Author: admin

பார்ப்பனரின் கனவு பலிக்காது 0

பார்ப்பனரின் கனவு பலிக்காது

வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களின் வெற்றியும் தோல்வியும் ஸ்ரீமான்கள் பனகால் ராஜா, ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களின் வெற்றியையும் தோல்வியையும் பொறுத்திருப்பதாகவே நமது பார்ப்பனர் கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கனவு கண்டு கொண்டு லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் சர்வப் பிரயத்தனத்தையும் இதற்காகவே செலவழித்து வருவ தோடு பஞ்சதந்திரங்களையும் செய்து வருகிறார்கள். அல்லாமலும், மற்ற இடங்களிலும் தங்கள் கட்சி ஆட்களே வெற்றி பெறுவதற்காக ஓட்டர் களை ஏமாற்றும் பொருட்டு பனகால் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டா ரென்றும், ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வெற்றிபெற்றுவிட்டா ரென்றும், மற்றும் பல விடங்களில் பார்ப்பனக் கட்சியே வெற்றிபெறுமென் றும், ஆதலால் அல்லாடி அவர்களே அடுத்த தடவைக்கு முதல் மந்திரியாக நியமிக்கப்படப் போகிறாரென்றும் பொய்க் கட்டுகள் கட்டிவிட்டுப் பஞ்சாங் கப் பார்ப்பனர், காபி ஓட்டல் பார்ப்பனர், வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர், பரிசாரகப் பார்ப்பனர் முதல் கொண்டு எல்லா பார்ப்பனர்களும் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவ்வித திண்ணைப் பிரசாரங்...

‘லோகோபகாரி’யின் மயக்கம் 0

‘லோகோபகாரி’யின் மயக்கம்

31-5-28 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில், “…………………..குழந்தைகளுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நன்று. ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின் பிரசாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இது முடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்ல வென்று நமக்குத் தோன்றுகிறது” என்று எழுதியிருக்கின்றது. இப்படி எழுதி இருப்ப தானது சீர்திருத்தக்காரருக்கு தலையையும் அதன் விரோதிகளான பார்ப்பனர் களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது. ‘குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை’ என்று தன்னாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்கு கேடு உண் டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் ‘லோகோ பகாரி’க்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை. கடைசியாக “இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய...

அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை 0

அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை

அருப்புக்கோட்டையில் சுகாதார வார கொண்டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத்தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப்பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு “முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிராமணன் தான் பாட வேண்டும்” என்று சொல்ல, உடனே அங்கிருந்த கூட்டம் ‘சூத்திரன்’ என்று சொன்னதற்காக அக்கிராசனரை மன்னிப்பு கேட்கும்படி கேட்கவே, அக்கி ராசனர் மன்னிப்பு கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுய மரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள். பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்யவொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும்...

கக்ஷிகள் 0

கக்ஷிகள்

தயவு செய்து ஊன்றிப் படியுங்கள், உங்கள் நண்பர்களையும் படிக்கச் சொல்லுங்கள். அடுத்த வாரம் நடைபெறப்போகும் சட்டசபைத் தேர்தலில் பெரும் பாகம் இரண்டு கக்ஷிகளின் பெயர்களே அடிபடுகின்றன. அவற்றின் பெயர் களுள் ஒன்று ஜஸ்டிஸ் கக்ஷி, மற்றொன்று சுயராஜ்யக் கட்சி. இவை தவிர சுயேச்சைக்காரர் என்று சிலர் சொல்லிக் கொள்வதும் உண்டு. சுயேச்சைக் கக்ஷி ஆனால் அச் சுயேச்சைக்காரர்களுக்கு மெய்யாகவாவது, பொய் யாக வாவது, வேஷத்திற்காவது ஒரு ஸ்தாபனமோ கொள்கையோ இல்லாமலும் சுயேச்சை என்றால் சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன்னிஷ்டம் போல் தான் நடந்து கொள்வதைத் தவிர வேறு எவ்வித இயக்கத்திற்கும் கொள்கைக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதே அதன் கருத்து. அல்லா மலும், அவர்களில் (சுயேச்சைக்காரர் என்பவர்களில்) ஒருவருக்கொருவர் கட்டுப் பட்டவர்கள் அல்ல என்பதும், குறைந்தது இரண்டு பேராவது சேர்ந்து ஒரு அபிப்பிராயம் கொண்டவர்கள் என்று சொல்லுவதற்கும் போது மான ஒற்றுமை இல்லாதவர்கள். அப்பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் ஜஸ்டிஸ் கட்சி, சுயராஜ்யக் கட்சி...

மறுபடியும் பகிஷ்காரப் புரட்டு 0

மறுபடியும் பகிஷ்காரப் புரட்டு

சைமன் கமீஷன் விஷயமாகப் பார்ப்பனர்கள் ஆரம்பித்த பகிஷ் காரப் புரட்டுக்கு ஒருவிதத்தில் சாவுமணி அடித்து விட்டதானாலும் மறுபடி யும் சிலர் செத்த பாம்பை ஆட்டுவது போல் சத்தில்லாத விஷயங்களைக் காட்டிக் கொண்டு பாமரமக்களை ஏமாற்ற புதிது புதிதாக வழி கண்டுபிடித்து தங்கள் தங்கள் அரசியல் புரட்டுத் தேரை ஓட்டப் பார்க்கின்றார்கள். இனி இம்மாதிரியான புரட்டுகளுக்கெல்லாம் பாமர மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றே உறுதி கூறுவோம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பஹிஷ்கார வேஷம் இனி செலா வணியாகாது என்று தெரிந்திருந்தாலும் அடுத்து வரப் போகும் தேர்தல் களுக்கு தங்களுக்கு அனுகூலமாக ஏதாவது மார்க்கம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமுடையவர்களும் பார்ப்பனரல்லாதார் கக்ஷி வலுப்படுவதன் மூலம் தங்கள் வாழ்வுக்கு பங்கம் வந்து விடுமோ என்கின்ற சுயநல வாதிகளும் சேர்ந்து பகிஷ்காரம் பகிஷ்காரம் என்று போலிக் கூக்குரல் இடுகின்றார்கள். அதைப் பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை. ஆனாலும் பகிஷ்காரக் கூச்சலில் ஏதாவது ஒரு...

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் 0

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்

. முதலியார் அவர்கள் சிறிது காலம் உறங்கிக் கிடப்பதும் பிறகு திடீரென்று பூர்வக்கியானம் பெற்றவர் போல் நாட்டுக்கு பெரிய அழிவு வந்துவிட்டதாகவும் அதைத்தான் காப்பாற்றப் போகின்றதாகவும் வேஷம் போட்டுக் கொண்டு சீர்திருத்தக்காரர்களால் ஆபத்து! ஆபத்து! என்று சப்தம் போடுவதும் அதன் பேரில் ஏதாவது இரண்டு கிடைத்தால் வாங்கிக்கொண்டு பொறுக்கமுடியாமல் ‘நான் அப்படி செய்யவில்லை இப்படி நினைக்க வில்லை. அதற்கு இதல்ல அருத்தம் அதல்ல பொருள்’ என்று பல்லைக் காட்டுவதும் ஆகிய காரியத்திலேயே இருந்து வருகிறார். உதாரணமாக கொஞ்ச காலத்திற்கு முன் சீர்திருத்தம் என்கின்ற தலையங்கம் இட்டு ஒரு வியாசத்தில், தற்காலம் நடைபெறும் சீர்திருத்தத்தால் நாட்டிற்கு பெரிய ஆபத்து என்றும் சீர்திருத்தக்காரர்கள் மிக்க மோச மானவர்கள் என்றும் ஜனங்கள் நினைக்கும்படி எழுதினார். ‘குடி அரசு’ அதற்கு தகுந்த ஆப்புக்கடாவினவுடன் ‘நான் அப்படி எழுதவில்லை இப்படி எழுதவில்லை’, ‘அதற்கு இதல்ல அர்த்தம்’ என்று சமாதானம் சொல்லி அமர்ந்தார். இப்போது பல இடங்களில் மூடநம்பிக்கை ஒழிந்த...

சுயமரியாதைத் திருமணங்கள் 0

சுயமரியாதைத் திருமணங்கள்

இந்த வாரம் அநேக இடங்களில் இருந்து சுயமரியாதைத் திருமணங் கள் நடந்ததாக சமாச்சாரங்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆனாலும் அவற்றில் பெரிதும் பார்ப்பனர்களை விலக்கி நடத்தியதாக மாத்திரம் தெரிய வருகின்றனவேயல்லாமல் மற்றபடி அவை முழுவதும் சுய மரியாதைத் தத்துவப்படி நடைபெற்றிருப்பதாக சொல்லுவதற்கில்லா மலிருப்பதற்கு வருந்துகின்றோம். ராமநாதபுரம் ஜில்லா சுக்கிலநத்தத்தில் நடந்த மூன்று திருமணங்களையும் மதுரையில் நடந்த ஒரு திருமணத் தையுமே பரிபூரண சுயமரியாதைத் திருமணங்களென்று சொல்லலாம். சுயமரியாதைத் திருமணத்திற்கும் அது அல்லாத திருமணத்திற்கும் நாம் குறிப்பிடும் வேறுபாடுகள் என்ன வெனில், சுயமரியாதை அற்ற திருமணமென்பது 1. மற்றவர்களைக் காட்டிலும் ஜாதியாலோ சமயத்தாலோ தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிற ஆச்சாரியன் என்பவனைக் கொண்டு மணச்சடங்கு நடத்துவது. 2. மணமக்களுக்கு, மணமக்கள் அறியாத பாஷையில் சடங்கு வாக்கியங்களைச் சொல்வது. 3. மணமக்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொருள் விளங்காத சடங்குகளைச் செய்விப்பது. 4. இன்னின்ன காரியத்திற்காக இன்னின்னவைகளைச் செய்கிறோம் என்கின்ற குறிப்பில்லாமல், வழக்கம்,...

