கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை அன்னூர் அருகே குப்பேபாளையம் கிராமத்தில் உள்ள ஜி.ஆர்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 14, 2018 அன்று முத்தமிழ் விழா நடந்தது. விழாவில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிர்மல், வெங்கட் ஆகியோர் பங்கேற்று, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்து மாணவ மாணவிகளிடம் பேசினர். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட 230 பேர் நிகழ்வில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியம் பங்கேற்றார். கவிஞர் வைகை சுரேஷ், இந்நிகழ்வை மிகுந்த ஆர்வத்தோடு ஏற்பாடு செய்தார்.

10 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டுள்ள நூலை தனது சொந்தப் பணத்தில் வாங்கி, மாணவிகளுக்கு வழங்கினார் வைகை சுரேஷ். கல்லூரியின் மனித வள மேம்பாட்டு அலுவலர் பாபு, மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட  ஒருங் கிணைப்பாளர்கள் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். சில மாதங்களுக்கு முன்பு இங்கே கல்லூரி நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால பாரதி, பெரியாரின் இந்த நூல் குறித்துப் பேசியது மாணவிகளிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி யிருந்தது.

கோவை மாநகர மாவட்டச் செயலாளர் நிர்மல், இதுவரை ‘பெண் ஏன் அடிமை யானாள்?’ நூலின் 6 ஆயிரம் பிரதிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 20122018 இதழ்

You may also like...