Tagged: இழந்து வரும் உரிமைகளை மீட்போம்

இழந்து வரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூக நீதி சமத்துவ தெரு முனைக் கூட்டம் சென்னை பரப்புரை பயணக்குழு

23/09/2017   காலை 10.00 மணி   பூந்தமல்லி காலை 11.30 மணி   போரூர் மாலை 03.00 மணி இராமபுரம் மாலை 05.00 மணி  ஆதம்பாக்கம், அம்பேத்கர் சிலை   24/09/2017    காலை 10.00 மணி மேடவாக்கம் காலை 11.30 மணி   பள்ளிக்கரனை மாலை 03.00 மணி   மடிப்பாக்கம் மாலை 05.00 மணி    வேளச்சேரி   25/09/2017  காலை 10.00 மணி    வெட்டுவாங்கேணி காலை 11.30 மணி   பாலவாக்கம் மாலை 03.00 மணி   திருவான்மியூர் குளம் மாலை 05.00 மணி லெட்சுமிபுரம், திருவான்மியூர் (காந்தி சிலை)   26/09/2017    காலை 10.00 மணி அடையாறு (பி.எஸ்.என்.எல் ) காலை 11.30 மணி        டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு மாலை 03.00 மணி    திருவல்லிக்கேணி     வாகன பதிவு எண் TN 48 R 9999  Swaraj Mastha...

திருச்செங்கோட்டில் எழுச்சியூட்டிய பயண நிறைவு விழா மாநாடு

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 6 நாள் பரப்புரைப் பயணம், திருச்செங்கோட்டில் பயண நிறைவு விழா மாநாடாக எழுச்சியுடன் நடந்தது. ஆகஸ்டு 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். மாலை 4 மணியிலிருந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் திருச்செங்கோடு நோக்கி வரத் தொடங்கினர். பயணத்துக்கு மக்கள் காட்டிய பேராதரவில் தோழர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். 6.30 மணியளவில் திருச்செங்கோடு நெல்லுக்குத்தி மண்டபம் அருகில் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை இசை, பயணத்தில் மக்களிடம் நடத்திய வீதி நாடகக் கலை நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் வந்த விரட்டு குழுவினரின் பறை. வீதி நாடகம், கலை நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து 5 பயணக் குழுக்கள் சார்பில் குழுவில் பங்கேற்ற...

மாநாட்டின் தீர்மானங்கள் ‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: காவல்துறையில் தனிப் பிரிவு :  தீர்மானம் : 1 – ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும்...

புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; எழுச்சி உரைகள் உணர்ச்சிகரமான சென்னை மாநாடு

“இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” எனும் முழக்கத்தை முன் வைத்து திருவான்மியூர் தெப்பக்குள மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடு 4.6.2017அன்று மாலை 5 மணியளவில் எழுச்சியுடன் தொடங்கியது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் – இந்த மாநாட்டை கழக தலைமைக் குழுவின் தீர்மானத்தை ஏற்று நடத்தியது. திருவான்மியூர் பகுதி முழுதும் கழகக் கொடிகள் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. பெரியார்-அம்பேத்கர் படங்களோடு அமைக்கப்பட்டிருந்த மேடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. நகரம் முழுதும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வழிகாட்டுதலில் 20க்கும் மேற்பட்ட கழக இளைஞர்கள் 15 நாள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தனர். மாநாட்டு திடலில் நிரம்பி வழிந்த கூட்டத்துக்கு கழகத் தோழர்கள் நடத்திய துண்டறிக்கை பரப்புரைகளும் விளம்பரங்களுமே பெரிதும் காரணம். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் புரட்சிகர பறை இசை, பாடல், நடனம், நாடகம் மாநாட்டுக்கு உணர்வூட்டின. கலை...