தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் பாரி சிவக்குமார் (மாணவர் கழக அமைப்பாளர்)  தலைமையில் நடந்தது.

21.01.18 அன்று மாலை 3 மணிக்கு, சென்னை பனகல் மாளிகை முன்பு டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரத் பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்தும், தோரட் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரியும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்க பேராசிரியர்

தகுதியுள்ள தனி அலுவலர் நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச்  சென்ற கழக அமைப்பினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சைதை மாநகர தொடக்கப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 22022018 இதழ்

You may also like...