5 நாள்கள் நடந்த குழந்தைகள் ‘பழகுமகிழ்வு’ முகாம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் நடத்தப் பட்ட குழந்தைகளுக்கான ‘பழகு மகிழ்வு’ முகாம் 5 நாள்கள் நடந்தன. முகாமில் பங்கேற்ற குழந்தைகள் 5 நாளுக்குப் பிறகு முகாமிலிருந்தே பிரிந்து செல்ல மனமின்றி கண்ணீருடன் பிரிந்தனர். முகாமில் மகிழ்ச்சியாக இருந்ததோடு பல அறிவியல் கருத்துகளை அறியவும், பகிரவும் வாய்ப்பு பெற்றதாகவும் தெரிவித்தனர். முதல் நாள் பெற்றோரைப் பிரிந்து வந்ததற்காக அழுத குழந்தைகள், 5ஆம் நாள் பிரியும்போது முகாமை விட்டுப் பிரிவதற்காக அழும் நிலைக்கு உணர்வுகளை முகாம் இவர்கள் உள்ளத்தில் விதைத்திருக்கிறது. (முகாம் நான்கு நாள் நடந்ததாக கடந்த இதழில் வெளி வந்த செய்தி தவறு. 5 நாள்கள் நடந்தன.)

பெரியார் முழக்கம் 09062016 இதழ்

You may also like...