பார்ப்பனரின் கனவு பலிக்காது
வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களின் வெற்றியும் தோல்வியும் ஸ்ரீமான்கள் பனகால் ராஜா, ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களின் வெற்றியையும் தோல்வியையும் பொறுத்திருப்பதாகவே நமது பார்ப்பனர் கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கனவு கண்டு கொண்டு லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் சர்வப் பிரயத்தனத்தையும் இதற்காகவே செலவழித்து வருவ தோடு பஞ்சதந்திரங்களையும் செய்து வருகிறார்கள். அல்லாமலும், மற்ற இடங்களிலும் தங்கள் கட்சி ஆட்களே வெற்றி பெறுவதற்காக ஓட்டர் களை ஏமாற்றும் பொருட்டு பனகால் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டா ரென்றும், ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வெற்றிபெற்றுவிட்டா ரென்றும், மற்றும் பல விடங்களில் பார்ப்பனக் கட்சியே வெற்றிபெறுமென் றும், ஆதலால் அல்லாடி அவர்களே அடுத்த தடவைக்கு முதல் மந்திரியாக நியமிக்கப்படப் போகிறாரென்றும் பொய்க் கட்டுகள் கட்டிவிட்டுப் பஞ்சாங் கப் பார்ப்பனர், காபி ஓட்டல் பார்ப்பனர், வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர், பரிசாரகப் பார்ப்பனர் முதல் கொண்டு எல்லா பார்ப்பனர்களும் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவ்வித திண்ணைப் பிரசாரங்...