Tagged: ஈழத் தமிழர்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று முழக்கத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று மாபெரும் ஆர்ப்பாட்டம் …. உணர்வாளர்களே , தோழர்களே வாருங்கள் … 05032017 மாலை 3 : 00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் 72992 30363

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே! ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே! ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு

2013 டிசம்பர் 7, 8, 9, 10 தேதிகளில் ஜெர்மனியின் ப்ரமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு விசாரணை நடைபெற்றது. சிங்கள அரசு புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறிக் கொண்டு, இலட்சக்கணக்கான தமிழர்களை குழந்தைகள், பெண்கள், ஆயுதம் ஏந்தாத பொது மக்கள் என அனைவரையும் படுகொலை செய்ததால், கொடுந்துயரத்துக்கு ஆளான ஈழத் தமிழர்கள் நேரடி சாட்சியங்களை பிரமாண வாக்குமூலங்கள் மூலம் மக்கள் தீர்ப்பாயத்தில் பதிவு செய்தனர். இனக் கொலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக சட்ட வல்லுநர்கள், களப் பணியாளர்கள், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள் ஆகியோரின் கருத்து களையும் தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன் காந்தியும், உமரும் இது குறித்த அறிக்கையை தீர்ப்பாயத்திடம் தந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், நான்காம் நாளான டிசம்பர் 10 ஆம் தேதி அன்று...

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

அய்.நா.வின் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் இந்தியா தலையிட்டு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். 24-03-2014 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி, சேவ் தமிழ்ஸ் செந்தில், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட 18 இயக்கங்களை...

தலையங்கம்: அய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்

தலையங்கம்: அய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்

அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சர்வதேச தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ளன. மயிலாடுதுறையில் 29.3.2014 அன்று கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவை, இத் தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைவிட மேலும் முன்னேற்றம் கண்டிருப்பதை சுட்டிக்காட்டி, வரவேற்றுள்ளது. 2012-2013 ஆண்டுகளில், அய்.நா. வலியுறுத்திய ‘நம்பகத் தன்மையான விசாரணை’யை நடத்தும் தீர்மானத்தை ராஜபக்சே ஆட்சி முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் இப்போது அய்.நா. மனித உரிமை ஆணையரின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டு வரப்பட்டிருப்பது ஒரு முக்கிய திருப்பம். இதில் இந்தியா மேற்கொண்டுள்ள நிலைப்பாடு தமிழினத்துக்கு இழைத்த துரோகமாகும். மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 நாடுகளில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கிய 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உண்மையில் இந்தியா நடுநிலை...