கந்தர்வன் கோட்டையில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும், கூடங்குளம் அணு உலையை அகற்றக் கோரியும், கல்பாக்கம் அணு உலையை இழுத்து மூடக் கோரியும், போராடுகிற மக்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பாக 14.6.2012 மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வன் கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்திய பொதுவுடைமை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் மீ.த. பாண்டியன், இப்பொதுக் கூட்டத்திற்கு தலைமையேற்றார். தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் சைவப் பேரவை கலையரசி அம்மையார் உட்பட பலர் உரையாற்றினர். தோழர் பாரி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

பெரியார் முழக்கம் 28062012 இதழ்

You may also like...