சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், 05.03.2017 அன்று மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், தியாகு, தந்தை பெரியார் தி.க. மாவட்ட செயலாளர்

ச. குமரன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் பாலன், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் சேகர், சோசலிச மையம் செல்வி மற்றும் பாப்புலர் பிரன்ட் எஸ்.டி.பி.அய். மனிதநேய மக்கள் கட்சியினர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 09032017 இதழ்

You may also like...