Tagged: பூணூல்

தமிழன் விழா பொங்கல்

தமிழன் விழா பொங்கல்

பூணூல் “பூணூல் போடுவதற்குச் சர்க்காரில் (அரசில்) லீவு (விடுமுறை) விடுகிறானே! பார்ப்பான் நாட்டில் இருப்பது 100-க்கு 3- பேர். அவர்களின் பூணூல் மாட்டுவது அநேகமாக ஒருவர் அல்லது இருவர். அந்த இனப்பெண்கள் எல்லாரையும் கழித்துப் பார்த்தால் இதற்காக எதுக்கு அத்தனை பேர்களுக்கும் விடுமுறை. இது அக்கிரமம் அல்லவா? அரசாங்கம் இப்படி இருக்கலாமா? என்று எங்களைத் தவிர யாரும் கேட்பதில்லையே? ஆனால் இதைக் கேட்காதவர்கள் கேட்க நடுங்குகிறவன் எல்லாரும் மக்களிடத்திலே வந்து அளக்கிறான்கள். சட்டசபையிலே பிளக்கிறேன் என்கிறார்கள்! நாங்கள் மந்திரிகளுடைய மூக்கிலே, நாக்கிலே விரலை விட்டு ஆட்டுகிறோம் என்கிறார்கள்! இது ஏன் என்று கேட்க ஒரு பயல் முன்வருவது கிடையாதே? ஓட்டு கேட்க மாத்திரம் வருவார்கள்.” – மஞ்சை நாயக்கன் பட்டியில் 14-10-1958 அன்று பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. விடுதலை 19.10.1958   மத விடுமுறை “மற்றபடி சர்க்காரார் விடுமுறை நாட்களில் “மத சம்பந்தமான லீவு நாட்கள் நீக்கப்பட வேண்டும்” என்று மற்றொரு தீர்மானம்...

பூணூல் அறுப்பு வழக்கு,தோழர்கள் பிணையில் விடுதலை !

சென்னை மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்பனர்களின் பூணூல்களை அறுத்தாக கூறி 20.04.2015 அன்று ராவணன்,கோபி என்கிற கோபிநாத்,திவாகர்,நந்த குமார்,பிரவீன், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று (08.10.2015) அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இன்று(09.10.2015) காலை தோழர்கள் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். இந்த வழக்கில் கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை.அருண் ஆகியோர் நீதி மன்றத்தில் ஆஜராகினர்.