Category: குடி அரசு 1949

21. மஞ்சள் கரைகிறது, கரைந்து கொண்டே வருகிறது

21. மஞ்சள் கரைகிறது, கரைந்து கொண்டே வருகிறது

இந்தியாவில் கம்யூனிஸம் பரவிவருகிறதா? கம்யூனிஸம் என்றால் இரு விஷயங்களைக் குறிக்கும். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி; மற்றொன்று வறுமை காரணமாக ஏற்படும் அதிருப்தி. முன்னையதை இந்தியா சட்டை செய்யவில்லை. ஏனென்றால் பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற முடியாது.  இது ஒரு கேள்வியும் பதிலும். கேள்வி கேட்டவர், லண்டன் டெயிலி மெயில் என்ற பத்திரிகையின் நிருபர். பதில் கூறியவர் இந்துஸ்தான் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்கள். இங்கு, நாம் இதை எடுத்துக்காட்ட எண்ணியது, இந்தியா என்ற பெரிய நிலப்பரப்பில் – உபகண்டத்தில், கம்யூனிஸம் எந்த அளவில் பரவியிருக்கிறது என்பதை எடை போட்டு நிறுத்த, எடுத்துக் காட்டவேண்டுமென்கிற எண்ணத்தோடல்ல. கேள்விக்குப்பதிலாக இந்துஸ்தானத்தின் முதல் மந்திரி கூறியிருக்கும் பதிலில், எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது; இந்த மஞ்சள் குளிக்கும் நிலைமை இன்னும் நீடிக்குமென்கிற ஒரு நினைப்புக்கு இடமுண்டா? என்பதை எடுத்துக்காட்ட வேண்டுமென்பதற்காகத்தான். கம்யூனிஸ்ட் கட்சியால், நாட்டில் பரப்பப்படும் கருத்துக்களால் உண்டாகும் கம்யூனிஸம்; சுரணடல்காரர்களின் ஆதிக்கம் நீடிப்பதால், தொடர்ந்து...

20. ஒப்புயர்வற்ற குறள் நாள்!

20. ஒப்புயர்வற்ற குறள் நாள்!

ஏப்ரல் 12-ல் எங்கும் கொண்டாடுங்கள்! இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு.வி.க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ்ச்சியோடு இசைந்தார். ஆனால் அதை இந்த மாதத்தில் நடத்த எனக்குப் போதிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது குறித்து வருந்துகிறேன். கோவை ஜில்லா சுற்றுப்பிரயாணமும், பிரசாரப்பள்ளியும் இம்மாதத்தைக் கவர்ந்து கொண்டன. அவற்றை மாற்ற முடியவில்லை. ஆதலால் சமீபத்தில் அடுத்த மாதத்தில் ஒரு நாள் தனிமையாய் சென்னையில் கொண்டாடக் கருதி இருக்கிறேன். ஆனாலும் இம்மாதம் 12-ம்தேதி நல்ல முழு நிலவு நாளாக இருக்கும். ஆதலால் 12-ம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் திராவிட கழகத்தார் உட்பட எல்லாத் தமிழ் மக்களும் அவசியம் தவறாமல் ஒவ்வொரு ஊரிலும் திருவள்ளுவர் நாள் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். தமிழர் பண்பு, திராவிடகழகக் கொள்கைகள் யாவற்றிற்கும் குறளில் ஆதாரங்கள் இருக்கின்றன. குறள் ஜாதிகள்,...

