பயணத்துக்குத் தோழமை அமைப்புகளின் பேராதரவு
நாகர்கோவில் அணி:
4வது நாள்: திருநெல்வேலி, தென்காசியில் 09.08.2026 ஞாயிறு காலை 10.00 மணிக்கு சேரன்மகாதேவி பகுதியிலும், மதியம் 12.30 மணிக்கு வீரவநல்லூர் பகுதியிலும், மாலை 3.00 மணிக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலும், மாலை 5.30 மணிக்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியிலும் நடைபெற்றது.
கழக திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் தலைமை வகித்தார். தென்காசி மாவட்டச் செயலாளர் சு.அன்பரசன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்டத் தலைவர் மாசிலாமணி வரவேற்புரை ஆற்றினார்.
பால்.பிரபாகரன்(கழகப் பரப்புரைச் செயலாளர்), நங்கவள்ளி அன்பு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), கணபதி (ஆத்தூர் நகரச் செயலாளர்), அழகேசன் (விசிக மாவட்டச் பொருளாளர் திருநெல்வேலி), செல்வசுந்தரசேகர் (பெரியார் உணர்வாளர் சேரன்மகாதேவி), சிவராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டப் பொருளாளர் திருநெல்வேலி), கருணாநிதி (பெரியார் உணர்வாளர் வீரவநல்லூர்), ச.பெரியார் பித்தன் (புஇமு), மு.தமிழ்ச்செல்வன் (பெரியார் உணர்வாளர்), ஜோயல் மில்டன் (ஆலங்குளம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் திமுக), பொன். அறிவழகன் (தென்காசி மாவட்டச் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திமுக). மு. ராமசாமி (முன்னாள் பேரூர் செயலாளர் தென்காசி) ஆகியோர் பரப்புரையின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர். நிறைவாக ஓவியர் தமிழன் தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
பயணக் குழுத் தோழர்களுக்கு காலை உணவு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவு தென்காசி மாவட்டத் தலைவர் மாசிலாமணி, இரவு உணவு தென்காசி மாவட்டம் பேராசிரியர் திருநீலகண்டன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
5வது நாள்: 10.08.2026 அன்று திங்கள் காலை 10.00 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் , மதியம் 12. 00 மணிக்கு புளியங்குடி பகுதியிலும், மாலை 5.30 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலும் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற (தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு, மற்றும் புளியங்குடி) கூட்டத்திற்கு தென்காசி மாவட்டத் தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். தென்காசி பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மதுரை மாவட்டக் கழகத் தலைவர் காமாட்சி பாண்டியன் தலைமை வகித்தார் மேலூர் பகுதி பொறுப்பாளர் சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், நம்பியூர் ரமேஷ், ஆத்தூர் கணபதி, மதுரை மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, கே. ஆர். தோப்பூர் கண்ணன் ஆகியோர் பரப்புரையின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர்.
புளியங்குடி நிகழ்வால் தி.மு.க.வை சேர்ந்த வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் முள்ளி குளம் சந்திரன் தோழர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிறைவாக மதுரை மாவட்டக் கழகத் தோழர் மதுரை.முருகேசன் நன்றி கூறக் கூட்டம் நிறைவு பெற்றது.
பயண குழு தோழர்களுக்கு காலை உணவு தென்காசி பாலசுப்ரமணியம் ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவு கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஏற்பாடு செய்திருந்தார். இரவு உணவு மதுரை மாவட்டக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
6வது நாள்: 11.08.2026 செவ்வாய் காலை 9.00 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலும், 11.00 மணிக்கு அவனியாபுரம் பகுதியிலும், மாலை 4.00 மணிக்கு டி. எம். எஸ் சிலை அருகிலும், கே. புதூர் பகுதியிலும் சிறப்பாக நடைபெற்றது.
காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) தலைமை வகித்தார். கழக தோழர் முருகேசன் முன்னிலை வகித்தார். சத்தியமூர்த்தி (மதுரை மாவட்ட மேலூர் பகுதி பொறுப்பாளர்) வரவேற்புரையாற்றினார்.
தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற பாடகர் சித்திரசேனன், கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் சீனிவாசன் (மேட்டூர் குமரன் நகர் பகுதி செயலாளர்), அண்ணாதுரை (சேலம் மாவட்ட அமைப்பாளர்), காளியப்பன் ஆகியோரின் இசையுடன் கூட்டம் தொடங்கியது.
