தேவை, பூணூலும் குடுமியும்

ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு முதல் முறையாக தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டு மொத்தம் 18 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பூணூல் அணிவீர்களா? குடுமி வளர்ப்பீர்களா? அசைவம் சாப்பிடுவீர்களா? சைவம் சாப்பிடுவீர்களா? மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளதா? என்பன உள்பட பல்வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.
இந்த பொறுப்புக்கு 5,300 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 18 பேர் இறுதி செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களின் வயது 50 முதல் 70–க்குள் உள்ளது. 18.8.2026 அன்று நேர்காணல் தொடங்கியது. நேர்காணலின் ஒரு பகுதியாக விண்ணப்ப படிவம் ஒன்றை நிரப்பி வழங்கினர். அதில் மொத்தம் 18 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதில்தான் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. (ராமன் மாட்டுக்கறி சாப்பிட்டதையும், கள் குடித்ததையும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது).
இதுதவிர சம்பந்தப்பட்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்த வகையான பணி செய்கின்றனர். ராமன் கோயிலில் கூட்டம் அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்படுத்துவது எப்படி? கடவுள் ராமன் மீதான நம்பிக்கை எப்படி உள்ளது?, ராமன் கோயிலின் எதிர்கால வளர்ச்சி குறித்த திட்டம் தொடர்பான கேள்விகள் உள்ளிட்டவை கேட்கப்பட்டனவாம். அதாவது ’பிராமண’ குலத்தில் பிறந்தவரா என்பதைக் கண்டறியவே இந்தக் கேள்விகள். ராமன் கோயிலைக் கட்டிய கட்டடத் தொழிலாளிகளிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பார்களா? இதுதான் பார்ப்பனியம்.
பெரியார் முழக்கம் இதழ் 27082026

You may also like...