சர்.சி.பி. அய்யரின் விஜயம் 0

சர்.சி.பி. அய்யரின் விஜயம்

சென்னையில் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நடைபெற்று வந்த காலித் தனங்களும் போலீசாரின் அலக்ஷியமும், சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் இந்தியாவை விட்டு கப்பலேறியும் அடங்கிக் கிடந்தது. இப்போது அவர் ஜினிவாவிலிருந்து இந்தியாவுக்கு வர கப்பலில் காலடி வைத்த உடன் பழைய படி ஆரம்பமாய் விட்டது. காலிகள் கூட்டங்களில் கல்லெறியவும், மோட்டார் டயர்களைக் கிழிக்கவும், பலவந்தமாய்த் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அவர் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் காலித்தனங்களும், போலீசைப் பற்றி பயமற்ற தன்மையும் கடைத்தெரு விலும் மூர் மார்க்கட்டிலும் விற்க ஆரம்பமாய் விட்டது. இது எங்குபோய் நிற்குமோ தெரியவில்லை. “முள் வாழையின் மேல் பட்டாலும் வாழைக் குத்தான் கேடு, வாழை முள்ளின் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு” என்பது போல் காலித்தனம் நடந்தாலும் பார்ப்பனரல்லாதாருக்குத் தான் உபத்திரவம். அதை அடக்கப் பிரயத்தனப் பட்டாலும் பார்ப்பனரல்லா தாருக்குத்தான் உபத்திரவம் என்கிற நிலையில் நமது பார்ப்பனர்கள் நம்மை வைத்துக் கொண்டு தங்கள் சூழ்ச்சி ரதத்தை ஓட்டுகிறார்கள். குடி...

பொய்ச் சமாதானம் 0

பொய்ச் சமாதானம்

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மண்ணடியில் ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி ஒன்றும் பேசவில்லை, ஒன்றும் பேசவில்லை என்று அய்யங்கார் பத்திரிகைகளும் அவரிடம் கூலி வாங்கும் பத்திரிகைகளும் விளம்பரப் படுத்திய வண்ணமாகவே இருக்கின்றன. அய்யங்கார் சொன்னதாக வைத்துக் கொண்டாலும் யாருக்கும் ஒன்றும் முழுகிப் போகவில்லை. தொழிலாளிகளை ஏமாற்றும் விஷயத்தில் ஸ்ரீமான் அய்யங்காருக்கு ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் தயவு வேண்டி வந்து விட்டதால் கூலி கொடுத்து மறுக்கிறார். ஆனால் நன்னிலத்தில் ஸ்ரீமான் நாயுடுகாரை தென்னாட்டுத் திலகரும் மாறி விட்டார், முதலியார் மாரீசனாய் விட்டார், ஆரியாவும் நாயக்கரும் வெளிப் படையாய் காங்கிரசுக்கு விரோதமாய்ப் போய் விட்டார்கள்; இவர்களை காங்கிரசை விட்டு வெளியாக்கி காங்கிரசை சுத்தப்படுத்தும் வேலையையே இவ்வருஷம் செய்யப் போகிறேன் என்று சொன்னதோடு கூட்டத்தில் இருந்த ஒருவர் முதலியார் கூடவா மாறி விட்டார் என்று கேட்டதற்கு ஏழு கிணத்து வீதியில் போய் கேட்டால் தெரியு மென்று சொன்னாரே; இதுகள் அப்போதே பல பத்திரிகைகள் இருந்ததே அதுகளை ஏன் மறுக்கவில்லை?...

கையெழுத்து போடக் கூடாது 0

கையெழுத்து போடக் கூடாது

இந்து மத பரிபாலன மசோதா என்னும் இந்து தேவஸ்தான மசோதா இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் சென்னை சட்டசபையில், நமது பார்ப்பனரின் கடுமையான எதிர்ப்பை ஜெயித்து நிறைவேறி, அரசாங்கத்தார் சம்மதம் பெற்று சுமார் 2 வருஷ காலம் அமுலிலும் இருந்து வந்த பிறகும் நமது பார்ப்பனர்கள் அதில் சில சட்ட சம்மந்தமான பிரச்சினைகளைக் கிளப்பி ஹைக்கோர்ட்டில் தங்களுக்குள்ள சட்ட ஞானத்தையும் செல்வாக் கையும் கொண்டு விவகாரம் தொடுத்து அச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்க பிரயத்தனப்பட்டதால் மறுபடியும் ஒருமுறை அச்சட்டம் சட்டசபைக்கு வர நேர்ந்தது. அந்தப்படி சட்டசபைக்கு வந்த சமயத்தில் நமது பார்ப்பனர்கள் ராஜீய இயக்கங்களையும் ஸ்தாபனங்களையும் தாங்கள் கைப்பற்றிக் கொண்ட தனால் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைக் கொண்டு சில பார்ப்பனரல்லாத சட்ட சபை அங்கத்தவர்களை (அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றால் இந்த தேவஸ்தான சட்டம் ஆரம்பத்தில் அதாவது 3, 4 வருஷங்களுக்கு முன்னால் தயாரிக்கும் போது கூட உதவியாயிருந்த வர்களும் இச்சட்டத்தை ஏற்படுத்தத் தீவிர...

செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு 0

செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு

இந்த, நம் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன என்றால் தெய்வ எத்தனம் என்று வெகு சுலபமாக பதில் சொல்லிவிடுகின்றார்கள். இப்படிப் பதில் சொல்லுபவர்களே தான் பெரும்பாலும் தங்களை ஆஸ்திகர்கள் என்றும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளு கின்றார்கள். இம் மாதிரி தொட்டதற்கெல்லாம் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்காமலும் கண்டுபிடிக்க ஒரு சிறிதாவது முயற்சிக்காமலும் சோம் பேறி ஞானம் பேசுவதுதான் நமது மத இயலாகவும் பெரியோரின் ஞான மாகவும் ஆஸ்திகமாகவும் போய்விட்டது. இப்போது முன்னுக்கு வந்திருக் கும் மற்ற நாட்டார் எல்லோரும் தங்கள் புத்திக்கும் முயற்சிக்கும் மதிப்புக் கொடுத்தே மேல்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையை முதலில் உபாத்தியாயர்கள் உணர வேண்டும். இந்த நிலைக்கு பிள்ளை களையும் கொண்டு வர வேண்டும். அம்மாதிரி நிலைமை பெற்ற மக்கள் உள்ள தேசம் எந்த விதத்திலும் முன்னடைந்தே தீரும். இன்று இவ்விடம் பல அறிஞர்கள் பலவிஷயங்களைப் பற்றி உபந் நியாசம் செய்தார்கள். அவைகளில் கிராம...

பார்ப்பன பிரசாரத்தின் தன்மை 0

பார்ப்பன பிரசாரத்தின் தன்மை

மகா மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சாஸ்திரியார் அவர்கள் தென் ஆப்பிரிக்கா ரவுண்ட் டேபிள் கான்பரன்சுக்கு சர்க்காரால் நியமிக்கப்பட்டு போவதை ஒட்டி ‘இந்து’ பத்திரிகை பிரமாதமாய் எழுதி இருப்பதோடு, அவரது படத்தையும் தனது பத்திரிகையில் போட்டு அவரை விளம்பரப் படுத்தியிருக்கிறது. ஸ்ரீமான் சாஸ்திரிகள் இந்து பத்திரிகையின் கோஷ்டிக்கும் அதன் கொள்கையான சுயராஜ்யக் கட்சிக்கும் விரோதமானவர். அப்படி யிருந்தும் அதாவது தங்களது கோஷ்டிக்கும் தங்களது கொள்கைக்கும் விரோதமாயிருந்தும் ஸ்ரீமான் சாஸ்திரியார் பார்ப்பனர் என்கிற காரணத்துக் காக அவரை விளம்பரப்படுத்தி தூக்கி விடுகிறது. அதுபோலவே ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களும் சர்க்கார் உத்தியோகஸ்தராயிருந்தும், சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாய்ப் பேசிக்கொண்டிருந்தும் சர்க்கார் மனுஷனாக மேல் நாட்டுக் குப் போயிருந்தும்கூட அவரது பிரயாணத்தையும், வருகை, வரவேற்பு, உபசாரம் முதலியதுகளையும், சென்றிருந்த இடத்தில் நடந்த விசேஷங் களையும் பேட்டி கண்டு பேசியதுகளையும் பார்ப்பனர் என்கிற காரணத்திற் காக படம் போட்டுத் தனது பத்திரிகையில் பிரசுரித்து விளம்பரப்படுத்தி யிருக்கிறது. ஸ்ரீமான்...

