கரூரில் ஜாதி ஆணவப் படுகொலை: மதுரை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சமூக இளைஞர் ஹரிஹரனுக்கு நீதி கேட்டு மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 12.1.2021 அன்று மதுரையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், அதிமமுக பொதுச் செயலாளர். பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் ஆரோக்கிய மேரி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணி பாபா, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கார்த்தி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் மாநில  கொள்கைப் பரப்புச் செயலாளர் அவுதா காதர் பாட்சா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகப் பேச்சாளர் அப்பாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜீவ், குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்க நிறுவனர் விடுதலை நேயன், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ் பித்தன், எஸ்டிபிஐ உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்  மருத்துவர் சமூக மக்கள் தாமாக முன் வந்து பங்கேற்றார்கள்.

பெரியார் முழக்கம் 21012021 இதழ்

You may also like...