19. பொறுத்துப் பார்ப்போம்

19. பொறுத்துப் பார்ப்போம்

உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்குமதிப்பு இல்லை, அயோக்கியத்தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு ?  இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் பேச்சு. ஆம்! ஓமந்தூரார் என்றைக்கு, தான் ராஜினாமாச் செய்யப்போவதாகச் சொன்னாரோ, அன்று முதல் சென்ற 10- நாளாக எங்கும் இதே பேச்சுத்தான். இவ்வளவுக்கும் ஒமந்தூரார் ஆட்சியில், இந்த நாட்டு மக்களின் குறைபாடுகள் எல்லாம் போக்கடிக்கப்பட்டன, வயிறார மக்கள் பசி தீரவுண்டனர், அறியாமை அழிக்கப்பட்டு மக்கள் அறிவில் உயர்ந்து விளங்கினர் என்று சொல்லக்கூடிய நிலையில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓமந்தூரார் ஆட்சியில்தான் இந்த நாட்டுத் தொழிலாளிகள் ஈவு இரக்கமற்ற முறையில் ஒடுக்கப் பட்டார்கள். மொழிப்பற்று உடைய இளங்காளையரும், தாய்மாரும் மூர்க்கத்தனமான வழிகளால் – காட்டுமிராண்டிப் போக்கோடு தாக்கப் பட்டனர். இன்னும் எத்தனை எத்தனையோ தொல்லை! இருந்தாலும் ஒமந்தூராரின் ராஜினாமா, உண்மைக்கும் நாணயத்திற்கும் யோக்கியதைக்கும் ராஜினாமாவாகக் கருதப்படுகிறது என்றால், இதிலுள்ள உண்மை என்ன என்பதை, ஓமந்தூராரை...

18. தோழர் அழகிரிசாமி!

18. தோழர் அழகிரிசாமி!

தமிழரின் தன்மானப் போர்த் தளபதி ? அஞ்சா நெஞ்சன் ? பட்டுக்கோட்டை அழகிரிசாமியவர்கள் இயற்கை எய்தினார் என்ற சேதி எதிர் பார்த்தது எவரும் என்றாலும் செய்தியைக் கேட்டவுடன் பேரதிர்ச்சியைத் தராமலில்லை. சமுதாயத்தின் என்புருக்கியான ஆரியச் சழக்கரோடு தீவிரமாகப் போர்தொடுத்த அவரின் உடம்பை, என்புருக்கிநோய் இன்று இரையாகக் கொண்டுவிட்டது. தோழர் அழகிரி ? ஆம்! தோழமை என்பதன் தத்துவத்தை நன்குணர்ந்த அழகிரியவர்கள், இறப்பை, இன்றோ நாளையோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்தான். அப்படி எதிர் பார்க்க வேண்டிய நிலையில், தன்னுடைய வாழ்வைப் பற்றிப் பெருங்கவலை கொள்ளாதவராய் இருந்துவர, தன்னை அவர் பழக்கிக் கொண்டவர் என்று கூறினால் அது தவறில்லை. சானடோரியத்தில் இருப்பதைக் காட்டிலும் அவர் தன்னுடைய வீட்டுக்குச் சென்று ஓய்வு பெற்றுக்கொள்வது நல்லது இது, அவர் பெருந்துறை சானடோரியத்துக்குத், தோழர்களின் தூண்டுலால் போனபோது அங்குள்ள டாக்டரால் கூறப்பட்ட ஆலோசனை. சாவதை ஆஸ்பத்திரியில் சாவாதே, வீட்டுக்குப்போய் இறந்துவிடு என்பதுதான் இதன் கருத்து. இதை டாக்டர் கூறுவதற்கு...

17. முதல் மந்திரியும் – நிதி மந்திரியும்

17. முதல் மந்திரியும் – நிதி மந்திரியும்

திராவிடக் கழகத்தையும், கருப்புச் சட்டையையும் பற்றி இந்த ஒரு ஆண்டுக்காலமாக மந்திரிகள் பேசும் ஒவ்வொரு கூட்டங்களிலும், சட்டசபை அங்கத்தினர்கள் பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும், சட்டசபை கூடும் ஒவ்வொரு கூட்டச் சமயத்திலும் ஏதாவது ஒரு வகையில் குறை கூறியும், தாக்கியும் பேசிக்கொண்டே வருகிறார்கள். திராவிடக் கழகத்தார் இந்தியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதும், இந்துஸ்தான் அரசாங்க ஆதிக்கத்திலிருந்து திராவிடநாடு தனிச் சுதந்திர நாடாகப் பிரிந்திருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதும், மத, சமுதாயத்துறைகளில் மூடநம்பிக்கைகளும் வருணாச்சிரம முறைப்படி ஆன ஜாதிப்பிரிவுகளும் பேத வகைகளும் ஒழிய வேண்டும் என்றும், இவை ஒழியும்வரை, மக்கள் எண்ணிக்கை வீதம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துமும், உரிமையும் இருக்கவேண்டும் என்றும், பிரச்சாரம் செய்துவருவதும் யாவரும் அறிந்தேயாகும். இதில் திராவிடக் கழகத்தார் சிறிதும் ஒழிவு, மறைவு இல்லாமல் பிரச்சாரம் செய்து வருவதோடு, தங்கள் பிரச்சாரங் களில் சிறிதும் பலாத்காரமோ, பலாத்கார உணர்ச்சியோ ஏற்படுவதற்கு இடம் இல்லாமல் சாந்தமும், சமாதானமும் ஆன தன்மையிலேயே பிரச்சாரம் செய்து...