மகாஜன நேசன் 0

மகாஜன நேசன்

கோயமுத்தூரிலிருந்து வெளியாகும் ‘மகாஜன நேசன்’ என்னும் ஒரு சகோதரப் பத்திரிகை “கோயமுத்தூர் ஜில்லா தேர்தலும் கவுண்டரும்” என்கிற தலையங்கத்தின் கீழ் ஒரு வியாசத்தை பிரசுரித்துவிட்டு அதன் கீழ் பத்திராதிபர் குறிப்பாய், “இவ்வியாசத்தை பிரசுரம் செய்ததின் நோக்கம் யாதெனில் ‘குடி அரசு’ப் பத்திரிகையின் மேல் ஜனங்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் போக்கி உண்மைத் தொண்டு புரியும்படி தூண்டுதற்பொ ருட்டே வியாசத்தைச் சற்று அப்பத்திரிகையை உயர்த்திப் பேச இடமளித் தோம்” என்று எழுதி ஆசிரியர் என்று கையொப்பமிட்டிருக்கிறார். இதில் இவ்விதம் குறிப்பு எழுதியது அப்பத்திரிகை நடந்து கொள்ள வேண்டிய தன்மைக்கு மீறினதென்றும் ‘குடி அரசி’ன் மீது பொதுஜனங் களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்குமானால் அதைப் போக்குவதற்கும் ‘குடிஅரசு’ உண்மைத் தொண்டு செய்யாமலிருந்தால் அதைச் செய்யும்படி செய்வதற்கும் ‘மகாஜன நேசன்’ அணுக வேண்டிய வழி இது வல்லவென்றும் ‘நேசனுக்கும்’ அழுந்திக் கிடந்த பொறாமை இது ஒரு சந்தர்ப்ப மாய்‘நேசனை’ அறியாமலே நேர்ந்து விட்டதென்று மாத்திரம் இதுசமயம் தெரிவித்துக் கொள்ளுகிறோம்....

வேளாள கனவான்களின் பொறுப்பு 0

வேளாள கனவான்களின் பொறுப்பு

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தலுக்கு மூன்று ஸ்தானங் களுக்கு நான்கு கனவான்கள் நிற்கிறார்கள். மூன்று கனவான்கள்தான் வெற்றி பெறக்கூடும். இதில் தோல்வியடைவது யார் என்கிற விஷயத்தில் உண்மை யை ஒழிக்காமல் வெளியிட வேண்டுமானால், இது சமயம் உள்ள நிலைமை யின்படி, ஸ்ரீமான் சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் வேணாவுடையாக் கவுண்டர் அவர்களாவது அல்லது ஊ.ஏ. வெங்கிட்டரமணய்யங்கார் அவர்க ளாவது தோல்வியடைய நேரிடுமென்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுள் ஸ்ரீமான் பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் தோல்வியடைய நேரிட்டால் இச்சில்லா வாசிகள் பெரும்பான்மையாக உள்ளதும் பொறுப்பும் அந்தஸ்துமுள்ளதுமான வேளாள சமூகத்திற்கு தங்களது சமூக நலத்தை நாடும் யோக்கியதை இல்லையென்றுதான் சொல்ல வேண்டி வருமென்று சொல்லவே பயப்படுகிறோம். ஆனால் அச்சமூகத்திய தலைவரும் பிரதிநிதி யுமான ஸ்ரீமான் பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் தோல்வியடை வதில் ஆச்சரியமொன்றுமில்லை என்றும் சொல்லுவோம். ஏனெனில் சென்ற தேர்த லிலும் இதே மாதிரி அதாவது கொங்குவேளாள சமூகத்திற்கே இரண்டு கண்கள் என்று சொல்லத்தகுந்த மாதிரியில் இச்சில்லாவில் இரண்டு...

ஜஸ்டிஸ் கக்ஷி கனவான்களே! 0

ஜஸ்டிஸ் கக்ஷி கனவான்களே!

நீங்கள் உண்மையாய் பார்ப்பனரல்லாதாரின் நண்பர்களானால் உடனே கதரை உடுத்துங்கள். அதுதான் உங்களுக்கு பரீiக்ஷ. கதர் தரித்திரத்தைப் போக்கி எல்லோருக்கும் விடுதலை அளிக்கும். “காங்கிரஸ் சுயராஜ்ஜியம்” பார்ப்பனருக்கு மாத்திரம் உத்தி யோகமும் ஆதிக்கமும் அளிக்கும். குடி அரசு – பெட்டிச் செய்தி – 24.10.1926

யோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா? 0

யோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா?

வரப்போகும் சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகப் பார்ப்பனர்கள் எல்லோரும் அதாவது, உத்தியோக பார்ப்பனர், வக்கீல் பார்ப்பனர், மிதவாதப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், வாத்தியார் பார்ப்பனர், ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஆகிய எல்லோரும் ஒன்றுகூடி அவரவர்கள் தங்களுக்கும் எவ்வித அபிப்பிராய பேதமும் இல்லாமல், ஏதாவது கொஞ்சம் இருந்தாலும் அதை அடியோடு மறந்து விட்டு ஒரேமாதிரி பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பதைப்பற்றி பல தடவை எழுதி இருக்கிறோம். உதாரணமாக உத்தியோகப் பார்ப்பனர்கள் விஷயமாய், சர்.சி.பி. அய்யர் அவர்கள் ஜினிவா மகாநாட்டுக்கு அனுப்பப் பட்டபோது ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் இது சமயம் போகிறாரே என்று ஓலமிட்டதிலிருந்தே தெரிந்திருக்கலாம். மிதவாதப் பார்ப்பனர்கள் விஷயத்தில் மகா மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ‘இந்திய ஊழிய சங்கம் வெந்து போனதற்காக பணம் சேர்க் கிறேன்’ என்கிற பேரால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு சென்று பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி வைது பேசுவதிலிருந்தே தெரிய லாம். வக்கீல் பார்ப்பனர்கள் விஷயத்தில் “ஜமீன்தார் தொகுதிக்கு...

தமிழ்ப்பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள் 0

தமிழ்ப்பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள்

தஞ்சாவூர் “கரந்தை தமிழ்ச்சங்க”த்தினின்றும் “தமிழ்ப் பொழில்” என்னும் பெயரிய ஒரு திங்கள் வெளியீடு தமிழறிஞர் திருவாளர் ஆர்.வேங்க டாசலம் பிள்ளையவர்களை ஆசிரியராகக் கொண்டு ஓராண்டு வெளிப் போந்து நற்பயன் அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம் என்றும் இடைய றாது உரிய காலங்களில் வெளிவரற்குறிய சில முன் ஏற்பாடுகள் செய்தற் பொருட்டுப் ‘பொழில்’ சிறிது காலந்தாழ்ந்து வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்க்குள்ள அலுவல் மிகுதியால் சிறிய காலஅளவு கொஞ்சம் பெரிதாக நீண்டது. முன் ஏற்பாடுகள் முன்னரே செய்யப்பட்டிருக் கின்றன. நிற்க, ‘தமிழ்ப் பொழிலி’ன் முன்னேற்றங் கருதி உழைக்க ஆங்கில மும் தமிழும் கற்று வல்ல அறிஞராகிய திருவாளர்கள் நீ.கந்தசாமி பிள்ளை யவர்கள், எம். ஆர்.ஏ.எஸ்., அரசர்மடம் பள்ளிக்கூட தமிழாசிரியர் சாமி சிதம்பர உடையாரவர்கள் ஆகிய இருவரும் முன் வந்துள்ளார்கள். இவருள் முன்னவர் உதவி ஆசிரியர், பின்னவர் உடனின்று துணை செய்தலேயன்றி வெளியிடங் கட்குச் சென்று பொழிற்கு அன்பர்களைத் திரட்டும் உதவியாளர் ஆவார். திருவாளர் உடையாரவர்கள்...

ஈரோடு முனிசிபாலிட்டி 0

ஈரோடு முனிசிபாலிட்டி

நாளது அக்டோபர் µ 19 – தேதியின் சுதேசமித்திரனில் ‘ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு ஒரு மறுப்பு’ என்னும் தலையங்கத்தின் கீழ் ஈரோடு சேர்மென் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களுடைய கடிதம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஸ்ரீமான் நாயக்கர், ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களைப் பற்றி எழுதியிருந்ததற்குப் பதில் அனுப்பி பிரசுரம் செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஸ்ரீமான் நாயக்கர் அப்படிச் செய்ய வில்லையென்றும் ஸ்ரீமான் முதலியார் எழுதியிருக்கிறார். அது உண்மைக்கு விரோதமானது. ஸ்ரீமான் முதலியார் ‘குடி அரசு’க்கு எழுதிய மறுப்பில் ஸ்ரீமான் நாயக்கருக்கும் தனக்கும் பழைய விரோதமிருப்பதாகக் குறிப்பிட்டு சில விஷயங்கள் எழுதியிருந்தார். அவ்விரோதத் தன்மையைப் பொறுத்தவரை விவகரிக்காமல் நிறுத்தி விட்டு அவர் மறுத்த விஷயத்திற்கு மாத்திரம் அவருடைய மறுப்பையும் அவற்றிற்குச் சமாதானத்தையும் முறையே வெளியிடத் தீர்மானித்தே ஸ்ரீமான் முதலியார் பொய்யென்று மறுத்த மூன்று முக்கிய விஷயங்களை அப்படியே எடுத்தெழுதி அவற்றிற்கு சமாதானம் தக்க ஆதாரத்துடனும் தேதி கையெழுத்து முதலியதுகளுடனும் எழுதிவிட்டு இவற்றையும் ஸ்ரீமான் முதலியார் மறுக்கிறாராவென்று...

செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு 0

செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு

“திரு. ரெட்டியார் அவர்களே! உபாத்தியாயர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதர சகோதரிகளே! இந்த ஆசிரியர் மகாநாட்டுக்கு இந்த ஜில்லா போர்டார் என்னைத் தலைவனாக யிருக்க வேணுமாய் கேட்டுக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. ஏனென்றால் இது “கல்வி” என்பது சம்பந்தமான ஆசிரியர் மகாநாடாயிருப்பதால், அந்தக் கல்வி என்பது ஒரு சிறிதும் இல்லாதவனும், ஆசிரியர் என்பவர்களிடத்தில் கொஞ்சமாவது பயிற்சி பெறாதவனுமான நான் இம் மகாநாட்டுக்கு தலைமை வகிக்க எவ்விதத்தில் தகுதியுடையவன் ஆவேன் என்பதுதான். நான் என்னுடைய ஒன்பதாவது பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக் கூடத் திலுமே வாசித்தவனும் அல்ல. அந்த ஒன்பது வயதிற்கு உள்பட்ட காலத்திலும் என்னை பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம், நான் வீட்டில் உள்ளவர்களுக்கு தொல்லை விளைவிக்காமலிருக்க வேண்டுமென்ற கருத்துக்கொண்டு ஓர் திட்டத்தில் காவலில் வைப்பதற்காகவே, அதுவும் ஒரு திண்ணைப் பள்ளி உபாத்தியாயர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தேன். அந்தப் பள்ளியில் இருந்த காலமும், உபாத்தியாயர்களுக்கும் பிள்ளை களுக்கும் தொல்லை விளைவிப்பதும், அவர்களிடம்...

தீ பா வ ளி                                                   கதர்!  கதர்!!  கதர்! ! ! 0

தீ பா வ ளி கதர்! கதர்!! கதர்! ! !

தீபாவளியை தேசபக்திக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறீர் களா? அல்லது தேசத் துரோகத்திற்கு உபயோகப்படுத்தப் போகிறீர்களா? நாளிது ஐப்பசி µ 19 ² க்குச் சரியான நவம்பர் µ 4 ² வியாழக் கிழமை இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் மிகுதியும் கொண்டாடத் தக்க தீபாவளி என்னும் பண்டிகை வரப் போகிறது. அப்பண்டிகை கொண்டா டுவது என்பதற்கு எண்ணெய் ஸ்நானம் செய்து புதிய வஸ்திர மணிந்து பட்டாசு சுட்டு பலகாரம் சாப்பிடுவதுதான் முக்கியச் சடங்காக இருக்கிறது. இவற்றுள் எண்ணெய் ஸ்நானம் செய்வதிலும் பலகாரம் செய்து சாப்பிடு வதிலும் நமது நாட்டிற்கு எவ்விதக் கெடுதியும் இல்லை. ஆனாலும் புதிய வஸ்திரமணிவது என்பது முக்கியமாக ஏழைகளின் வாயில் மண்ணைப் போட்டு அவர்களைப் பட்டினி கிடக்கச் செய்வதற்கும் பெரும் பாலும் நமது நாட்டுச் செல்வத்தை அன்னிய நாட்டார் கொள்ளை கொண்டு போவதற்குமே உதவுகிறது. நமது நாட்டிற்கும் நமது நாட்டுப் பெரும் பான்மையான மக்க ளுக்கும் நலமும் நல்வாழ்வும் உண்டாக...

மார்க்கெட்  நிலவரம் – சித்திரபுத்திரன் 0

மார்க்கெட் நிலவரம் – சித்திரபுத்திரன்

சட்டசபை ஓட்டு ஒன்றுக்கு               1 முதல் ரூ.5 ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக்காரருக்கு               ரூ.100 கணக்குப் பிள்ளைக்கு               ரூ. 50 பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு               ரூ. 25 கிராமாந்திரங்களில் செல்வாக்குள்ள குடித்தனக்காரருக்கு               ரூ.5000 முதல் 15000 வரை கடன் முனிசிபல் சேர்மென்களுக்கு               ரூ.1000 முதல் ரூ. 1500 வரை கடன் வைஸ் சேர்மென்களுக்கு               ரூ.250 முதல் ரூ. 500 போலிங் ஆபீசர்கள் நிலவரம் பஜாரில் இன்னும் புதுசரக்கு வராததால் வாங்குவாரில்லை. முனிசிபல்...

எது தொலைய வேண்டும் 0

எது தொலைய வேண்டும்

தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அரசியல் புரட்டர்களுக்கு பேச மேடையில்லாமலும் மதப் புரட்டர்களுக்கு மரியாதை இல்லாமலும், புராணப் பிரசங்கத்திற்கு இடமில்லாமலும் செய்து விட்டதோடு இவைகள் மூலம் அவரவர்களின் சொந்த வியாபாரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு விட்ட விபரம் இவைகளி னால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் நெருப்பில் விழுந்த புழுத் துடிப்பது போல் துடிப்பதினாலே விளங்கும். இதுபோலவே பார்ப்பன ஆதிக் கமும் புரோகிதர்கள் ஆதிக்கமும் ஆங்காங்கு ஒருவாறு மறைந்து கொண்டே வருவதும் வெள்ளிடைமலை. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் பதினாயிரம் பேருக்கு மேலாகவே போலி அரசியலையும், புரட்டுப் பார்ப்பனீ யத்தையும் விட்டு விலகி விட்டதாக அவர்கள் தங்கள் பெயரை வெளிப் படுத்தி இருப்பதையும், ஆயிரக்கணக்கான சடங்குகள் பார்ப்பனர்களை நீக்கி நடத்தி இருப்பதாக வெளியாகி வருவதையும், அநே கர் தங்கள் குலகுரு என்கின்ற போலிக் குருமார்களை நீக்கியிருப்பதையும் கவனித்துப் பார்ப் பவர்கள், இச்சுயமரியாதை இயக்கம் இத்தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம்...

கோயமுத்தூர் ஜில்லா தேர்தல் 0

கோயமுத்தூர் ஜில்லா தேர்தல்

கோயமுத்தூர் ஜில்லாவின் சார்பாக சென்னை சட்டசபைக்குப் பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்கள் மூன்று பேரும் பார்ப்பன அபேக்ஷகர் ஒருவரும் ஆக நான்கு அபேக்ஷகர்கள் நிற்கிறார்கள். இந்நான்கு கனவான் களும் பெயருக்கு மாத்திரம் தனித்தனிக் கக்ஷியைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் தத்துவத்தில் பார்ப்பனரல்லாத கக்ஷிக்கு மூன்று பேரும், பார்ப் பனக் கக்ஷிக்கு ஒருவருமாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, ஸ்ரீமான் அய்யங்கார் தேவஸ்தான மசோதாவையும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தையும் எதிர்ப்பதினாலும், ஸ்ரீமான் செட்டியார் முதலா னவர்கள் இவ் விரண்டையும் மனப்பூர்வமாய் ஆதரிப்பதினாலும் தெரிந்து கொள்ளலாம். நாம் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்தது போலவே சட்டசபைகள் மூலம் குடிமக்களுக்கு எவ்வித அரசியல் நன்மையும் செய்ய முடியவே முடியாது என்பதை இப்பொழுதும் சொல்லுகிறோம். ஆனால் வேளாள குடிமக்கள் இந்நாட்டில் உள்ள மற்ற எல்லா மக்களைவிட உயர்ந்த தன்மை உடையவர்களாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி விவ காரம் முதலியவைகளால் குடி கெடுவதையும் வைதீகச் சடங்குகளால் தாழ்த்தப்பட்டு...

ஸ்ரீமான் சீநிவாச சாஸ்திரியார்                கொல்லத் தெருவில் ஊசி விற்பனை 0

ஸ்ரீமான் சீநிவாச சாஸ்திரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை

மகா மகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக ஊர் ஊராய் பிரசங்கம் செய்து வருகிறார். இந்த முறையில் கோயமுத்தூருக்கும் வந்து மாணவர் சங்கத்திலும் “வகுப்பு வாதத்தால் ஏற்படும் தீங்கு” என்பதைப் பற்றி பேசியிருக்கிறார். வகுப்பு வாதத்திற்கு ஏற்பட்ட கட்சி தன்னை ஜனநாயகக் கட்சியென்றும், தேசீயக் கட்சி என்றும் சொல்லிக் கொள்வது தகாது என்றும், இதைப்போல் இந்திய ராஜீயத் துறையில் அதிகமான கேட்டை விளைவிப் பது வேறெது வுமில்லை என்றும் கூறுகிறார். இதில் எவ்வளவு புரட்டுகள் இருக்கின்றன என்பதை யோசியுங்கள். முதலாவது, ஸ்ரீமான் சாஸ்திரி இந்திய மக்களின் சார்பாக பேசுவதற்கே யோக்கியதை அற்றவர் என்பதே நமதபிப்பிராயம். அவர் நமது சர்க்காருக்கு உள் உளவாயிருந்து தனக்குப் பெரிய அந்தஸ்தும் பட்டமும் பதவியும் பெற்றுக் கொண்டு தன்னுடைய பிள்ளை குட்டிகளுக்கும் பெரிய பெரிய உத்தி யோகத்தை வாங்கிக் கொண்டவர். அல்லாமலும்,தேசத்திற்காகவும் ஜனநாயக தத்துவத்திற்காகவும் பாடுபட வந்த அவதார மூர்த்தியாகிய மகாத்மா காந்தியை...

0

சோதனை காலம் சென்னை மாகாணத்தில் சிறப்பாய் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் பார்ப்பனீய ஆதிக்கத்தின் பலனாய் கட்டுக் குலைந்து, தாழ்த்தப் பட்டு சுயமரியாதையை இழந்து, நாட்டின் நலத்தை மறந்து ‘மூலபலச் சண்டை’ என்பது போல் தம்மில் ஒருவர் மேல் ஒருவர் பகைமை கொண்டு அரசியலிலும் சமூக இயலிலும் மீளா அடிமையாகி உழல்வதைக் கண்ட பெரியார்களான ஸ்ரீமான்கள் டாக்டர் நாயர், தியாகராயர், மகாத்மா காந்தி ஆகியோர் முறையே பார்ப்பனரல்லாதார் இயக்கமென்றும், ஒத்துழை யாமை இயக்கமென்றும் பல இயக்கங்களைத் தோற்றுவித்தனர். இவற்றை அறிந்த நமது பார்ப்பனர்கள் தங்களது கட்டுப்பாட்டாலும், செல்வத்தாலும், சூழ்ச்சியாலும், அதிகார வசதியாலும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கொல்லவும், மகாத்மாவின் ஒத்துழை யாமை இயக்கத்தை ஒழிக்கவும் முயற்சி செய்து வெற்றிக்குறியைக் கண்டு விட்டார்கள் என்றே சொல்லலாம். பார்ப்பனரின் இவ்வெற்றிக் குறிக்கு தமிழ் நாட்டைப் பொறுத்த வரை ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், திரு.வி.கலியாணசுந்தர முதலியார் போன்றோர்களும் இந்தியா தேசத்தைப் பொறுத்தவரை தேசபந்து...

