இதுதான் கீதை பிறப்பிலேயே பேதம்

மனிதகுலம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்து அறியப்படுகின்றனர் என்று கீதை கூறுகிறது. அத்யாயம் 18 பாடல் 41இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ப்ராஹ்மண க்ஷத்ரிய விசாம்

சூத்ராணாம் ச பரந்தப

கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவப்

பிரனவர் குணை

செயல்களின் அடிப்படையிலும் இயற்கையில் அமைந்துள்ள குணங்களின் அடிப்படையிலும் இப்பிரிவினைகள் என்கிறது கீதை.

நான்கு வர்ணங்களுக்கும் பொறுப்புகளை வரையறுத்துவிட்டு, அடுத்தவர்க்கான கடமைகளை ஏற்று அரைகுறையாக செய்வதைவிட அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே செய்வதுதான் சரி என்கிறது கீதை.

வேறு வகையில் சொன்னால், அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்கிறது கீதை.

பார்ப்பனர் வேதம் படித்து படிப்பிக்க வேண்டுமாம். இப்பொழுது என்ன நிலை? பார்ப்பனர் எல்லாத் தொழிலையும் செய்கிறார்கள். அதைப் போலவே சத்திரியரும். பாதுகாப்புப் பணியில் எல்லா ஜாதிக் காரர்களும் உள்ளனர். இதிலும்கூடத் தலைமையில் பார்ப்பனர்கள்!

யார் நடக்கிறார்கள் கீதைப்படி? இந்துக்களுக்குக் கீதை எங்கே வழிகாட்டு கிறது? பொய் சாட்சி சொல்பவன்கூட கீதையில் கைவைத்துதான் வழக்கு மன்றத்தில் பொய் கூறுகிறான். அது எப்படி மதிக்கப்படுகிறது?

இது எப்படி தத்துவ நூலாகும்?

நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

You may also like...