இளவரசனை தொடர்ந்து கோகுல்ராஜ்

n2
”திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது”- கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை.
கோகுல்ராஜ் கொலை’கவுரவக் கொலை’ என்ற பெயரில் ‘ஜாதி ஆணவக் கொலைச் சம்பவங்கள்’ தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவாகும்.
2013ம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர் திவ்யா என்கிற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்க்காக அவர்களை ஜாதிவெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பிரித்தனர்.கடைசியில் இளவரசனின் பிணம் தண்டவாளத்தில் கிடந்தது.
இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல்ராஜ் அதே கதிக்கு ஆளாகி உள்ளார்.உயர் ஜாதி என சொல்லிக் கொள்ளும் கவுண்டர் ஜாதிப்பெண்ணை காதலித்ததால் அவர் ஜாதிவெறியர்களால் கடந்த 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார்.24ம் தேதி தலை துண்டிக்கப்பட்டுல்ள நிலையில் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டி பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு கோகுல்ராஜ் ஒருமாணவியோடு சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.கடைசியாக 7 பேர் கொண்ட ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தி செல்வதும் காமிராவில் பதிவாகி உள்ளது.கவுண்டர் ஜாதியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக ‘தினத் தந்தி’ நாளேடு செய்தி கூறுகிறது.கோகுல்ராஜ் தலை மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது உடலில் எந்த காயங்களும் இல்லை.எனவே இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.இது திட்டமிட்ட படுகொலையே ஆகும்.இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள்,பகுஜன் சமாஜ் கட்சி,சிபி.ஐ.(எம்.எல்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேலம் உயர் சிகிச்சை சிறப்பு பிரிவு மருத்துவமனைக்கு எதிரே தொடர்ந்து போராடி வருகின்றன.
”திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது”. கொலைக்கு திட்டமிட்டு நடத்தி முடித்த ஜாதிவெறிக் கும்பலை கைது செய்து கொலை வழக்கு பதிவுசெய்யவேண்டும் என்றும் வழக்கை சி.பி.சி.அய்.டி விசாரணைக்கு மாற்றவேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.
கொளத்தூர் மணி,தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்.

You may also like...

Leave a Reply