‘குடி அரசு’ வாசகர்களுக்கு                           ஓர் உண்மையான முன்னறிவிப்பு 0

‘குடி அரசு’ வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு

அன்புள்ள வாசகர்களே! இதுசமயம் நமது ‘குடி அரசு’ வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத்தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி ‘குடி அரசு’க்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்கு மென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி. மூலம் அனுப்பிப் பார்க்க விருக்கிறோம். தேர்தல் முடிந்த உடன் வி.பி.திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர்களுக்கும், முன் பணமனுப்பாதவர்களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப்படமாட்டா. நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது ‘குடி அரசு’ அரசியலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, இதி காசம்,...

சுயமரியாதைச் சங்கங்கள் 0

சுயமரியாதைச் சங்கங்கள்

நமது சுயமரியாதை இயக்கமானது தமிழ் நாட்டில் எவ்வளவு பரவ வேண்டுமோ அவ்வளவு பரவிவிட்டதாகக் கொள்வதற்கில்லை. ஆனால் அது ஒரு விதத்தில் மக்கள் கவனத்தை பெரிதும் இழுத்துக் கொண்டும் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டும் வருகின்றது என்பதில் நமக்கு எள்ளளவு ஐயமும் இல்லை. ஆனால் இவ்வளவோடயே நாம் திருப்தி அடைந்து விட முடியாது. மந்திரிகள் ஆதரித்ததினாலும் சட்ட மெம்பர் முதலிய அறிஞர்கள் நற்சாக்ஷிப் பத்திரம் வழங்குவதினாலும் நமக்கு எந்த வித இலாபமும் ஏற்பட்டுவிடாது. அவர்களும் இதை ஏற்றுக் கொள்ளு கின்றார்கள் என்கின்ற அளவில் திருப்தி அடையலாமே ஒழிய வேறொன்றும் இல்லை. தவிர நமது இயக்கம் நம் நாட்டில் எவ்வளவு பரவி இருக்கின்றது என்று நினைக்கின்றோமா அதைவிட அதிகம் பரவி இருப்பதாகவே நமது எதிரிகள் பயந்து கிலிபிடித்து நடுக்கமுற்று வருகின்றார்கள் என்பது மாத்திரம் நமக்கு நன்றாய் விளங்குகிறது. தவிர நமது இயக்கத்தை பரப்பும் விஷயமாய் நாம் இன்னமும் அதிகமான வேலை செய்ய வேண்டியிருக்கின்றது. நமது மாகாணத்திலேயே...

தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு                ஒரு வேண்டுகோள் 0

தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

சென்னை மாகாண வட மத்தியபாக ஜமீன் தொகுதியான சித்தூர், செங்கல்பட்டு, சென்னை, கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப்பூர் ஆகிய ஜில்லாக்களின் ஜமீன்தாரர்கள் பிரதிநிதியாக சென்னை சட்டசபைக்கு வரப்போகும் தேர்தலுக்கு கனம் பனகால் ராஜா அவர்களுக்குப் போட்டியாக சென்னை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் என்கிற ஒரு பார்ப்பனர், ஜமீன்தார் என்கிற பேரால் நிற்கிற விஷயம் எல்லோரும் அறிந்ததே. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நாம் இதைப் பற்றி எழுதியிருந்தோம். ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் சட்ட சபைக்கு நிற்கும் நோக்கமெல்லாம் எவ்வகையிலாவது பனகால் ராஜாவை சட்டசபையிலிருந்து துரத்திவிட்டுப் பார்ப்பன ஆதிக்கத்தைச் சட்ட சபையில் நிலை நிறுத்த வேண்டும் என்கிற எண்ணமே. ஆதலால் பார்ப்பன ரல்லாத ஜமீன்தார்கள் ஓட்டுகளே 100க்கு 75 பேராக இருந்தும் பனகால் ராஜாவின் விரோதிகளான இரண்டொரு ஜமீன்தாரர்களின் ஆதரவையும் ஸ்ரீமான் அல்லாடி ஐயரின் வக்கீல் உத்தியோகத்தின் பலனாய் அடிமை கொண்ட சில ஜமீன்தாரர்களுடைய உதவியையும், மற்றும்...

ஏன் இவ்வளவு ஆத்திரம்? 0

ஏன் இவ்வளவு ஆத்திரம்?

திரு. வரதராஜுலுவுக்கு கொஞ்ச காலமாக ஒருவித பயமும் நடுக்க மும் ஏற்பட்டு, அதனால் மூளை கலங்கி, எப்போது பார்த்தாலும் சுயமரி யாதை இயக்க ஞாபகமும் கவலையும் ஏற்பட்டு, கனவிலும் சுயமரியாதை இயக்கம் என்கின்ற பேச்சைக் கேட்டால் நடுங்குவதாகத் தெரியவருகிறது. இதனாலேயே அவரது எழுத்தும் பேச்சும் எப்போது பார்த்தாலும் “சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும்” என்றும், “அதைத் தொலைப் பதே தேசீய வேலை” என்றும் “ஒன்றா சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும், இல்லாவிட்டால் நானாவது (அதாவது தானாவது) தொலைய வேண்டும்” என்றும் “இதற்காக பதினாயிரக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி வைத்திருக்கிறேன்” என்றும் “இந்த வேலையில்தான் மிகவும் முனைந் திருப்பதாகவும் இதற்கு தேசீயவாதிகள் உதவி செய்ய வேண்டும்” என்றும் பேசியும் எழுதியும் வருகிறார். அல்லாமலும் பொது ஜனங்களும் இந்த சுயமரியாதை இயக்கத்தை தெரியாத்தனமாக ஆதரிப்பதாகவும், இதனால் பெரிய ஆபத்து நேரிடப் போகின்றதென்றும் எழுதிவிட்டு கடைசியாக சுயமரியாதை இயக்கப் பிரசாரம் நடைபெறுவதால்தான் பார்ப்பனரல்லாதாரியக்கத்தையே தான் அழிக்க வேண்டியிருப்பதாகவும்...

செந்தமிழ்ச் செல்வி                                     ( மாத வெளியீடு ) 0

செந்தமிழ்ச் செல்வி ( மாத வெளியீடு )

நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலை சிறந்து நிற்கும். மேனாடுகளை நோக்க நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல்வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துக்களை ஒருங்கு திரட்டி உணர்த்தலால் மக்கள் அறிவை பண்படுத்து தலில் பத்திரிகைகள் வல்லன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் ‘அரசியல் கிளர்ச்சியில்’ பாய்ந்து செல்லும் வேகத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின் றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லாருக்கும் பயன்படத்தக்க ஒரு ஸ்திரமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத்தை பிணித்திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்ய வல்லன மாத வெளியீடுகளேயாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதா னமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளி வர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடுகளிற் சிறந்தது நமது “செந் தமிழ்ச் செல்வி” எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத் திலும்...

தமிழ்நாட்டிலிருந்து                             ‘மற்றொரு இந்தியத் தலைவர்’ 0

தமிழ்நாட்டிலிருந்து ‘மற்றொரு இந்தியத் தலைவர்’

பண்டித மோதிலால் நேரு அவர்கள் தனக்கு அசௌகரியம் ஏற்படும் போதெல்லாம் நம் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களில் ஒருவரைத்தான் பதில் (ஆக்டிங்) தலைவராய் நியமிப்பது வழக்கம். அது போலவே சென்ற வாரமும் தனக்கு லாகூரில் இருக்க சவுகரியமில்லாததால் ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை வந்து தனது ஸ்தானத்தை ஒப்புக்கொள்ள அழைத்து இருக்கிறார். முதல் தடவை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அழைப்புவந்தது. மறுதடவை ஸ்ரீமான் எ. ரங்கசாமி அய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மூன்றாம் தடவை ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரி களுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இனி நான்காந் தடவை கும்பகோணம் சக்கரவர்த்தி ஐயங் காருக்கு அழைப்பு வருமென்று எண்ணுகிறோம். ‘‘இந்தியாவின் பாக்கியமே பாக்கியம். அதிலும் தமிழ்நாட்டின் பாக்கியமே பாக்கியம்.’’ குடி அரசு – செய்தி விளக்கம் – 10.10.1926

யாருக்கு ஓட்டு கொடுப்பது – சித்திரபுத்திரன் 0

யாருக்கு ஓட்டு கொடுப்பது – சித்திரபுத்திரன்

ராஜு : என்னப்பா சுந்தரம் சட்டசபை எலக்ஷன் வந்து விட்டதே, கண்டவர்கள் எல்லாம் அபேக்ஷகராய் நிற்கிறார்களே இவர்களில் யாருக்கு ஓட்டுப் போடுவது. சுந்தரம்: யாருக்கோ ஒருவருக்குப் போட்டால் போகிறது. நாம் என்ன ஒத்துழையாதாரா? யாருக்கும் போடுவதில்லை என்று சொல்லுவ தற்கு. அதெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் ஒத்துழைப்பேற்பட்டதோடு ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஒத்துழைப் பதாய்ப் போய்விட்டது. ராஜு:நீ சொல்லுவது சரிதான். ஆனாலும், அதிலும் தராதரம் இல்லையா? சுந்தரம்: தராதரம் என்ன? சுயராஜ்ஜியக் கட்சிக்காரருக்குத்தான் போட்டு விடேன். ராஜு: அதென்ன அவ்வளவு அசார்சமாய்ச் சொல்லுகிறாய். சுயராஜ்ஜியக் கட்சி என்றால் என்ன? அதன் கொள்கை என்ன? அதன்றி வேறு கட்சிகள் என்ன என்ன இருக்கிறது? இவைகள் தெரிய வேண்டாமா? சுந்தரம்: ஓஹோ ! இதுவே இன்னமும் உனக்குத் தெரியாதோ. சரி சரி, நீ சரியான தற்குறி போல் இருக்கிறாய். சுயராஜ்யக் கட்சி என்பது அரசியல் கட்சி என்று பெயர். அது முதலில் ஒத்துழையாமை...

ஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம் 0

ஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்

காங்கிரஸ் என்றும், சுயராஜ்யக் கக்ஷி என்றும், தேசீயக் கூட்டம் என்றும் சொல்லப்படுவனவாகிய கூட்டங்கள் மக்களின் அறியாமையாலும் கவலைக் குறைவாலும் நாட்டில் செல்வாக்குப் பெற்றதன் பயனாக நம்நாடு மிகமிகக் கேவலமான நிலைமைக்கு வந்து விட்டதோடு அதனால் ஏற்பட்ட அரசியல் சுதந்திரங்கள் என்பவைகள் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தை தேடிக் கொடுத்துக் கொண்டு வருவதுடன் நாட்டைப் பிரித்து வைத்து ஏழை மக்களையும் பாமர மக்களையும் வதைத்துக் கொண்டு வருகின்றது. அதாவது மந்திரி பதவிகளும் நிர்வாக மெம்பர் பதவிகளும் ஐகோர்ட்டு ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜ் பதவி முதலியவைகளும் சட்டசபை மெம்பர் ஜில்லா தாலூகா போர்டு தலைமை முதலிய பதவிகளும் இந்திய மக்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தக் காலம் முதற்கொண்டே அவற்றை எப்படி நாட்டுக்கும் மக்களுக்கும் அனுகூலமாக நடத்துவது என்கின்ற விஷயத்தில் ஒரு சிறிதும் கவலை கொள்ள இடமில்லாமல், அந்த உத்தியோகங்களை யார் வகிப்பது என்பது பற்றியும், எந்த வகுப்பார் அதை ஏக போகமாய் அனுபவித்து வருவது என்பது பற்றியுமே கவலை...

வெற்றி நமதே சட்டசபைத் தேர்தலில்                                  பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு வெற்றி உறுதி 0

வெற்றி நமதே சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு வெற்றி உறுதி

சென்னை மாகாண சட்டசபை முதலியவைகளுக்கு இம்மாதம் நாலாம் தேதி அபேக்ஷகர்கள் நியமனம் செய்யப்பட்டு விட்டது. அபேக்ஷ கர்கள் பற்பல கக்ஷிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு நியமனம் பெற்று இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர் கட்சி, பார்ப்பனரல்லாதார் கட்சி என்னும் இரண்டு கட்சிகளுக்குள்ளாகவே ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் இரு கட்சிகளையும் பற்றி லட்சிய மில்லாமல் தங்கள் சுயநல மொன்றையே பிரதானமாய்க் கருதி நின்றிருக் கலாம். அதாவது, பார்ப்பன ரல்லாதார்களில் யார் யார் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நிறுத்தப்பட்டிருக் கிறார்களோ அவர்களில் பெரும்பாலோர் சுயநலத்தை உத்தேசித்தே அக்கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக, சுயராஜ்யக் கட்சியில் இருக்கும் பார்ப்பன ரல்லாதாராகிய ஸ்ரீமான்கள் முத்தையா முதலியார், துளசிராம் போன்ற பலரைச் சொல்லலாம். இவர்கள் முதலில் ஜஸ்டிஸ் கக்ஷியில் இருந்து மனஸ்தாபத்துடன் விலகினவர்கள். இப்போது சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இதற்குக் காரணம் இதுசமயம் பார்ப்பனர் தயவில்லாமல் சட்டசபைக்கு வர முடியாது என்கிற பயமும்,...

5000 ரூபாய் இனாம் 0

5000 ரூபாய் இனாம்

தமிழ்நாட்டுச் சார்பாக இந்திய சட்டசபைக்குச் சென்ற தடவை ஒருவர் தவிர எல்லோரும் ஐயங்கார் பார்ப்பனர்களாகவே நின்றார்கள். இந்தத் தடவையும் அதேமாதிரி எல்லோரும் ஐயங்கார் பார்ப்பனர்களாகவே நிற்கிறார்கள். பார்ப்பனரல்லாதார் சார்பாய் இந்திய சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதிக்கு நிற்கும் ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் நிற்கிறார். எப்படியாவது ஸ்ரீமான் சக்கரை செட்டியாரை தோற்கடித்துத்தான் வெற்றிபெற ஆசைப்பட்டு பணங் கொடுத்து ஆள்களைச் சேர்த்து பொய்ப் பிரசாரம் செய்கிறார். இதற்காகத் தன்னைப் பெரிய தியாகி என்று சொல்லச் சொல்லுகிறார்; தனக்கு ஓட்டுக் கொடுத்தால் சீக்கிரம் சுயராஜ்யம் வருமென்று சொல்லச் சொல்லுகிறார். ஆனால் ஒருவராவது இதுவரை ஐயங்கார் என்ன தியாகம் செய்தார் என்று சொல்லவில்லை. ஒருவராவது இதுவரை ஐயங்காரின் சுயராஜ்யத் திட்டம் இன்னது என்று சொல்லவில்லை. ஐயங்கார் தியாகமெல்லாம் வக்கீல் உத்தி யோகத்தில் மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் சம்பாதித்துப் பணம் சேர்த்து வருவதோடு, காலி ஆசாமிகளுக்கும் கொஞ்சம் கூலி கொடுத்து பார்ப்பனரல் லாதார் கட்சியையும்...

டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்டல் 0

டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்டல்

ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடு சுயராஜ்யக் கட்சியைப் பார்ப் பனர் கட்சி என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும், தேர்தலில் சுயராஜ்யக் கட்சி வெற்றி பெற்றால் பார்ப்பன ஆதிக்கம் ஓங்குவதுடன் பார்ப்பன ரல்லாதாருக்கு மீளாத ஆபத்து வரும் என்றும் சொன்னதிலிருந்து, நமது பார்ப்பனரும், அவர்களிடம் கூலி பெற்று வயிறு வளர்க்கும் கூலிகளும், பத்திரிகைகளும் டாக்டர் நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது “நாயுடு சங்கதியை வெளிப்படுத்தப் போகிறோம். அவர் ஜயிலில் நடந்து கொண்டதை வெளிப்படுத்துகிறோம்” என்று என்ன என்னமோ ஈனத்தனமாய்க் கூச்சல் போடுகின்றார்கள். அப்படியானால் டாக்டர் நாயுடுவின் செய்கை என்ன என்பதை ஒரு கை பார்த்தே விடலாம். சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம் , பிராந்தி, சாப்பிடு கிறாரா? சுயராஜ்யக் கட்சி பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களிலெல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம் பிராந்தி விற்றுப் பணம்...

உண்மையான தீபாவளி 0

உண்மையான தீபாவளி

தீபாவளி என்பது வருஷத்திற்கொருமுறை வந்து, பெருவாரியான இந்து குடும்பங்களுக்கு சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்து தங்கள் குழந்தை குட்டிகள், மக்கள், மருமக்கள் முதலானவர்களோடு களிக் கும் ஒரு பெரிய பண்டிகையாகும். அப்பண்டிகையன்று ஏழையானாலும் பணக்காரனானாலும் கூலிக்காரனானாலும் முதலாளியானாலும் பண்டிகை யை அனுபவிப்பதில் வித்தியாசமில்லாமல் தங்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி ஸ்நானம் செய்வதும், புது வஸ்திரங்களை அணிவதும், பலகாரங் களை உண்பதும் முக்கிய கொள்கையாகும். இக்கொள்கைகள் எந்த தத்துவங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதில் எவ்வளவு அபிப்பி ராய பேதங்கள் இருந்த போதிலும், பொதுவாய் மக்கள் சந்தோஷத்திற்கு புதிய வஸ்திரங்களையே அணிய வேண்டுமென்றிருப்பதானால் ஏழைத் தொழிலா ளருக்கு ஒரு விடுதலையும் ஏற்பட்டு வந்ததென்பது அபிப்பிராய பேதமில்லா மல் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். தற்கால அனுபவத்திலோ சந்தோஷமும் களிப்பும் பலவிதமாயிருந்தாலும், பெரும்பாலும் மேற்படி தீபாவளியானது ஏழைத் தொழிலாளர்களுக்கு பெருந் துரோகத்தை செய்வ தற்கே வருவதாகவும் போவதாகவும் ஏற்பட்டு விட்டது. இவ்வித துரோகத் திற்கு பணக்காரர்களும் உத்தியோகஸ்தர்களுமேதான் பெரும்பாலும் ஆதரவளிப்...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும் 0

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப்படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக ‘திராவிடனில்’ காணப்படு கிறது. இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ; ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதரர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ² (சட்டசபைத் தேர்தல் தீர்ந்த தற்குப்)பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன ரல்லாதார்களை யாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப்பார்களா என்பதை தயவு செய்து யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 03.10.1926

இந்தியாவின் ‘ஏக தலைவ’ரான           ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காரின் முடிவான லக்ஷியம் 0

இந்தியாவின் ‘ஏக தலைவ’ரான ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காரின் முடிவான லக்ஷியம்

எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தென்னாட் டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ‘ஏக தலைவரான’ ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லக்ஷியம் தான் இருக்கிறதாம். அதாவது:- 1. ஸ்ரீமான்கள் ஏ.ராமசாமி முதலியாரவர்களையும், பனகால் ராஜா வையும் சென்னை சட்டசபையில் ஸ்தானம் பெறாதபடி செய்து விடவேண்டும். 2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 3. ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும், ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும். ஆகிய இம்மூன்று லக்ஷியங்களும் நிறைவேறிவிட்டால் பிறகு, தான் ராஜீய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனித னுக்குச் செல்வம், பெண்,கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லக்ஷியமான தாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப்பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்ட தாம். மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற்சொன்னபடி சென்னை சட்ட சபையில் ஸ்ரீமான்கள் ஏ.ராமசாமிமுதலியார், பனகால் அரசர் ஆகியவர்களும் இந்தியா...

