என்று அறிவித்தது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நோக்கத்தையே திசை திருப்பிய இந்த முடிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டி யிருக்கும் என்று அஞ்சிய கோயில் நிர்வாகம், பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு, பெண்களை...