பெரியார் சிலைக்கு கூண்டு போடாதே: சென்னை மாவட்டக் கழகம் ஆர்ப்பாட்டம்

கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாநகராட்சி சார்பில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. பெரியாரின் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டதை அகற்றக்கூறி காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடந்தது. காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், 07.10.2020 அன்று  மாலை 3 மணியளவில் கிண்டி கத்திப்பாரா பெரியார் சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழகம் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட தலைவர் வேழவேந்தன், வழக்கறிஞர் துரை அருண், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார், தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் மாவட்டக் கழகத் தோழர்கள் 50 பேர் பங்கேற்றேனர். மற்றும் சென்னை கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இன்டியா அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெரியாரின் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள கூண்டு அகற்றப்படும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஆர்ப்பாட்டத்தில் அறிவித்தார்.

பெரியார் முழக்கம் 15102020 இதழ்

You may also like...