16. ஸ்தல சுயாட்சி

16. ஸ்தல சுயாட்சி

இந்த மாதம் 12 தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு ? மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால், அங்கு பெரியார் கூறிய கருத்துக்கள், எத்தனையோ மடங்கு அதிகமான மனக்கசப்பை அவர்களுக்கு நிச்சயமாகத் தந்திருக்க வேண்டும். பெரியாரவர்கள் அந்த வரவேற்புக்குப் பதில் கூறும்போது, இன்றைய ஸ்தல ஸ்தாபனங்கள் சுயேச்சையாகச் செய்யக்கூடிய செயல்கள் இரண்டு; ஒன்று வரவேற்பு வழங்குவது, மற்றொன்று திருவுருவப்படம் திறந்து வைப்பது என்று கூறியிருப்பது வெறும் வேடிக்கைக்காகக் கூறிய விஷயமல்ல. இன்றைய ஸ்தலஸ்தாபனங்களின் உண்மையான யோக்கியதை அவ்வளவுதான். ஸ்தல ஸ்தாபனங்களில் முக்கியமாக முனிசிபாலிட்டிகள், பஞ்சாயத்துப் போர்டுகள் என்பவைகளில் அங்கம் வகிக்கும் எவரும் அந்த ஸ்தாபனங்களால் அந்த நகருக்கோ, ஊருக்கோ எந்த ஒரு பொது நன்மையையும் செய்ய முடியாத அளவில்தான் அவர்களுடை அதிகாரம் பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது. பறிமுதல் என்று ஏன் கூறுகிறோமென்றால், ஸ்தல ஸ்தாபன அமைப்பு முறையே அந்த...

15. திருவள்ளூரில் காமராஜர்!

15. திருவள்ளூரில் காமராஜர்!

சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராஜர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்று விட்டதால் ஏற்பட்டிருக்கும் காலி ஸ்தானத்திற்கும், தோழர் சீனுவாசய்யர் என்கிற பேர் வழியை, எப்படியோ, எந்தக் காரணத்தினாலோ, காங்கிரஸ் சார்பில் நிறுத்திவைக்கப்பட்டு, அவரை ஆதரித்துப் பேசித்தீரவேண்டிய நிலையில் தோழர் காமராஜர் இருக்கிறார். எப்படியோ? எந்தக் காரணமோ? என்று ஏன் கூறுகிறோமென்றால், இந்தத் (துண்டு) விழுந்த இடத்துக்குக் காங்கிரஸ் சார்பாகவே நான் நிற்கிறேன் என்று தோழர்களான வேணுகோபால்ரெட்டி, ஆதிகேசவலு நாய்க்கர், மேயர் இராமசாமி நாயுடு ஆகிய மூன்று திராவிடர்கள், தனித்தனியே காங்கிரஸ் கமிட்டிக்கு விண்ணப்பம் போட்டிருந் திருக்கிறார்கள்; இந்த மூன்று பேரில் ஒருவர்கூட முத்துரங்கனார் இடத்துக்கு லாயக்கில்லை என்று தள்ளப்பட்டு, சீனுவாசய்யர்தான் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர் என்று காங்கிரஸ் தெரிந்தெடுத்திருக்கிறதே, இதை நினைக்கும் போதுதான் எப்படியோ? எந்தக் காரணமோ? என்று கூறவேண்டியதாயிருக்கிறது. மேலும், இந்த...