காமாட்சி பாண்டி (மதுரை மாவட்டத் தலைவர்), நங்கவள்ளி அன்பு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), கணபதி (ஆத்தூர் நகரச் செயலாளர்), கே. ஆர். தோப்பூர் கண்ணன், கழகத் தோழர் வாசுகி, தளபதி (மதுரை மாவட்டக் கழக காப்பாளர்), கவிஞர் ஜீவா (தி. மு. க தலைமைக் கழகப் பேச்சாளர்), ராமலிங்கம் (மக்கள் அதிகார கழகம்- மாநில பொறுப்பாளர்), மெய்யப்பன் (தமிழ் தேச குடியரசு இயக்கம்) , பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்) ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர்.
மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் பண்பாட்டு கழகத் தலைவர்), கழக பரப்புரைப் பயணம் குறித்து வாழ்த்துரையாற்றினார். நிறைவாக வேங்கை மாறன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
காலை உணவு மோகன் தாஸ் (கரூர் மாவட்டக் கழகத் தோழர்) ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவு மஞ்சுளா ஸ்டாலின் (சி.பி.எம்) ஏற்பாடு செய்திருந்தார். இரவு உணவு தளபதி (மதுரை மாவட்டக் கழக காப்பாளர்) ஏற்பாடு செய்திருந்தார்
7வது நாள்: 12.08.2026 முதல் கூட்டம் காலை 10.00 மணிக்கு மேலூர் பகுதியில் நடைபெற்றது. சத்தியமூர்த்தி (மதுரை மாவட்ட மேலூர் பகுதி பொறுப்பாளர்) தலைமை வகித்தார். காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) முன்னிலை வகித்தார். வேங்கை மாறன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் காமாட்சி பாண்டி (மதுரை மாவட்டத் தலைவர்), கணபதி (ஆத்தூர் நகரச் செயலாளர்), ரமேஷ் (நம்பியூர் ஒன்றியச் செயலாளர்) கூட்டத்தின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர்.
மெய்யர் (சி. பி.அய்.எம். எல் மதுரை மாவட்டச் செயலாளர்), நிலவழகன் (மக்கள் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்), பிரகாஷ் (மக்கள் அதிகார கழகம்), முத்துமாணிக்கம் (வி.சி.க) ஆகியோர் கழகப் பரப்புரைப் பயணம் குறித்து கருத்துரையாற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.தோழர் வாசுகி நன்றியுரையாற்றினார்.
காலை உணவு அழகர் பிரபாகரன் (கழக ஊடகப் பொறுப்பாளர்) ஏற்பாடு செய்திருந்தார். மேலூர் பகுதியைச் சார்ந்த பாலு (தி.மு.க) கழகத் தோழர்களுக்கு பருத்தி பால் வழங்கினார்.
கடைவீதி வசூல் துண்டறிக்கை பிரச்சாரம் வழியாக ரூ.11,499 கொளத்தூர் கணேசன், ராஜா தலைமையில் ராமச்சந்திரன், கோபிசெட்டிபாளையம் தோழர்கள் துரைசாமி, நடராஜன், மயில்சாமி, வனவாசி நகரத் தலைவர் செந்தில் ஆகியோர் நிதி திரட்டினர்.
புத்தக விற்பனைப் பணியைத் தோழர்கள் தங்கதுரை, தேவராஜ், கோகுல் ஆகியோர் மேற்கொண்டனர். ரூ.2,160 கழக வெளியீடுகள் விற்பனையானது. அனைத்து கூட்டங்களிலும் தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற பாடகர் சித்திரசேனன், கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன், சீனிவாசன் (மேட்டூர் குமரன் பகுதிச் செயலாளர்), அண்ணாதுரை (சேலம் மாவட்ட அமைப்பாளர்), காளியப்பன் ஆகியோரின் இசையுடன் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணன் (பயண ஒருங்கிணைப்பாளர்), அண்ணாதுரை (சேலம் மாவட்ட அமைப்பாளர்), நங்கவள்ளி அன்பு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), தேவராஜ் (மாநகர அமைப்பாளர்), கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழகம்), கே. ஆர். தோப்பூர் கண்ணன், கொளத்தூர் செந்தமிழ் கலையமுதன், தங்கதுரை (இளைஞர் அணி அமைப்பாளர்), புளியங்குடி முள்ளிகுளம் சந்திரன், வாசு (தேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்), கீழப்பாவூர் உமா, கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் சேர்மதுரை, கோகுல், காளிப்பன், மதுரை மாவட்டக் கழகத் தோழர்கள் வேங்கை மாறன், மதுரை முருகேசன், சமூக ஆர்வலர் சூர்யா திருநெல்வேலி, பெரியாரிய உணர்வாளர்கள்: மு.தமிழ்ச் செல்வன், க.மாறன்), கருணாநிதி மற்றும் த.வ.முகிலன் வீரவநல்லூர், பெரியார் குமார், ஆலங்குளம், செல்வமணி நெட்டூர் ஆகியோர் பங்கேற்றனர்.
