‘குடியுரிமை’ சட்ட நகல் எரிப்பு

ஈழத் தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக் கும் புதிய குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி சட்டத் திருத்த நகல் எரிப்புப் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஒருங்கிணைப்பில், 12.12.2019 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் எதிரில் (தர்ஹா அருகில்) நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மனிதநேய ஜன நாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக்  கட்சித் தலைவர் வேல் முருகன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டப் பொறுப்பாளர் குமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன், தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, இயக்குநர் வ.கௌதமன், தமிழ்ப்புலிகள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 19122019 இதழ்

You may also like...