பெரியாரே சமூகத்தின் ஞாயிறு

இதுவரை
முகநூலில்
மூழ்கி முடிப்பேன்
ஞாயிறை …

இம்முறை
முகங்களில்
மூழ்கி முடித்தேன்
ஞாயிறை …

இயந்திர வாழ்வில்
இயக்க ஓய்வாய்
இரக்கம் பேச
ஞாயிறு …

இயல்பு மீறிய
இயக்க வாழ்வில்
இதயம் பேசிட
ஞாயிறு …

வீதிதனில் இறங்கி
பரப்புரையில் கலந்தே
மக்களதில் கலந்த
ஜாதி புழுதியதை
சுட்டெரிக்கும் முயற்சியதில்
( தி.வி.க )பெரியாரின்
ஞாயிறுகள் …

காஞ்சி மாவட்டமெங்கும்
காலடி பதித்தே
கருத்ததனை விதைத்தே
பெரியாரின்
கனவெனவே நின்ற
ஞாயிறு …

தோழர்களின்
பணியதுவோ கடினமன்றோ
மக்களின்
அறியாமையோ கொடுமையன்றோ
சுட்டெரிக்கும் வேளையிலும்
சுடாமல் கையேந்திய
ஞாயிறு ….

களமாடும்
கருப்புகளின் கம்பீரம்
கண்கொண்டு கண்டேனே
கருத்தாடும்
கரும்புலிகள் சொல்கீரி
சிலிர்த்ததோர்
ஞாயிறு …

பெரியாரே
சமூகத்தின் ஞாயிறு
என்றுணர்ந்த எனக்கும்
மறக்காதே இந்த
ஞாயிறு ….

இரா. செந்தில் குமார் ……………….

செய்தி : திராவிடர் விடுதலை கழகம் சார்பில் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும் என்ற பிரச்சார பயணம் …

You may also like...