மேட்டூரில் ‘மே’ நாள்

பெரியார் தொழிலாளர் கழகம் மேட்டூர் அனல் மின்சார நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பாக மே 1 தொழிலாளர் தினத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் கி.முல்லைவேந்தன் தலைமை வகித்து கழகக் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். பெரியார் தொழிலாளர் கழக தலைவர் சக்திவேல், செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடியேற்று விழா நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்களும் கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, ‘மே’ நாள் கொண்டாடப் பட்டது.

பெரியார் முழக்கம் 17052012 இதழ்

You may also like...