Tagged: முகநூல்

முகநூல் தோழர்கள் நடத்திய பயிற்சி வகுப்பு

முகநூல் தோழர்கள் நடத்திய பயிற்சி வகுப்பு

முகநூலால் இணைந்த பெரியாரியல் தோழர்கள் முகநூலையும் தாண்டிய களப்பணிக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாய் ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தில் 9-7-2016, 10-7-2016 இரண்டுநாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்தியனர். தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், பேராசிரியர் நடராஜன் வகுப்புகளை எடுத்தனர். கோபால் இராமகிருஷ்னன், இரா. செந்தில் குமார் (குனுடு), வைரவேல், ஆனந்த் பொள்ளாச்சி, அருள்குமார், சோமசுந்தரம், அருள் நாராயணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பகுத்தறிவாளர் பாசறை பெரியாரியலை கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு. பெரியார் முழக்கம் 22072016 இதழ்

ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூரில் புகார்

முகநூலில் ஜாதிவெறிப் படுகொலைகளுக்கு ஆதரவாகவும் மேலும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவுகளை செய்து ஜாதி கலவரங்களை  தூண்டும் ஜாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தலைமையில் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி,தோழர் அகிலன்,தோழர் தனபால் உள்ளிட்ட தோழர்கள் திருப்பூர் மாவட்ட இணையதள குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு திவிக சார்பில் மனு

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு ! சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ்,லாரியை எற்றிக் கொலை செய்வோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.. மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29.02.2016 அன்று ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளார்கள் குமார்,சென்னிமலை செல்வராசு,மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார்,மோகன்ராஜ்,விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தோழர்.தமிழின்பன் ஆகியோர் மனு அளித்தனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்