புண்படுகிறது என்ற கூக்குரலுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி!
மத உணர்வைப் புண்படுத்துகிறார்கள் என்று எதற்கெடுத்தாலும் கூறிக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதும் சங்கிகளின் வழக்கமாகிவிட்டது. கமலஹாசனின் `தக் லைஃப்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் வழியாக கருத்துரிமையை நிலைநாட்டி இருக்கிறது. தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கமலஹாசன் பேசியதற்காக கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த பேச்சுக்காக கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. இப்போது உச்ச நீதிமன்றம் எவரையும் மன்னிப்பு கேட்க வைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குக் கிடையாது, என்று கர்நாடக நீதிமன்றத்தின் தலையில்குட்டு வைத்திருக்கிறது. படத்தைத் திரையிடவும் உத்தரவிட்டுள்ளது. தணிக்கைக் குழு அனுமதித்ததற்குப் பிறகு ஒரு படத்தை திரையிட முடியாது என்று சட்டத்தை எவரும் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள் என்று கூறி கருத்துரிமை பறிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது...
