Tagged: பிசாசு

‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’

‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’

ஒரிசா பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாநிலம். மயூர்மஞ்ச் மாவட்டத் தில் பழங்குடி மக்களிடையே பேய், பிசாசு, சூன்ய நம்பிக்கைகள் தலை விரித்தாடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ‘பேய் பிடித்தவள்’, ‘சூன்யக்காரி’ என்று அறிவித்து 47 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் பழங்குடி மக்களிடையே இந்த மூட நம்பிக்கை களுக்கு எதிராக பகுத்தறிவாளர்களைக் கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வருகிறது. ‘சூன்யக்காரி’ தங்கள் பகுதியில் வாழ்வதால் பல தீங்குகள் வருவதாக மக்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல கிராமங்களில் இதே போன்ற மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக வாழ் நாள் முழுதும் பேராடியவர் மறைந்த டாக்டர் கோவூர். இலங்கையைச் சார்ந்த மனநல மருத்துவர். பேய், பில்லி, சூன்யம், ஆவி மோசடிகளை அம்பலப்படுத்தியவர். சென்னையில் பல முறை மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரைகளை செய்தவர். ‘மந்திர வாதி’களால் ஏமாற்றப்பட்டு, பிறகு தன்னிடம் மனநல சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் கதைகளை அவர் பதிவு செய்திருக்...