ஸ்ரீ வரதராஜுலுவின் மற்றொரு சபதம் 0

ஸ்ரீ வரதராஜுலுவின் மற்றொரு சபதம்

ஸ்ரீ வரதராஜுலு நாயுடு 10-ந் தேதி தமிழ்நாடு பத்திரிக்கையில் பின் வருமாறு எழுதுகிறார்:- “சமதர்மம் நிலைபெற உழைப்பதே எனது நோக்கம். இரண்டு வருஷங்களாக எச்சரித்து வந்தேன். நாயக்கர் சீர்படவில்லை. வெற்றி தோல் வியை பற்றி எனக்கு கவலை இல்லை. நாயக்கர் பிரசாரம் தொலைய வேண்டும் அல்லது நான் தொலைய வேண்டும். நான் எதற்கும் துணிந்தவன் என்பது தங்களுக்குத் தெரியும். பிராமணரல்லாதாருக்குள் போராட்டம் வேண்டாமென்றே இதுவரையில் பொறுத்திருந்தேன். இனிமேல் நான் சும்மாயிருந்தால் அது தேசத்துரோகமாகும். ‘திராவிடனை’ப் பற்றி கவலை இல்லை. நாயக்கர் ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தாரென்பதற்காக ஒரு சில நண்பர்கள் அவர் சொல்வதை கேட்கிறார்கள். அந்த தப்பு அபிப்பிராயத்தை போக்குவதே எனது பிரசாரத்தின் நோக்கம். குருnக்ஷத்திர பூமியில் தயங்கி நின்ற அர்ஜுனனுக்கு துணைபுரிந்த திரு. கிருஷ்ணபகவான் ஒருவரே எனக்குத் துணை. இன்றைய தமிழ்நாட்டு நிலைமை இதுவேயாகும். நாயக்கர் பிரசாரத்தில் வந்தவினை இது தான்”. இது எத்தனையாவது சபதம் என்பதும் இனியும் இது...

நவசக்தி 0

நவசக்தி

இத் தலைப்பைக் கண்டவுடன் ‘நவசக்தி’க்கும் ‘குடிஅரசு’க்கும் ஏதா வது போர் நிகழுமோ என பலர் சங்கடப்படவும், பலர் சந்தோஷப் படவும், பலர் வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைக்கவும் இடங் கொடுக்குமோ என்று நினைக்கிறோம். ஆனாலும் அம்மாதிரியாக எதிர்பார்ப்பவர்கள் கண்டிப்பாய் ஏமாற்றமடையக் கூடும். நிற்க, சென்ற ‘குடி அரசு’ இதழில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காரை ஸ்ரீமான் முதலியாரவர்கள் தொழிலாளர் சங்கத்திற்கு அழைத்து அவரை அறிமுகப்படுத்தி வைத்ததைப் பற்றி எழுதி யிருந்தோம். அதைக் கண்டு அவரது ‘நவசக்தி’ ‘குடிஅரசை’ ச்சீறி இருக் கிறது. ஆனால் அதற்காக நாம் சீற்றம் கொள்ளவில்லை. தொழிலாளருக் கென்றே அவதரித்தவர் எனத் தொழிலாளரின் நன்மதிப்பையும், பின்பற்று தலையும் பெரிதும் பெற்ற ஸ்ரீமான் முதலியாரவர்கள் வாக்கால் “ஸ்ரீமான் அய்யங்கார் தொழிலாளர் விஷயத்தில் மிகுந்த சிரத்தை உள்ளவர் என்றும், காங்கிரஸ் அக்கிராசனப் பிரசங்கத்தில் தொழிலாளரைப் பற்றிக் கூற வேண்டும் என்றும், ஸ்ரீமான் அய்யங்கார் சட்டசபையில் தொழிலாளருக்கு ஏற்ற சீர்திருத்தங்கள் செய்ய வேண்டு மென்றும்” கேட்டுக்கொண்டால்...

நமது கருத்து 0

நமது கருத்து

குடி அரசின்’ நான்காவது ஆண்டு முதல் இதழில் எழுதியிருந்த தலையங்கத்தைப் பார்த்த நண்பர்கள் பலர் நமது இயக்கத்தைப் பற்றியும் நம் ‘குடி அரசின்’ வளர்ச்சியைப் பற்றியும் வாழ்த்துக் கூறி பல கடிதங்கள் எழுதி இருக்கின்றார்கள். உதாரணமாக காரைக்குடி ‘குமரன்’ பத்திரிகையும், அதன் ஆசிரியர் திரு. முருகப்ப செட்டியார் அவர்களும், அமராவதிப்புதூர் திரு. பிச்சப்பா சுப்பிரமணிய செட்டியாரும், கானாடுகாத்தான் திரு. வையி. சு. ஷண்முகம் செட்டியார் அவர்களும், மதுரை, அருப்புக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, நாகப்பட்டணம், கும்பகோணம், மாயவரம், தஞ்சை, திருச்செங்கோடு, மாரண்டள்ளி, அம்பலூர், சென்னை, கொளும்பு முதலிய இன்னும் பல இடங்களிலிருந்து பல நண்பர்களும் எழுதி இருக்கின்றார்கள். அவற்றுள் சிலர் ‘குடி அரசை’ லிமிட்டெட் கம்பெனியாய் ஏற்படுத்துவதை ஆதரித்தும் பலர் அதைத் தடுத்தும் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் சுயமரியாதை இயக்கத்தை ஒரு தனி ஸ்தாபனமாக்கி அதற்கு வேண்டிய சங்கம், பிரசாரம் காரியஸ்தலம் முதலிய ஏற்பாடுகள் செய்யும் விஷயத்தில் யாவரும் ஒரே அபிப்பிராயமாகத்தான் எழுதி...

யாகம் 0

யாகம்

பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதார்களில் பெரும்பான்மை யோருக்கும் வித்தியாசமிருப்பதாக பார்ப்பனர்களால் சொல்லப்படும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடு வதில்லை என்பதும், பார்ப்பனரல்லாதார் மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பதுமேயாகும். மாம்சம் சாப்பிடுவதிலும், பதார்த்தத்தில் உள்ள குண தோஷங்களைப் பற்றி – அதாவது காய்கறிகளுக்கும் மாமிசத்திற்கும் உள்ள உருசி குணம் முதலியவைகளைப் பற்றிக் கூட அல்லாமல் – ஒரு ஜீவனை வதைக்கின்றது கூடாது என்பதான ஜீவ ஹிம்சையையே பிரதானமாகக் கருதி சொல்லப்படுகின்றது. இதை உத்தேசித்தே ஆங்காங்கு ஜீவகாருண்ய பிரசாரமும், கொலை மறுத்தல் பிரசாரமும், புலால் உண்ணாமை பிரசாரமும் எவ்வளவோ செய்யப்பட்டு வருகின்றன. இப்படியிருக்க, இந்த நாளில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும், மோக்ஷத்தின் பேராலும் ஜீவன்களை வதைத்து கொன்று தின்பதானது மோக்ஷத்திற்காக செய்யப்படும் காரியமாய் பாவிக்கப்படுகின்றது. என்னே நமது அறிவீனம்! மாமிசம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? பாவமா புண்ணியமா? அவசியமா இல்லையா? என் பதைப் பற்றிய விவகாரத்தை நாம் இந்த...

திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும்   திரு. ஸ்ரீனிவாசய்யங்காரும் 0

திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரும்

திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் இம்மாதம் 2-ந் தேதி இந்தியர் பிரதிநிதியாக பொது மக்கள் சார்பாய் தெரிந்தெடுக்கப்பட்டு சர்க் காராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஜினிவா மகாநாட்டுக்குச் செல்கின்றார். திரு. ஸ்ரீனிவாசய்யங்கார் வெயில் காலத்தில் சுகம் அனுபவிக்க உடல் நலம் பேணி இங்கிலாந்துக்குச் செல்கின்றார். ஆனால் தனது சுகவாசத்திற்குச் செல்லும் திரு, ஸ்ரீனிவாசய்யங்காருக்குத் தேசீயத்தின் பேரால் வழியனுப்பு உபசாரங்கள் பொதுமக்கள் பேரால் சென்னையில் செய்யப்பட்டதே ஒழிய திரு. ஷண்முகம் செட்டியா ருக்கு ஒரு உபசாரமும் நடத்தப்படவில்லை. இதன் காரணம் என்ன என்ப தைப் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. திரு. செட்டியார் பார்ப்பனரல்லாதார், திரு. அய்யங்கார் பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. இவ்வய்யங்கார் வழியனுப்பு உபசார திருவிழாவுக்கு போட்டி போட்டு செலவு செய்து தலைமை வகித்த திரு. வரதராஜுலு அவர்கள் திரு. அய்யங்காரைப் பற்றி பாடியிருக்கும் கவியை சற்று கவனிப்போம். “திரு. அய்யங்காரை முப்பது கோடி மக்கள் பொது சொத்து...

