காமராசர் பிறந்த நாள்: மேட்டுபாளையத்தில் கழகம் ஒரு நாள் பரப்புரை

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் பகுதிகளில் நடந்த தெருமுனை கூட்டங்களின் நிறைவு நிகழ்வாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பரப்புரை இயக்கங்கள் நடைபெற்றது.

28 .07.2019 அன்று காலை எல்லம்மாள் தங்கும் விடுதி அருகில் நடந்த பரப்புரை நிகழ்விற்கு, மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் தலைமை ஏற்று நிகழ்வை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோழர்கள் முகில் ராசு மற்றும் யாழ் வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்விற்கு அமுல்ராஜ் நன்றி கூறினார். மதியம்  மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வீட்டில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

மாலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடந்த பரப்புரை கூட்டத்திற்கு  இராமசந்திரன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வேலுச்சாமி உரையாற்றினார்.  மடத்துக்குளம் மோகன், பொருளாளர் துரைசாமி மற்றும் யாழ் வெள்ளியங்கிரி சிறப்புரையாற்றினர்.  விஷ்ணுபிரசாத் நன்றியுரையாற்றினார். மாலை நிகழ்வில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த, சாலை வேம்பு சுப்பையன், தேவராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இரு நிகழ்விலும் பெரியார் பிஞ்சு யாழினி, யாழிசை காமராஜர்  பகுத்தறிவு பாடல்கள் பாடினர்.

நிகழ்வில் தோழர்கள் சங்கீதா, சரஸ்வதி, சங்கவி, ராஜாமணி, ராமசந்திரன், அமுல்ராஜ், விஷ்ணுபிரசாத், துரைசாமி, மோகன், சிவானந்தம், வெள்ளியங்கிரி, கிருஷ்ணன், முகில் ராசு, விஜயகுமார், தனபால், அய்யப்பன், முத்து, ராசசிங்கம், மூர்த்தி மற்றும் குழந்தைகள் யாழினி, யாழிசை, பரிதி ஆகியோர் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 08082019 இதழ்

You may also like...