14. கோபால் மத்தாய் கூட்டுத்திருப்பணி!

14. கோபால் மத்தாய் கூட்டுத்திருப்பணி!

எதனால் வந்தது என்று புரிந்து கொள்ள முடியாமலும், தலைவர்களால் புரியவைக்கவும் முடியாத நிலையில், அர்த்தராத்திரியில் வந்து புகுந்த சுயராஜ்ஜியம், இன்று நாட்டைப் பெரும் அலங்கோலப்படுத்தி விட்டது. இந்தச் சுயராஜ்ஜியம், பார்ப்பனச் சுயராஜ்ஜியமே தவிர, பாட்டாளி மக்களுக்குச் சுயராஜ்ஜியமல்ல என்று நாம்விளக்கிய போது தூற்றப்பட்டோம். பாடுபடாத புளியேப்பக்காரர்கள் பவுசோடும் படாடோபத்தோடும் வாழத்தான் இந்தச் சுய ஆட்சி, பாதை அமைக்குமே தவிர, பாடுபட்டுழைத்துழைத்துப் பசியினால் வாடும் பசியேப்பக் காரர்களின் பசியைப் போக்க வழிவகுக்காது என்று கூறியபோது நாம் பழித்துப் பேசப்பட்டோம். உழைக்காத கும்பல் உடல் மினுப்புக் குன்றாமலிருக்க, தொந்தி வாடாதிருக்கத்தான், இந்த உத்தமர்களின் சுய ஆட்சி உருவாகி இருக்கிறதே தவிர, ஒட்டிய வயிற்றோடு உழைத்துருக்குலையுமினம் ஒரு அங்குல அளவுகூட முன்னேற, இது உதவி செய்யாது என்று நாம் உரைத்த போது, அதை உணர மறுத்தார்கள் நாட்டு மக்கள். வேதியர்களின் ஆசீர்வாதத்தோடு விளக்கம் தெரியாமல் நுழைந்த சுய ஆட்சிக்குக்காரணம், வெள்ளையர் – பனியாக்கள் கூட்டுச்சதி என்று...

13. பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!

13. பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!

கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காருவதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டு நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக்காப் பாற்றுவதற்காகத்தான்! ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக்குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலைவேறு! முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறா துழைக்க, எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை! பிந்தியது, உயர்ந்த பட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினுமினுப்பை வேண்டி மேலான நறுமணத்தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சியோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக...

12. உரிமையும் பொறுப்பும்

12. உரிமையும் பொறுப்பும்

இன்று நம் நாட்டில், எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி என்கிற முழக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் சமுதாயத்திலே நாணயக்குறைவும் யோக்கியக்கேடும் மலிந்து விட்டன. சுதந்தரம் பெற்றோம் என்று சொல்லிக்கொள்ளத் தலைப்பட்ட பிறகு, ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றுவது? எந்த மாதிரியான வேஷம் போட்டால் எப்படியெல்லாம் சுரண்ட முடியும்? என்கிற போக்கும், எந்த அயோக்கிய வேலைகளையும் செய்யலாம் என்கிற துணிச்சலும் பொதுவாகச் சமுதாயத்தில் வலுவாக வளர்ந்திருக்கின்றன. சட்டங்களுக்கு ஒரு மதிப்போ, சமுதாய ஒழுங்குக்கு ஒரு மரியாதையோ இன்று நம் நாட்டில் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லிவிடலாம். சமுதாயத்தின் உட்புறத்தில் உள்ள இந்த ஊழல்களின் வாடையே வெளிப்புறத்தில் களவு, கொலை என்கிற பெயரால் வீசுகிறது. இப்போது சமீப காலமாய்த் தமிழ் நாடெங்கும் நடந்து கொண்டு வரும் களவுகளையும், கொலைகளையும் கணக்கிட்டுக் கூட்டினால் எந்தத் திராவிடனும் வேதனை யடையாமல் இருக்க முடியாது. விசித்திரமான திருட்டுகள்! விதவிதமான கொலைகள்! அறியாமையை நிலை நிறுத்தி வைத்து...

11. ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு

11. ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு

ஈரோடு தாலூக்கா மக்களின் பொது நலனுக்கென எவ்விதக் கட்சிப்பற்றும் இல்லாமல், சென்ற ஒரு வருடமாக நடைபெற்று பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஈரோடுவாசி என்னும் வாரப்பத்திரிகை ஆசிரியரும், பிரசுரிப்பவருமான தோழர் ப.ஷண்முக வேலாயுதன் மீதும், அச்சிடுபவரான தமிழன் பிரஸ்தோழர் என். கரிவாதசாமி மீதும் ஈரோடு டாக்டர் ஜே.டி.ராஜா எம்.பி.பி.எஸ் (பி) என்பவர் இ. பி.கோ.500 பிரிவுப்படி ஈரோடு அடிஷனல்முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். வாயிதா 26.02.1949 தேதி போடப் பட்டிருக்கிறது. வழக்குத் தொடர்ந்திருப்பதற்குக் காரணம் 5.12.1948-ந் தேதி ஈரோடுவாசியில் போலி டாக்டர் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட சேதியேயாகும் எனத் தெரிகிறது. குடி அரசு 19.02.1949

10. அழுத பிள்ளை பால் குடித்தது! ஆனால்….?

10. அழுத பிள்ளை பால் குடித்தது! ஆனால்….?

இந்த மாதம் 9-ம் தேதி தூத்துக்குடித் துறைமுகத்தில் ஏர்ஸ்டீமர் அண்டு ஜெனரல் ஏஜன்ஸீஸ் லிமிடெட் கம்பெனியாரின் முதல் கப்பலுக்கு, கவர்னர் ஜெனரல் ஆச்சாரியாரால், மறத்தமிழன் வ.உ.சி.யின் பேர் சூட்டப் பட்டிருக்கிறதே, இதை எண்ணும் போதுதான் அழுத பிள்ளை பால்குடித்தது என்று சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆனால் பிள்ளைக்கு வயிறு நிரம்பிவிடுமா? வளர்ச்சியடையப் போதுமானதுதானா? பிள்ளை செழித்து வளரவேண்டுமென்கிற நல்ல நோக்கத்தோடு, பூரிப்போடு பீறிட்டெழுந்த நற்றாயின் பால் ஆகிவிடுமா? என்றும் உடனேயே கேட்கவேண்டியவர்களாயும் இருக்கிறோம். வேதியர்களின் கூட்டுறவால் இந்த நாட்டு வேந்தர்களின் பரம்பரை, ஒருவரோடு ஒருவர் பகைத்து ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நிலைகுலைந்து, சிதறுண்டு சீரழிந்துகிடந்த நிலையைப் பற்றுக் கோடாகக் கொண்டு, அதே வேதியர்கள் கைநீட்டி வரவேற்க ஆறாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள வெள்ளையர், அசைத்துவிட முடியாது என்கிற உறுதியோடு அரிய தொரு சாம்ராஜ்ஜியக் கோட்டையை நிறுவினார்கள் என்றாலும், அதன் ஆணிவேர் வெள்ளை வியாபார வேந்தர்களே. இந்தக் கோட்டையை இடித்துத் தகர்க்க வேண்டுமென்றால், இவ்வணிகத் துறைக்கு மூலபலமாயிருக்கும்...

9. இன்னும் எவ்வளவு நாள்?

9. இன்னும் எவ்வளவு நாள்?

