காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள் 28-8-2015

காஞ்சி மக்கள் மன்றத்தில் 28-8-2015 அன்று மூவர் உயிர் காக்க தன்னை அழித்துக் கொண்ட தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

காலை 8-00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடியேற்றினார். அடுத்து செங்கொடியின் நினைவிடத்தில் முத ல் மலர்வளையத்தை திருநங்கையர் சார்பாக அவ்வமைப்பின் மூத்த உறுப்பினர் வைத்தார். பல்வேறு அமைப்பினர் தங்கள் அமைப்புகளின் சார்பாக வீரவணக்கம் செய்தனர்.

மாலை 4-00 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் பறையிசையோடு வீரவணக்க நிகழ்வு தொடங்கியது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் முன்னணித் தோழர்களும் வீரவணக்கவுரை யாற்றினர்.

 

You may also like...

Leave a Reply