சூலூரில் கருத்தரங்கம்

சூலூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் டிசம்பர் 25 இல் மனுதர்ம எரிப்பு நாள் மற்றும் கீழ்வெண்மணி படுகொலை நாளில் சமூகநீதிக் கருத்தரங்கம் வே. ஆனைமுத்து அவைக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அ.ப. சிவா தலைமை தாங்கினார். பொறியாளர் ந. பன்னீர் செல்வம் தொடக்கவுரையாற்றினார். வே. மதி மாறன், ‘பெரியார்-அம்பேத்கர் இன்றைய தேவை’ என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் பேசினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தோழர்களின் கேள்விகளுக்கு பதி லளித்தார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற் பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கருத்துகளைக் கேட்டனர். இறுதியாக தோழர் பேரறிவாளன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 12012012 இதழ்

You may also like...