நாடகம் முடிந்து விட்டது! ஆம் ஒண்ணேகால் வருஷத்திற்கு மேலாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திராவிட மாணவர்கள் மீது தொடரப்பெற்று நடந்து வந்த விசாரணை நாடகம் முடிந்து விட்டது! மாணவர் தலைவர் தோழர் மதியழகனுக்கு 50ரூ.அபராதம்! இன்றேல் ஆறுவாரம் கடுங்காவல் தண்டணை! மாணவத் தோழர்களான திருச்சி கோவிந்தன், நாகை திருஞானம், மதுரை கன்னையன், தருமநல்லூர் திருநாவுக்கரசு ஆகியோருக்கு நூறு நூறு ரூபாய் அபராதம்! இன்றேல் 3-மாதம் கடுங்காவல் தண்டணை!  சிதம்பரம் திராவிடர்கழகத் தலைவர் தோழர் கு.கிருட்டிணசாமி அவர்களுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை!  இது, பறங்கிப்பேட்டை – சப்மாஜிஸ்திரேட்டால் தரப்பட்டிருக்கும் தீர்ப்பு! எதற்கு? பார்ப்பனீயம் தான் நாட்டை ஆளுகிறது என்ற ஒரே தைரியத்தினால், பார்ப்பனீய வலையிற் சிக்கியவர்களான, மலையாளத் தொடர்புடைய மாணவத் தோழர்கள், பார்ப்பன ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டிருக்க, போலீஸ்வீரர்கள் பாதுகாப்புச் செய்ய, இருவர் மூவராய் இருந்த அறைக்குள் இருபது முப்பதுபேர் சென்று, தடியாலும் கத்தியாலும் தாக்கி, நடு ராத்திரியில், பச்சை ரத்தம் சிந்தச் செய்தும்...

8. கண் திறக்குமா?

8. கண் திறக்குமா?

உலகில் யார் யார் அடாத வழியில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம், மற்றவர்கள், அந்த வழியை, அக்கிரமமான அடாதவழி என்று உணர்ந்து கொண்டு, அந்த வழி கூடாது! என்று உரத்த குரலிலே ஓங்கிக் கூறுவது கேட்டுப் பெருங் கஷ்டமாக ? சகிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால் விழிப்புணர்ச்சி வினையாற்றத் தொடங்கி விட்டால், விபரீத நடத்தையாளர்கள் அவற்றை விட்டுவிடவேண்டும்; இன்றேல் விரைவாகவே ஒழிந்துபட வேண்டும் என்பது, வெகு வெகு நீண்ட காலமாகவே சரிதம் கூறிவரும் உண்மை. உழைக்காமலிருந்து கொண்டே, உல்லாச வாழ்வு வாழ வேண்டும் என்றெண்ணுகிறவர்கள் அல்லது அந்த முறையில் பழகியவர்கள் அல்லது அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள் ஆகிய இந்த ஒருவகையார்தான் சமுதாய ஒழுங்குக்கு ? சமாதானத்திற்கு வைரிகள், அவற்றை விரட்டியடிக்கும் விஷக் கிருமிகள் என்பதை உலக முழுவதுமே உணரத் தலைப்பட்டு விட்டது; அதுமட்டுமல்ல ஒழிக்கவும் தலைப் பட்டுவிட்டது. இந்த உல்லாசபுரியினருக்கு அன்று தொட்டு இன்றுவரை, அவர்களின் உல்லாசபுரி ஒழிந்துவிடாவண்ணம் பாதுகாத்துவரும் அரண்கள் பலவுண்டு....

7. இனி நம் கடன்!

7. இனி நம் கடன்!

தமிழர்களின் புத்தாண்டு நல்ல அறிகுறிகளோடு காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் தை பிறப்பதும், பொங்கல் வைப்பதும் வழக்கமாக நடைபெற்று வரக்கூடியதுதான் என்றாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரிய இருளில் சிக்கித் தவித்துத் தன்னிலை மறந்து தாசி மக்களாய் – வேசிமக்களாய் வாழ்ந்த தமிழினம், அவ்விழிவைத் துடைத்துத், தம் மானிடத் தன்மையைப் பேணி, நல் வாழ்வு வாழ்வதற்கான ஊன்றுகோலைப் பெறுவதற்கு வழி பிறக்கவில்லை. இந்தப் புத்தாண்டைக் கருவியாகக்கொண்டு தந்தை பெரியாரவர்களால் தமிழ் மக்களுக்கு ஊன்றுகோல் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் நல்ல அறிகுறி என்கிறோம். ஏய்க்கப் பிறந்தவன் பார்ப்பான் – ஏமாறப் பிறந்தவன் தமிழன் என்று பார்ப்பனர்கள் எழுதிவைத்துக் கொண்டிருப்பதை நடைமுறையில் வற்புறுத்திக் கொண்டிருந்தன சங்கராந்தி அதுபோன்ற மற்றவைகள். அதாவது தமிழனுக்கு உரியது, பெருமை தரக்கூடியது எதெது உண்டோ, அதெல்லாவற்றையும் உருவைமாற்றி, பெயரை மாற்றிச் சமஸ்கிருதக் கலப்பை – ஆரியக்கலப் பையுடையது போல ஆக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள். ஏமாந்த இனம் அதை ஏற்றுக்கொண்டது. பொங்கல் சங்கராந்தியாக ஆனது....

