டிசம்பர் 24, 25-ஈரோட்டில் மாநில மாநாடு

டிசம்பர் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் இரண்டு நாள் மாநில மாநாடு மற்றும் “மனுசாஸ்த்திர எரிப்பு போராட்ட விளக்க மாநாடு” நடத்துவது என ஈரோடு கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1929 இல் செங்கல்பட்டில் பெரியார் கூட்டிய சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் – புரட்சிகர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நாளான பிப்ரவரி 28 இல் தமிழ்நாடு முழுவதும் – சமுதாயத்தை பிறப்பின் அடிப்படையில் கூறுபடுத்தும் – மனுசாஸ்திரத்தைத் தடைசெய்யக் கோரி – மனு சாஸ்திர எரிப்புப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தோழர்களுக்குக் கொள்கைப் பயிற்சி வகுப்புகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 16082012 இதழ்

You may also like...