Tagged: தஞ்சை திவிக

தோழர் தஞ்சை பசு.கௌதமன் உடல்நலத்தை கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக்கழக தோழர், எழுத்தாளர் தஞ்சை பசு. கௌதமன் அவர்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்காக தந்தை பெரியாரின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு குறித்து பெரியாரின் பதிவுகளை ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”என்கிற தலைப்பில் 5 தொகுதிகள் 6000 பக்கங்கள் அடங்கிய புத்தகத்தை கடந்த சில வருடங்களாக தொகுத்து வந்தார்.தொடர்ச்சியான ஓய்வில்லா எழுத்துபணி காரணமாக உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டுதிருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு கடந்த 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.உடல் நலம் தேறி தற்போது நலமாக உள்ளார்.. இச் செய்தியறிந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர்தோழர். கொளத்தூர்மணி அவர்கள்17.10.2016 அன்று மதியம் தஞ்சையில் உள்ளதோழர் தஞ்சை பசு.கௌதமன் அவர்கள்இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்எழுத்தாளர் தஞ்சை சண்முகசுந்தரம் மற்றும்திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசுமற்றும் கழக தோழர்கள் கோவில்வெண்ணி செந்தமிழன், தஞ்சை காசிம் ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 27102016...

ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி தஞ்சாவூர் உத்மதானி 18102016

தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடரும் ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதிய கட்டமைப்பு ஜாதிய வன்கொடுமைகள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் தம்பதியினரை ஆணவப்படுகொலைகள் செய்வது, இரட்டை சுடுகாடு, இரட்டைக் குவளை முறை போன்ற பல்வேறு வடிவங்களில் விளிம்பு நிலை மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இடைநிலை ஜாதியினரால் இழைக்கப்படும் வன்கொடுமைகள் பார்;ப்பன மதமான இந்து மதத்தில் மலிந்து கிடக்கிறது. ஒரு மனிதனை பிறப்பின் அடிப்படையில் அவனை பல்வேறு ஜாதிகளாக பிரித்து சூத்திரர்களாக, பஞ்சமர்களாக அம்மக்களை சிறுமைப்படுத்தி பார்பனர்கள் தங்கள் மேலாண்மையை காலம் காலமாக கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். பார்;;ப்பனர்களால் வேசிமகன்கள் என இன்றும் இழிவுப்படுத்தப்படும் சூத்திர இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களது சூத்திர இழிவு நிலைக்கு எதிராக போராடாமல், தங்களை இழிவுப்படுத்தும் பார்பனர்களையும், அவர்கள் தூக்கி பிடிக்கும் பார்பன...

”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை”

”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை” – நாச்சியார்கோவிலில் தோழர் கொளத்தூர்மணி பேச்சு. தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர்விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச்சுடரொளி குடந்தைஆர்பிஎஸ்ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது. துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர்நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்;ச்சி நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகபேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார். இறுதியாக, கழகத்தலைவர் தோழர்கொளத்தூர்மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம்...

தமிழர் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பேராவூரணி 20092016

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்  20092016 மாலை 4 மணி இடம்  பேராவூரணி அண்ணா சிலை அருகில்   தலைமை தோழர் சித. திருவேங்கடம், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திவிக கண்டன உரை தோழர் பால் பிரபாகரன் பரப்புரை ச் செயலாளர், தவிக தோழர் ஆறு. நீலகண்டன் கொள்கை பரப்புச் செயலாளர், தமபுக மற்றும் சனநாயக முற்போக்கு இயக்கத் தோழர்கள் தொடர்புக்கு 9865621895 9524428253