Tagged: தேசியப் பாதுகாப்புச் சட்டம்

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும் என முக்கியக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் இராமதா°, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ராமதா° : “நாட்டின் பாதுகாப்புக்காக அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணியை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து பா.ம.க. தொண்டர்கள் 134 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு 4 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது மற்ற அரசியல் கட்சிகள் இதனைக் கண்டித்திருந்தால் இப்போது கொளத்தூர் மணி மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்காது. தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். உடனடியாக கொளத்தூர்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

சேலம் வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் சாக்குகளில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை நனைத்து கொளுத்தி வீசிய குற்றச்சாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கிருஷ்ணன், அருண்குமார், அம்பிகாபதி ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இதே வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் காவல்துறை இணைத்து கைது செய்தது. 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்துடன் அனைவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ), 120(பி), 307, 285 உடன் தமிழ்நாடு பொதுச் சொத்து பாதிப்புச் சட்டப் பிரிவு 3(1), 1908 ஆம்ஆண்டின் எரிபொருளால் ஆபத்து களை உண்டாக்கக்கூடிய சட்டத்தின் பிரிவு 3, ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோர் அயராது செயலாற்றுகின்றனர். சென்னையில் மயிலை, மந்தைவெளி அஞ்சலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச் சாட்டில்  கைது...

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி யிலுள்ள தபால் நிலையங்களைத் தாக்கியதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் உமாபதி, மயிலைப் பகுதித் தோழர்கள் இராவணன், மனோகரன், மாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120(பி) (குற்றவியல் சதி) மற்றும் பிரிவு 285 (அலட்சியமாக தீப் பொருளை கையாளுதல்) மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுச் சொத்தை சேதப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்த நாள் கொலை முயற்சி என்ற மற்றொரு குற்றப் பிரிவு சேர்க்கப்பட்டது. வெள்ளிக் கிழமை மாநகர ஆணையர் ஆணையின் கீழ் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இதே கோரிக்கைக்காக சேலம் வருமானவரி அலுவலக வளாகத்தில் சாக்குப் பையில் கெரசினை நனைத்து வீசினார்கள்...

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு மனுக்கள் தயாரிப்புப் பணிகள் முடிந்துள்ளன. தமிழ்நாடு அறிவுரைக் குழுமம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உள்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட் டுள்ளன. உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் நவம்பர் 25 அன்று தாக்கல் செய்யப் பட்டது. கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் உடனிருந்து உதவி வருகிறார். காவல்துறையினரால் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட தபசி. குமரன், சேலம் டேவிட், சென்னை ஜான் ஆகிய தோழர் களுக்கு முன் பிணையை ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ளது. தோழர் கொளத்தூர் மணியை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள். பெரியார் முழக்கம்...

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்கள் கிருட்டிணன், அருள்குமார், அம்பிகாபதி ஆகியோர், கடந்த 17.12.2013 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் அறிவுரைக் குழுமம் முன் நேர் நிறுத்தப்பட்டனர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலுள்ள அறிவுரைக் குழுமத்துக்கு தோழர்கள் வருவதை அறிந்த கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். தோழர்களை சந்திக்க காவல்துறை செய்த கெடுபிடி காரணமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பதட்டம் நிலவியது. தோழர் கொளத்தூர் மணி சார்பில் விடுதலை இராசேந்திரனும், ஏனைய தோழர்களுக்கு பொருளாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், குழுமத்தின் முன் வாதிட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுமார் 45 நிமிடங்கள் இந்த வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதை காவல் துறை சாட்சி யங்கள், தேசியப் பாதுகாப்புச் சட்...

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 சனிக் கிழமை மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், கழகத் தலைவரை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யக் கோரியும் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் ச. பெரியார் வெங்கட் தலைமை தாங்கினார். செ. நாவாப்பிள்ளை, கா. இராமர், ந. அய்யனார் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கண்டித்தும் எந்தவித நிபந்தனையு மின்றி கழகத் தலைவரை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும்,  சங்கராபுரம் நகரத்தில் ஜாதிப் பெயர்களை தூக்கிப் பிடிக்கும் வணிகம் மற்றும் தொழிற் சாலைகள் உடனடியாக தங்கள் கடைகளிலுள்ள ஜாதிப் பெயரை அகற்றி, சமூக மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்றும், ஜாதி...

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், அவர் மீதும் கழகத் தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கக் கோரியும் ம.தி.மு.க. சார்பில் 7.12.2013 மாலை புரசைவாக்கம் ‘தானா’ வீதியில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் ஜீவா தலைமையில் நடந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்தின், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், த.தே.பொ.க. சார்பில் அருண் பாரதி, கரும்பு விவசாயிகள் கழகத்தின் சார்பில் பொன்னையன், நாகை தருமன், ஈட்டிமுனை இளமாறன் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர். மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் நடந்தது. மேடையின் பின்புறத்தில் தோழர் கொளத்தூர் மணி, சிறைக் கம்பிகளுக்குள் அடைபட்டிருப்பதுபோல் வண்ணப் பதாகை நிறுவப்பட்டிருந்தது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேயை ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நேரில் சந்தித்து, கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும்...

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் 2013 டிசம்பர் 9 ஆம் தேதி அறிவுரைக் குழுமத்தின் முன் பிற்பகல் 3 மணி யளவில் நேர்நிறுத்தப்பட்டனர். உமாபதி, இராவணன் ஆகியோருக்காக பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரனும், மாரிமுத்து, மனோகரனுக்காக மருத்துவர் எழிலனும் வாதுரைத்தனர். விடுதலை இராசேந்திரன் நீதிபதிகள் முன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “நாட்டின் பாதுகாப்புக்கு, பொது ஒழுங்குக்கு, சமுதாயத்துக்கு இன்றியமையாத பொருள்களை வழங்குதலுக்கு, அதற்கு சேவை ஆற்றுவதற்கு எதிராக பாதிப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும். அத்தகைய எந்தக் குற்றமும் சாட்டப்படாத நிலையில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இந்த வழக்கில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி யதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குகளில் பிணை வழங்கப்படவில்லை. பிணை வழங்கு வதை நீதிமன்றம் நிலுவையில் வைத்துள்ளது. ஆனால்,...

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்  தோழர்கள் அருண்குமார், அம்பிகாபதி, கிருட்டிணன் ஆகியோர் மீது தமிழக அரசு பொய்யாக போட்டிருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் 13.2.2014 அன்று ரத்து செய்தது. இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற நீதிதிகள் இராஜேசுவரன், பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் பிப்.12 ஆம் தேதி வந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார். அவர் தனது வாதத்தில், “பொது ஒழுங்கு சீர்குலைவு நடக்கும்போது மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்த வழக்கில் அப்படி எந்த சீர்குலைவும் நடைபெறாதபோது சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு; பொது ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு. காவல்துறையின் குற்றச்சாட்டில்கூட பொது ஒழுங்கு சீர்குலைந்திருக் கிறது என்ற எந்தக் குறிப்பும் இல்லை. குற்றம் சாட்டப்...