ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகத்திற்கான பேரிழப்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் செய்தி!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 05.07.24 அன்று இரவு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்கின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.
தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இட ஒதுக்கீட்டு உரிமை குறித்து தெளிவான பார்வைக் கொண்டவர். அவரிடம் நெருங்கி பழகும் பொழுது தான் அவருடைய ஆழ்ந்த சிந்தனைகளை அறிய முடிந்தது.
சமூகம் குறித்தான பெரிய அக்கறையையும் இந்த சமூகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த தெளிவும் சமூக சிக்கல்களை தீர்க்கும் பேரார்வம் கொண்டவராகவும் அவர் இருந்தார்.
தோழரின் இழப்பு அவரது கட்சிக்கான இழப்பாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கான ஒரு இழப்பாகவே நாம் பார்க்கிறோம்.
கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தன்னை ஜாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிய தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
06.07.2024.

பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

You may also like...