Author: admin

தமிழீழ அரசுக்கு விடுதலை பெற்ற தெற்கு சூடான் அங்கீகாரம் 0

தமிழீழ அரசுக்கு விடுதலை பெற்ற தெற்கு சூடான் அங்கீகாரம்

ஆப்பிரிக்காவில் உள்ளது சூடான் நாடு. இது ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடாகும். இங்கு ராணுவ புரட்சி நடத்தி 1989 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த ஒமர் அல் பக்ஷீர் இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழங்குடி இன மக்களும், கிறிஸ்துவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். வடக்கு தங்களை புறக்கணிப்பதாக தெற்குவாசிகள் கருதினர். தெற்கில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தெற்கு சூடானை தனியாக பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி போராடி வந்தது. இந்த இயக்கம் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தது. 2005 ஆம் ஆண்டு அரசுக்கும், இந்த இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 2011 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி நாட்டை பிரிப்பது என்று முடிவானது. ...

ஆலோசனைகள் இலவசம் 0

ஆலோசனைகள் இலவசம்

நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது, சில யோசனைகளை இலவசமாக முன் வைக்கலாமே என்று மனது துடித்தது, அதனால் சில இலவச யோசனைகள்….. தீவிரவாதிகள், விமானத்தைக் கடத்தப் போகிறார்கள்; ரயிலைக் கவிழ்க்கப் போகிறார்கள்;பெருநகரங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்போவதாக செய்திகள் வருகின்றன. எனவே, நாடு முழுதும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்கள். விடுதிகளில், சோதனை சாலைகளில், வாகனங்கள் விடிய விடிய சோதனை;இப்படி ஒவ்வொரு முறையும் ‘குடியரசு’, ‘சுதந்திர நாள்’ வரும் போதெல்லாம் மக்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். எனவே அரசுக்கு ஒரு ஆலோசனையை முன் வைக்கிறோம். இத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தல் வரலாம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு வரலாம் என்று கூறி, காவல்துறையினர், பல நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருவதில்லை. அதேபோல் நாட்டின் பயங்கரவாதத்தைத் தடுக்க, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற – சுதந்திர நாள், குடியரசு நாளையும் காவல்துறை ரத்து செய்து விட்டால், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக, அன்றாட வாழ்க்கையை கவனிப்பார்களே! தமிழ்நாட்டில்...

விடியல் எப்போது? – தமிழேந்தி 0

விடியல் எப்போது? – தமிழேந்தி

கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு? கொஞ்சம்நீ எண்ணடா தோழா! – இந்த அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம் அல்லல்கள் தீருமா தோழா! வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள் வஞ்சகம் கொஞ்சமோ தோழா! – நாளும் தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை சொரணையே இல்லையே தோழா! தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா தேர்தலில் கூட்டணி தோழா! – விலை பேசியே பெற்ற அன்னையை விற்றும் பிழைப்பது பிழைப்போ தோழா! அம்மவோ… எத்தனை உயிர்க்கொலை அங்கே! அழுகுரல் தொடருதே தோழா! – சே… சே… பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா? பச்சை நரித்தனம் தோழா! ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம் இங்கென்ன நிலையடா தோழா! – நாளும் வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி வேட்டைக்குத் தீர்வென்ன தோழா! துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும் சொந்தக்கை வேண்டுமென் தோழா! – முற்றி வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர் விடியலைக் காட்டுமென் தோழா! பெரியார் முழக்கம் ஜனவரி...

பொன்மொழிகள் – ஜாதி ஒழிய வேண்டும் 0

பொன்மொழிகள் – ஜாதி ஒழிய வேண்டும்

எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்கவேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்படச் ஜாதி ஒழிய வேண்டும் விடுதலை 131161 நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால் அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்வை ஒழிக்கவேண்டாமா? நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் ஜாதிநோய்க்கான மூலகாரணங்களைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும் விடுதலை 250762

0

சேஷசமுத்திரம் ஜாதிவெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடந்த ஜாதிவெறித் தாக்குதலை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட சார்பில் 24.08.2014 மாலை 3.00 மணிக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஜாதி வெறியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் காவல்துறையை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. 50க்கும் அதிகமான தோழர்களை காவல்துறை கைது செய்து மாலை விடுவித்தது.