6. கேள்வி – பதில்

6. கேள்வி – பதில்

(சித்திர புத்திரன்) கேள்வி     :      நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடா விட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்? பதில்       :      நமது மதமும் ஜாதியும். கேள்வி     :      நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனார்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? பதில்       :      மதமும் ஜாதியும். கேள்வி     :      நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன? பதில்       :      வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும்...

5. பொங்கல் நாள்!

5. பொங்கல் நாள்!

உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்! மழையென்றும் வெய்யல் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும் பாம்புகளுக்கும் பச்சை ரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற்குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்? இரட்டைப் பிள்ளைகளைச் சுமர்ந்து வருந்திய தாய், பின் ஈன்றபோது, அவற்றின் இன்முகம் கண்டு மகிழும் மகிழ்ச்சியைக்கூட, உழவனின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்லமுடியாது. ஆம்! தாய்மை யுணர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இன்பம் உண்டென்றால், அந்தத் தாய்மை உணர்ச்சி என்பது, உழவனின் தாய்மை உணர்ச்சியின் முன்பு ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே அல்லவா? வரப்புயர்ந்தால்தான் மற்றவை உயர முடியுமல்லவா? எங்கு சுற்றியும் உழவனின் காலடியை நோக்கித்தானே இவ்வுலகம் கிடக்கின்றது? அதனால்...

4. நாம் விரும்பும் தன்மை!

4. நாம் விரும்பும் தன்மை!

நம் கழகமும் நமது முயற்சியும் பிரச்சாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம். இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது நிலை எப்படி யிருக்கிறது? மிகமிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா? நாமும் நம் நாடும் உலகில் மிகவும் பழமையானவர்களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிகமிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம். இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந்திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும்...

3. விரைவில் உருவாக்குங்கள்!

3. விரைவில் உருவாக்குங்கள்!

நமது சென்னை சர்க்காரும், சில சமயங்களில் அறிந்தோ, அறியாமலோ ஒரு சில பயனுள்ள காரியங்களைச் செய்யப்போகின்றோம் என்று சொல்லி வைக்கிறார்கள். இதைக் கேட்கும் போது, நாம் அவர்களை அவசியம் பாராட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஏன்? அப்படியே நிறைவேற்றிவைத்து விடுவார்கள் என்கிற உறுதியினாலா? என்றால், நம்மைப் பொறுத்தவரை முழுமனதுடன் நம்புவதற்கில்லை யென்றாலும், ஏதோ இந்த அளவாவது செய்யப்போகிறோம் செய்வதாகத் திட்டமிருக்கிறது ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப் பத்திரிகைகளில் பார்க்கும்போது இப்படி வாயினாலாவது சொல்லுகிறார்களே என்பதை எண்ணித்தான் பாராட்டுகிறோம். இந்து மதக் கடவுளர்களின் வேஷங்களைப் போட்டுக்கொண்டு சினிமாப் படங்களில் நடிகர்கள் நடிப்பதென்பதைத் தடைவிதித்து ஒரு திட்டம் தயாரிக்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறது சென்னை சர்க்கார் என்கிற செய்தியை 2-வாரத்துக்கு முன்னால் படித்தபோது நாம் பெருமகிழ்ச்சியடைந்தோம். இதனை வரவேற்றுப் பாராட்டி, தஞ்சையில் கூடிய மத்திய திராவிடக்கழகக் காரியக் கமிட்டியும் நல்ல செயல்களை எந்த இடத்தில் கண்டாலும் நாங்கள் பாராட்டத் தயங்கமாட்டோம் என்பதுபோலத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்நாட்டு மக்கள், இவ்வுலக...