‘தேசீயமும்’ சுயமரியாதைப் பிரசாரமும் 0

‘தேசீயமும்’ சுயமரியாதைப் பிரசாரமும்

தேசீயத்திற்கு விரோதமாக சுயமரியாதைப் பிரசாரம் நடப்பதாகவும் ஆதலால் “ரத்தம் சிந்தியாவது, தேசபக்தர்கள் புற்றீசல்களைப் போல் உயிர் துறந்தாவது, சுயமரியாதைப் பிரசாரத்தை ஒடுக்கி விடவேண்டும்” என்றும் “அதற்காக பல ஆயிரம் ரூபாய்கள் காங்கிரஸ் நிதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது” என்றும் ‘தமிழ்நாடு’ பத்திரிகை எழுதி இருக் கின்றது. மற்றபடி பார்ப்பனப் பத்திரிகைகளோ ஒன்று சேர்ந்து இவ்விஷயத் தில் எதிர் பிரசாரம் செய்ய ஸ்ரீ வரதராஜுலுக்கே வக்காலத்து கொடுத்துவிட்டு யாவருக்கும் தெரியாமல் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியைத் தோற்கடிக்க இரகசியமாக ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றியும் மந்திரிகளைப் பற்றியும் சட்டமெம்பரைப்பற்றியும் குறைகூறி விஷமப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்கள் இஷ்டப்படியும் அவர்களது கூலிகளின் ஆசைப்படியும் அடுத்த தேர்தலிலும் ஜஸ்டிஸ் கக்ஷி தோல்வியடைந்து மந்திரி பதவி வகிப்பதற்கு தகுதியில்லாமல் போய் விட்டாலுங்கூட உண்மையிலேயே நாம் ஒரு சிறிதும் கவலைப்படமாட்டோம். ஏனெனில் அக்கக்ஷியானது ஆறு வருஷ காலம் மந்திரிப் பதவி ஏற்று அதிகாரத்தில் இருந்த காலத்தில் எவ்வளவு நன்மை அடைய...

“தேசிய அறிக்கை” 0

“தேசிய அறிக்கை”

மேல்படி தலையங்கம் கொண்ட அறிக்கையொன்று சென்னை ‘தமிழ்நாடு’ காரியாலயத்திலிருந்து நமக்கு அனுப்பப்பட்டதை வேறு இடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இதை அனுசரித்து ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்களால் ஒரு அச்சடித்த அழைப்புக் கார்டும் சிலருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவ்வழைப்புக்கு யாவரும் போக வேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகிறோம் . ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தாயாருக்கு இது சமயம் கடினமான காயலா வாயிருக்கிற படியால் 9-ந் தேதிக்கு சென்னை போக அவருக்கு சவுகரியமாயிருக்குமோ இருக் காதோ என்பது சந்தேகமாயினும் அது பற்றி நமது அபிப்பிராயத்தை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தேசீய அறிக்கையில் குறித்திருக் கும் ஒரு விஷயத்தை நாமும் பலமாய் ஆதரிக்கிறோம். அதாவது, “சுயராஜ்யக் கக்ஷி பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாகப் பிரசாரம் செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்னும் வளர விட்டுக் கொண்டே போனால் பிராமணரல்லாதாருக்குக் கெடுதல் வரும்” என்ப தாகும். இந்த அபிப்பிராயத்தை நாம் இரண்டு வருஷத்திற்கு முன்ன தாகவே கொண்டுள் ளோம். ஆதலால் ‘தமிழ்நாடு’ம்...

மாயவரமும் ஸ்ரீ வரதராஜுலுவின் “வீரமும்” 0

மாயவரமும் ஸ்ரீ வரதராஜுலுவின் “வீரமும்”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் மாயவரத்தில் கூடி பிரமாதமான காரியத்தைச் சாதித்துவிட்டதாகத் தங்களையே புகழ்ந்து கொண்டு அடிதடி யுடன் கலைந்து ஆளுக்கொரு மூலையாய் ஓடி ஒளிந்து விட்டு சென்னைக்கு வந்து “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று வீரம் பேசுகின்றார்கள். மாயவரம் பெரிதும் பார்ப்பன அக்கிராரமாய் இருந்தாலும் அங்கு சில காலமாகவே தேசீய புரட்டுக்கு இடம் இல்லாமலே இருந்ததுடன் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் தமிழ் நாட்டில் முன்னணியில் இருந்தது. குருகுல வேஷத்தின் போதுகூட ஸ்ரீ வரதராஜுலுவைப் பார்ப்பனர்கள் துன்புறுத்த கட்டுப்பாடாய் ஏற்பாடு செய்து கொண்டு கூட்டத்தில் வந்து விளக்கு முதலியவைகளைக்கூட உடைத்து மீட்டிங்கு நடக்காமல் தொந்தரவு செய்த காலத்திலும் இதே மாயவரம் தேச பக்தர்களால் தான் தடுக்கப்பட்டு ஸ்ரீ நாயுடு காப்பாற்றப்பட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்பேர்ப் பட்ட இடத்தில் “தீட்டின மரத்தில் பதம் பார்ப்பது” என்கின்ற பழமொழிபோல் ஸ்ரீ வரதராஜுலு நாயுடு எல்லாரிடத்திலும் நடந்து கொள்ளும் மாதிரியாகவே மாயவரம் தொண்டர்களிடத்திலும்...

நமது பத்திரிகையின் நான்காவதாண்டு 0

நமது பத்திரிகையின் நான்காவதாண்டு

‘குடி அரசு’ பத்திரிகை தோன்றி இன்றைக்கு மூன்றாவது ஆண்டு கழிந்து நான்காவது ஆண்டு தொடங்கிவிட்டது. அது தோன்றிய நாள் முதல் இது வரை செய்து வந்த தொண்டைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பலனைப் பற்றியும் பொது ஜனங்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம். ‘குடி அரசின்’ கொள்கையை அதன் முதல் மலர் முதலிதழில் தலையங்கத்தில் தெரிவித்தபடி, அதாவது:- “மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர்த்தல் வேண்டும்………… உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்னும் உண்மை அறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இன்னோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி இவர் எமக்கு இனியர் இவர் எமக்கு மாற்றார் என்கின்ற விருப்பு வெறுப்புகள் இன்றி… நண்பரே ஆயினும் ஆகுக. அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்.” என்று நாம் உலகத்தாருக்கு ஆதியில் வாக்குக்கொடுத்தது போலவே இதுகாறும் ஒரு சிறிதும்...

தீண்டாமை விலக்குச் சட்டம் 0

தீண்டாமை விலக்குச் சட்டம்

“பொதுத் தெருக்களில் எவரையேனும் நடக்கக்கூடாது என்று தடுப்பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் போடலாம்” என்கிறதாக ஒரு பிரிவை சென்னை ஜில்லா லோக்கல் போர்டு சட்டங்களில் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறி விட்டதாகவும், முனிசிபாலிட்டி சட்டத்திலும் இவ்வித திருத்தம் செய்யவேண்டுமென்று கொண்டு வரப்பட்ட திருத்தம் தான் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்ரீமான் வீரய்யன் அவர்களால் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பு : இவ்வித சட்டம் செய்யப்பட்டது பற்றி நாம் மிகுதியும் களிப்பெய்துகிறோமானாலும் பார்ப்பன வக்கீல்களும் பார்ப்பன நீதிபதிகளும் இச்சட்டம் செய்தவர் கருத்துப்படி பலனளிக்கச் சம்மதிப்பார்களா? அவர் களது சட்ட ஞானமும் பாஷ்ய ஞானமும் இச்சட்டத்தை உயிருடன் வைத் திருக்கச் சம்மதிக்குமா என்று கேட்கிறோம்? ( ப – ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 03.10.1926

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் 0

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல்

நமது ஜில்லா சட்டசபைத் தேர்தல் விஷயமாக சென்ற இதழில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் வாசித்திருக்கக் கூடும். அவ்வியாசத்தின் வேண்டுகோட்படியே குடியான வகுப்பைச் சேர்ந்த அபேக்ஷகர்களான இரண்டு கவுண்டர் கனவான்களில் ஒரு கனவானான ஸ்ரீமான் வி.சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர் பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்படுகிறோம். தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து தங்கள் சமூகத் தாரில் யாராவது ஒரு கனவான் சட்டசபைக்கு வரவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தின் பேரில் மற்றொரு கவுண்டர் கனவானுக்காக விட்டுக் கொடுத்த ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் பெருந் தன்மை யையும் குலாபிமானத்தையும் நாம் மனமாரப் போற்றுகிறோம். நாம் முந்திய வார இதழில் எழுதியது போலவே ஒருவர் பின்வாங்கிக் கொண்டதினாலே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல் சட்டசபை ஸ்தானம் கிடைத்து விடும் என்று நம்பி அஸ்வாரஸ்யமாய் இருந்துவிடக் கூடாது என்றும் தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாய் வேளாள சமூக பிரசாரகர்களைக் கொண்டு பிரசாரம் செய்து கிராமத்து குடியான மக்களு...