தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை 30042017

“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று….

காலை தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள், இயக்க தோழர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் வந்திருந்தனர்…..

தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் வீரவணக்கம் முழக்கம் எழுப்பி, தோழர்.பத்ரி நாராயணன் அவர்களுடன் தன்னுடைய வாழ்நாள் அனுபவங்கள் அவரின் பெரியாரின் கொள்கையும் பற்றியும் பேசி தனது ஆழ்ந்த இரங்கலோடு மரியாதை செலுத்தினார்கள்…

நினைவிடத்தில் வந்திருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி , திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளின் தோழர்கள், தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் பழகிய நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு வீரவணக்கத்தை செலுத்தினார்கள்…

தமிழ்நாடு அறிவியல் மன்றத்திலிருந்து வந்திருந்த தோழர்.வீ.சிவகாமி அவர்கள் தோழர்.பத்ரி நாராயணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்….

இறுதியாக வந்திருந்த தோழர்கள் அனைவரும் 2 நிமிட மெளன அஞ்சலியும் மற்றும் வீரவணக்க முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தினார்கள்….

அதையடுத்து…ராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் அமைந்துள்ள தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் புகைப்படத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர். தபசி குமரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..உடன் கழக வழக்கறிஞர் தோழர்.துரை அருண், தோழர்.வேழவேந்தன் மற்றும் தோழர்.அன்பு தனசேகரன் இருந்தனர்…

ராயப்பேட்டை பகுதியில் தந்தை பெரியார், டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பதகையும் திறந்து வைக்கப்பட்டது

18156935_195518827633429_1597784580195800149_n 18157398_195518664300112_6317721166041580107_n 18157781_195517994300179_402406433107684298_n 18193858_195518854300093_1483157879420099185_n 18198559_195517594300219_3163728427875797823_n 18198720_195517554300223_4208069049963014685_n 18222243_195517860966859_7996358255066244068_n

You may also like...