வாசகர்களிடமிருந்து…

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் என தொடர் படுகொலைகளை நடத்திய ‘சனாதன சன்ஸ்தா’வின் பயங்கரவாத பின்னணியை ‘நிமிர்வோம்’ இதழில் படித்தபோது அதிர்ச்சி யடைந்தேன். விரிவாக அம்பலப்படுத்திய ‘நிமிர்வோம்’ இதழைப் பாராட்ட வேண்டும். இவ்வளவு படுகொலைகள் செய்த அமைப்பை தடை செய்யாமல், மதவெறியை எதிர்த்தாலே ‘தேச விரோதிகள்’, ‘அர்பன் கொரில்லாக்கள்’ என்று அரசு அடக்குமுறைச் சட்டங்களை ஏவிவிடுவதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

– செந்தில், வேலூர்

பட்டியல் இனப் பிரிவினரில் முதல் முதலாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி பொருளாதார வரம்பை உச்சநீதிமன்றம் திணித்திருப்பதை ‘நிமிர்வோம்’ இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல சமூக நீதித் தலைவர்கள் இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ளாமல் எப்படி தீர்ப்பை வரவேற்றார்கள்?

– மனோஜ், நாமக்கல்

‘நேர்மைக்கு ஓர் இலக்கணம்’ பெரியார் பற்றிய கட்டுரை அரிய தகவல்களைக் கொண்டிருந்தது. இளைய தலைமுறை  அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளம் இடம் பெற்றிருந்தன.

– தென்றல், சென்னை

நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்

You may also like...