2. நாடெங்கும் அடக்குமுறை எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டம்

2. நாடெங்கும் அடக்குமுறை எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டம்

சாந்தமும் சமாதானமும் அமைதியும் ஒழுங்குமான முறையில் சுருக்கமான ஊர்வலம் கொண்ட பொதுக் கூட்டத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப் படவேண்டு மென்று திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி, தீர்மானித்திருக்கிறது. அன்று மேற்கண்ட நடவடிக்கைகள் நடத்துவதில் மக்களுக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் போலீசு அதிகாரிகளுக்கும் சிறிதுகூட அதிருப்தி ஏற்படாமல் ஒழுங்குக்கும், போலீசு அதிகாரிகளுக்கும் கட்டுப்பட்டு நடந்துகொண்டு கொண்டாட வேண்டும். தமிழ் நாட்டில் கட்டாய இந்தி ஒழிக தமிழ் வாழ்க திராவிடநாடு திராவிடருக்கே அடக்குமுறை ஒழிக! என்பதைத்தவிர வேறு ஒலிகள் கண்டிப்பாக, கண்டிப்பாக வேண்டாம். ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! குடி அரசு 01.01.1949 12-நாள் பாடம். கும்பகோணம் உரிமைப் போராட்டம் 19-12-1948ல் தொடங்கி 30-12-1948ம் நாளோடு 12 நாட்கள் நடந்து முடிந்திருக்கின்றது. இப்போராட்டம் பேச்சுரிமையைப் பிடுங்கும் விதத்தில், சர்க்கார் பல ஊர்களிலும் 144 போட்டு, கழகத்தின் அமைதியான போக்கிற்கு, சமாதான முறையில் செய்துவரும் போராட்டத்திற்கு, மறைமுகமாக அழிவையுண்டாக்க முயற்சிக்கிறார்கள் என்று அறிந்ததினாலேயே, அதை நாம் எதிர்க்கிறோம்...

1. கும்பகோணம் போராட்டம்

1. கும்பகோணம் போராட்டம்

உரிமைப் போராட்டத்தை நிறுத்தவேண்டுமென்று, தஞ்சையில் 28.12.1948ம் நாள் நிர்வாகக் கமிட்டி முடிவு செய்தது. அதையொட்டி 29-12-1948ல் தலைவர் பெரியாரவர்கள் கொடுத்த அறிக்கை:- கும்பகோணத்தில் சர்க்காரால் திராவிட கழகப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக அநீதியாகப் போடப்பட்ட 144-அய் எதிர்த்து நடத்திய போராட்டத்தை 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கடுமையான தடியடிப் பிரயோகத்தால் நிறுத்த சர்க்கார் முயற்சி செய்து பார்த்தும், அம்முயற்சி அவர்களுக்கும் பயன்படாமல் மேலும் மேலும் போராட்டம் மக்களுக்குள் வேகத்தையும் உணர்ச்சி யையும், ஊக்கத்தையும் கொடுத்துத் தொடர்ந்து நடந்து வந்ததால் 26-ந் தேதி முதல் சர்க்கார் தடியடியை நிறுத்திக் கொண்டதோடு உத்திரவை எதிர்த்தவர்களையும் எதிர்ப்புக்கு ஏற்பட்ட சட்ட நிபந்தனைப்படி அரஸ்டு செய்யாமலும் விட்டு விட்டதால். இனி அங்கு போராட்டம் தேவை இல்லை என்று கருதி போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று 28-ந்தேதி கூடிய திராவிட கழக மத்திய நிர்வாகக் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. நாளையோடு நிறுத்தப்பட்டுவிடும்.  ஆகவே கும்பகோணத்துக்கு வெளியூரிலிருந்து வந்த தொண்டர்கள் அருள்கூர்ந்து...