நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆழ்வை ஒன்றிய தி.வி.க. தலைவர் நாத்திகம் முருகேசன் துணைவியார் திருமதி. சந்திரா (வயது 65) 30.11.2018 மாலை 4.00 மணியளவில் முடிவெய்தினார். அவரது உடல் நல்லடக்கம் ஆழ்வார் தோப்பில் 01.12.2018மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரைச் செயலாளர் பால் .பிரபாகரன்  மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

நிகழ்வில் நெல்லை மாவட்டத் தலைவர் பா. பால்வண்ணன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ச. தமிழன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் அ.மாசிலாமணி, தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பால சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கோ.அ.குமார், வே.பால்ராசு, சா.த.பிரபாகரன், செ.செல்லத்துரை. குமணன், பாரி, மனோஜ் மற்றும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட தி.வி.க. தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். எவ்வித சடங்குகள் இன்றி நிகழ்வு நடைபெற்றது.

பெரியார் முழக்கம் 13122018 இதழ்

You may also like...