அயோத்தி தீர்ப்பு: சென்னையில் கருத்தரங்கம்

“வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில், பாபர் மசூதி தீர்ப்பு ஒரு பார்வை” என்ற தலைப்பில் 14.12.2019 அன்று மாலை 6:30 மணியளவில், சென்னை பிராட்வே பிரகாசம் சாலையிலுள்ள ஹயாத் மஹாலில்  கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். நிகழ்வில், பேராசிரியர் ஜவாஹிருல்லா (மாநில தலைவர், தமுமுக), பேராசிரியர் அ.கருணானந்தன் (வரலாற்றுத் துறை தலைவர்(ஓய்வு) விவேகானந்தா கல்லூரி, சென்னை), எஸ்.எம். பாக்கர் (மாநில தலைவர், ஐசூகூது),  எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் (மாநில செயலாளர், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்),  செய்யது முஹம்மது புஹாரி (மாநிலத் தலைவர், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்) ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

பெரியார் முழக்கம் 26122019 இதழ்

You may also like...