Tagged: தீபாவளி

“தீபாவளி புனிதமா ? வணிகமா?” சென்னையில் தோழர்கள் துண்டறிக்கை விநியோகம்

விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள், மாணவியர்கள், தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கை களை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா. உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

ஓணம் – தீபாவளி ஒப்பிட்டு சிந்தியுங்கள்!

பார்ப்பனர்கள் ‘தேவர்’கள், அவர்கள் கொடுங்கோன்மையை எதிர்த்தவர்கள் ‘அசுரர்’கள் – இப்படித்தான் புராணங்களுக்கு பார்ப்பனர்கள் கற்பனை வடிவம் கொடுத்தார்கள். ‘தேவ-அசுர’ப் போராட்டம் என்பது ஆரியர்-திராவிடர் போராட்டம் தான். தீபாவளி – திராவிடன் ‘நரகாசுரன்’ என்ற அசுரனை ‘மகாவிஷ்ணு’ எனும் பார்ப்பன அவதாரம் சூழ்ச்சியாக கொன்ற நாள். கொன்ற நாளை கொண்டாடி மகிழச் சொன்னார்கள் பார்ப்பனர்கள். நமது மக்களும் ‘இழிவை’ சுமந்து கொண்டாடுகிறார்கள். ஆனால், கேரள மக்கள் கொண்டாடும் ‘ஓணம்’ – இதற்கு நேர் எதிரானது. ஓணம் ‘மாவலி’ என்ற அசுரனை வரவேற்கும் பண்டிகை. கேரளத்தை ஆண்ட ‘மாவலி’ என்ற திராவிட மன்னன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அதை சகிக்க முடியாத தேவர்களாகிய பார்ப்பனர்கள் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவலியை அழித்தான். எப்படி அழித்தான்? “வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு, மாவலியிடம் மூன்றடி நிலம் வேண்டும் என்று யாசகம் கேட்டான். இதற்குப் பின்னால் அடங்கியுள்ள சதியை புரிந்து கொண்ட மாவலியின் குரு...

தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள் தனமுமான காரியம் என்று 50 ஆண்டு களாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித்தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

‘தீபாவளி’ புனிதமா? வணிகமா?

இந்து மதப் பண்டிகையில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டம் தேவையா? இந்தத் தீபாவளி கதை – தமிழர்களை அழித்தொழித்ததைக் கொண்டாடச் சொல்லும் கதை என்பது ஒன்று. இதையும் தாண்டி இதில் அடங்கியுள்ள கேடுகள் என்ன? உயிருக்கு ஆபத்தான நச்சுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த பிஞ்சுக் கரங்கள் வெந்து, நோய்களை சுமந்து வாழ்க்கையை தொலைக் கின்றன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இல்லை. வெடி விபத்துக்குள்ளாகி, ஆண்-பெண் தொழிலாளர்கள் உயிர்ப்பலி ஆகிறார்கள். வணிக நிறுவனங்கள் இந்தப் பண்டிகையை நுகர்வோர் கலாச்சாரமாக்கி பொருள்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகின்றனர். தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்ன ‘மகாவிஷ்ணு’, தள்ளுபடி விலையில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், 4ஜி அலைபேசிகளை வாங்கச் சொன்னாரா? இது மதத்தின் புனிதமா? வர்த்தகத் தந்திரமா? புரிந்து கொள்ளுங்கள். மதம், வர்த்தக சந்தையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே மதப்பண்டிகை ‘வர்த்தகத் திருவிழா’ என்ற வடிவமெடுத்துள்ளது. இனி ‘நரகாசுரனை’ கொன்ற...

”தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்”

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50-ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும், முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு...

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார். 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத் தினான். 7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகா சூரனுடன் போர் துவங்கினார். 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான். 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!...

தீபாவளி

தீபாவளி

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டு களாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை.  அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மான மில்லா மக்களே  இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

இந்து மதப் பண்டிகைகள்

சொர்க்கவாசல் மகிமை மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச்செலவு செய்து கொண்டு போவதும்,  தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் றீக்கிக் கொண்டு  பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச்  சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்ப தும், வெட்டித் துண்டாக்கப்பட்ட  குழந்தை உயிர்பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்க மில்லாமல், சொல்லுவதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும்  `பஞ்சாமிர்தம்’ எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டது தானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன? சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே,  அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் : நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின்...