மெட்ரோ இரயிலுக்கு தமிழ்நாட்டின் பங்கு அதிகம்!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தை கொண்டு வரவில்லை என்று எடப்பாடி தோல்வி பயத்தில் கதறி வருகிறார். அதிமுக ஆட்சியில் தான் சென்னை போக்குவரத்து குறைக்க மெட்ரோ-2 கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.63,000 கோடி அனுமதி பெற்று திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்.

இதுவரை இந்தியாவில் ரூ 63,000 கோடிக்கு ஒரு திட்டத்துக்கு ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி , கிடைத்தது இல்லை இதுவே முதல் முறை என்று இறுமாப்புடன் பேசுகிறார் எடப்பாடி. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வைத்து அடிக்கல் நாட்டினர் என்று பெருமிதத்துடன் திமுக ஆட்சியில் இப்படி எதாவது பெரிய திட்டத்தை சென்னைக்கு கொண்டு வந்தீர்களா என்று கேள்வி எழுப்புகிறார் எடப்பாடி.

உண்மை என்ன தெரியுமா? சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ பணிக்கான மதிப்பீடு 63,246 கோடி. இதற்கு எப்படி வருவாய் வருகிறது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தந்த ஆண்டறிக்கையின் படி பார்த்தால் ஒன்றிய அரசு தருகிற நிதி 7,424.9 கோடி மட்டுமே. தமிழ்நாடு அரசின் பங்கு அதே 7,424.9 கோடி. மீதம் உள்ள தொகை சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அதாவது ஜப்பான் இண்டர்நேசனல் காப்ரேசன் ஏஜின்சி (Jica), ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கடனாக வாங்கியது. இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டியது தமிழ்நாடு அரசுதான்.

நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட இதர செலவுகள் ரூ.14,743 கோடி தமிழ்நாடு அரசுதான் செலவு செய்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரூ.22,173 கோடி செலவிடுவது தமிழ்நாடு அரசுதான். ஆகவே ஒன்றிய அரசை விட தமிழ்நாடு அரசுதான் 2-ம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்துக்கு செலவு செய்கிறது. இந்த உண்மைகளை மூடி மறைத்து மோடி ஆட்சிக்கு புகழ் பாடுகிறார் எடப்பாடி.
பெரியார் முழக்கம் இதழ் 16042026

You may also like...