Tagged: இராமகிருட்டிணன்

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

“பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்” இது 2001 ஆம் ஆண்டில் 5 பெரியாரிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தந்தைபெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட முன்வந்தபோது மக்கள் முன் வைத்த பிரகடனம், இந்த ஐந்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகளின் அடையாளங்களைவிட பெரியாரின் இலட்சியத்தை கொண்டு செலுத்தலே முதன்மையான பணியாக ஏற்றன என்பதை இந்தப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் அந்த இலட்சியத்தை அடையவே இயக்கம் என்ற பாதைமாறி, தங்கள் முந்தைய இயக்க அடையாளத்தை முன்னிறுத்தலே முதன்மை இலக்கு என்ற நிலை, பெரியார் திராவிடர் கழகத்திற்குள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமாகும். பெரியாரின் அடிப்படைத் தத்துவமான சாதிஒழிப்பு என்ற இலட்சியத்தையே தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன்...

காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிரடியாக நடைபெற்ற எஸ்.வி.ஆர். ஆவணப்பட வெளியீடு !

கழக தலைவர் வெளியிட தோழர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார் ! 04.06.2016 சனிக்கிழமை, மாலை ”மனிதநேயப் போராளி தோழா் எஸ்.வி.ஆா்.” எனும் ஆவணப்பட வெளியீடு மற்றும் திரையிடல் சென்னை மேற்கு மாம்பலம்,சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்சிகள் துவங்கும் நிலையில் திடீரென வந்த காவல்துறை நிகழ்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த திருமண மண்டபத்தில் நிகழ்சியை நடத்தக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்தது.அப்பட்டமான ஜனநாயக விரோதமாக நடந்து கொண்ட காவல்துறையின் அடாவடித்தனத்தை முறியடித்து குறும்பட வெளியீட்டை,திரையிடலை எப்படியும் நடத்தி விடுவது என தோழர்கள் முடிவு செய்தனர். உடனடியாக கழக தோழர் அன்பு தனசேகர் அவர்களின் இல்லத்தின் மேல் மாடியில் நிகழ்சியை நடத்த மாற்று ஏற்பாடு செய்தனர்.தோழர் அன்பு தனசேகர் அவர்கள் காவல் துறையின் மிரட்டகளை புறந்தள்ளி தன் வீட்டில் நிகழ்சியை நடத்த மகிழ்சியுடன் ஒப்புக்கொண்டு நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். உடனடியாக நாற்காலி, ஒலிபெருக்கி, விளக்கு அனைத்தும் தயார் செய்யப்பட்டு 100 பேர்...