Tagged: பணமதிப்பொழிப்பு

நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி

நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படு தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் காதொடிந்த ஊசி நன்மைக்கூட ஏற்படவில்லை என்பது மட்டு மல்ல; மிக மோசமான கேடு களையும் உருவாக்கியிருக் கிறது. இது குறித்து நாடாளு மன்றக் குழுவின் அறிக்கை தயாராகிவிட்டது. எதிர் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளு மன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பே அறிக்கையின் முக்கிய பகுதிகளை ‘டெகல்கா.காம்’ இணைய இதழ் வெளியிட்டு விட்டது. அதன் முக்கிய பகுதிகள் : மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரும் தவறு; அந்த நோக்கத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. ரூ.1000, 5000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் 5-லிருந்து 7 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளியே வந்து விடும் என்று மோடி அறிவித்தார். ஆனால் ரூ.4,172 கோடி அளவிலான பணம் தான் கறுப்புப் பணம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு கண்டறியப்பட்டிருக் கிறது என்று நிதியமைச்சகமே ஒப்புக்...

மோடியின் செல்லாத அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்

தலைமை அமைச்சர் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இரு வாரங்கள் ஆன பின்பும் நிலைமை சீராகாமல் சாமானியர்கள் திண்டாடி தெருவில் நிற்கும் அவலம் தொடர்கிறது. இந்த நடவடிக்கையால் சாமானியர்கள் படும்பாடு வீணாகாதாம். அவர்களது தியாகங்களுக்கு பயன் இருக்குமாம். பெரும் நிலப் பிரபுக்களும் செல்வந்தர்களும் தலைமை அமைச்சர் மீது கோபமாகஇருக்கிறார்களாம்.நாட்டின்வளர்ச்சி பெருகுமாம். கள்ளப் பணம் / கறுப்புப் பணம் ஒழிவதால் ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெறுமாம். இவை யாவும் இந்த ‘செல்லாத’ அறிவிப்பினை வெளியிட்ட தலைமை அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் முன்வைக்கும் விவாதங்கள். இந்த விவாதங்களில் உண்மை உள்ளதா? ஏழைகள் பயன் பெறுவார்களா? பெரும் செல்வந்தர்கள் துயரப்படுவார்களா? உண்மை நிலவரம் என்ன? இன்று வெளிவந்துள்ள ஒரு அறிக்கை இந்த வாதங்களின் அடிப்படையில்லா பொய்மையை நிறுவுகிறது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் ஒரு விழுக்காட்டினரிடம்தான் நாட்டின் 58.4% செல்வம் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு கண்டடைந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின்...

மோடி அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா? பேராசிரியர் ஜெயரஞ்சன்

சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம் வாயிலாக வெளியேறுகிறது கறுப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Driver and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கறுப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படு வதாக நிறுவுகிறார். மீதமுள்ள கறுப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படு கிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப்...

‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன?

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. இந்த அறிவிப்பு வரப்போகிறது என்ற தகவல் முன்கூட்டியே கசிந்திருக்கிறது என்றும், அதன் காரணமாகவே மோடி அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கல்கத்தாவில் பா.ஜ.க. 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒரு வங்கியில் ரூ.1 கோடிக்கு டெபாசிட் செய்ததையும் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார். மேற்கு வங்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங், இந்த அறிவிப்பு வரப்போகும் தகவல் முன்கூட்டியே அம்பானி, அதானி தொழில் நிறுவனங்களுக்கு தரப்பட்டள்ளது என்று பேட்டி அளித்திருக்கிறார். கடந்த 3 மாதங்களாக வங்கிகளில் செலுத்தப்பட்ட ‘டெப்பாசிட்’ தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சந்தேக சூழலில் மோடி மீதே கருப்புப் பண குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கின்றன. மோடி மீதான கருப்புப் பண குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள்...

‘சொர்க்கம்’ போக ‘ரொக்கம்’ செல்லாது!

நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ‘பகவான்’ களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டது. கோயில் உண்டியல் காணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாம்! அவ்வள வும் 500, 1000 நோட்டுகளாம். திருப்பதி, பழனி, திரு வரங்கம், திருத்தணி கோயில் களில் உண்டியல் நவீன மய மாக்கப்பட்டுள்ளது, அதற்குப் பெயர் ‘ஈ உண்டியல்’. இனி பக்தர்கள் ரொக்கமாக காணிக்கை செலுத்த முடியாது. டெபிட், கிரடிட் கார்டுகள் வழியாகவே ‘பகவானுக்கு’ காணிக்கை  செலுத்த முடியும். உண்டியல் காணிக்கை வங்கிக் கணக்குக்கு மாற்றப் பட்டு, பிறகு வங்கியிலிருந்து ‘பகவானுக்கு’ போய்ச் சேரும் போலும். ‘ரொக்கம்’ இல்லாத பணமாற்றத்துக்கு கடவுள்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். சிவன், பெருமாள் உள்ளிட்ட அனைத்து கடவுள் களையும் கறுப்புப் பணத்தையோ, செல்லாத நோட்டுகளையோ போட்டு பக்தர்கள் இனியும் ஏமாற்ற முடியாது. “கடவுளுக்கே இப்படி கருப்புப் பணத்தை காணிக்கை யாக்குகிறோமே இது தெய்வக் குற்றமாகிவிடுமே” என்ற அச்சம், பயம் எல்லாம் பறந்து போய் வெகு நாளாச்சு! இது குறித்து முகநூலில்...

மக்களுக்காக உண்டியலை திறந்து விட்ட பாதிரியார்!

மக்களுக்காக உண்டியலை திறந்து விட்ட பாதிரியார்!

நாடு இப்போது இருக்கும்  இக்கட்டான இந்த  சூழலில் … இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை , ஒரு சர்ச் பாதிரியார் வெளியிடுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது! கொச்சி அருகே காக்கநாடு பூக்காடுபடியில் உள்ள மார்ட்டின் டி போரஸ் கிறிஸ்தவ  தேவாலயத்தில் நடந்த சம்பவம் இது. அந்த சர்ச்சின்  பாதிரியார்தான், இந்த  அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கடந்த ஞாயிறு காலை பிரார்த்தனை முடிந்த  பின்,  சற்று நேரம் அமைதியாக இருந்த  அந்த சர்ச் பாதிரியார், சர்ச்சில் கூடி இருந்த மக்களை உற்று நோக்கினார். அவர்கள் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த கவலையை அவர் கண்கள் கண்டு கொண்டன. “அன்பானவர்களே…  நமது தேவாலயத்தின் உண்டியல் இன்று பிற்பகலுக்கு பின் திறக்கப்படும்.” பாதிரியார் இப்படி சொன்னவுடன், மக்கள் கொஞ்சம் திகைத்துப் போனார்கள். தொடர்ந்தார் பாதிரியார் : “பணம் தேவைப்படுபவர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப உண்டியலில்  இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.. நீங்கள் எடுத்த பணத்தை உங்களுக்கு...