பேராவூரணி அணி:
4வது நாள்: நீடாமங்கலம், கும்பகோணம், நாச்சியார் கோவில் ஆகிய இடங்களில் 09.08.2026 அன்று பரப்புரை நடைபெற்றது.
தோழர்கள் சோலை மாரியப்பன், வெங்கடேஷ் ஆகியோர் தலைமை உரையாற்றினர். ஜாதியில் திருமணம் தலைப்பில் திருப்பூர் முத்து, சென்னிமலை செல்வராஜ், வாழ்வில் மூடநம்பிக்கை தலைப்பில் கோபி.வேலுச்சாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், மதத்தில் பார்ப்பனியம் தலைப்பில் முகில்ராசு, ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக அய்யனார், பரிமளராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கும்பகோணம் பகுதி திராவிடர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தோழர் வழக்கறிஞர் ரமேஷ் பயணத்தை வாழ்த்தியும் பெரியாரின் கொள்கைகளை விளக்கியும் உரையாற்றினர். நாச்சியார் கோவில் பகுதி திராவிட இயக்க ஆதரவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாச்சியார் கோவில் அருகிலுள்ள முனியாண்டி விலாஸ் உரிமையாளர் மின்சாரம் வழங்கி உதவினார்.
காலை உணவு பெரியாரிய உணர்வாளர் கல்யாணசுந்தரம் அவர் இல்லத்தில் வழங்கி சிறப்பித்தார். மதியம் மற்றும் இரவு உணவை கும்பகோணம் தோழர்கள் வெங்கடேஷ், ரஷ்யா, வைக்கம் மற்றும் குடும்ப உறவினர் தங்கள் இல்லத்தில் அசைவ உணவு வழங்கி மகிழ்ந்தனர். தங்குவதற்கு அவருடைய இல்லத்திலேயே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
5வது நாள்: உரத்தநாடு பேருந்து நிலையம், மதுக்கூர் பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தோழர்கள் சிவசுப்பிரமணியம், பாரி ஆகியோர் தலைமையில் பரப்புரை நடைபெற்றது.
ஜாதியில் திருமணம் தலைப்பில் நிர்மல் குமார், மதத்தில் பார்ப்பனியம் தலைப்பில் அய்யனார், முகில்ராசு, சூலூர் பன்னீர்செல்வம் வாழ்வில் மூடநம்பிக்கை குணா, கலைச்செல்வன், சூலூர்.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக துரைசாமி, அய்யனார் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் கவிஞர். கவிமுருகன் பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை விளக்கியும் வாழ்த்தியும் உரையாற்றினார். பெரியாரிய உணர்வாளர் சுடர்வேந்தன் பயணக்குழு தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். காந்தி அரிசி கடை உரிமையாளர் மின்சாரம் வழங்கி உதவினார்.
ஈரோடு பாபு புத்தக விற்பனை செய்தார். பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மாணவிகள் துண்டறிக்கைகளை பெற்றும் ஆதரவு தெரிவித்தும் கூட்டத்தை முழுமையாக கவனித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கவி முருகன் தேநீர் வழங்கினார். காலை உணவு பாரி ஏற்பாடு செய்தார். பயணக்குழு தோழர்களுக்கு திமுக கிளை கழகச் செயலாளர் ராஜா இரவு உணவை வழங்கி தோழர்களை வாழ்த்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பெரியார் முழக்கம் இதழ் 20082026
