ஜூன் 11 வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு ஜூன் 11ஆம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர்  கைது செய்யப்பட்ட நாள் 1991 ஜூன் 11. இதை நினைவு கூர்ந்திடவும் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்துள்ள 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவான முடிவை மீண்டும் நினைவூட்டியும் ஜூன் 11 அன்று வேலூர் சிறை வாயில் முன்பிருந்து காலை 8 மணிக்கு வாகனப் பேரணி புறப்படுகிறது.

வேலூரிலிருந்து சென்னை கோட்டை நோக்கி வரும் இந்தப் பேரணியில் இரு சக்கரவாகனங்களும், நான்கு சக்கரவாகனங்களும் இடம் பெறுகின்றன. 7 தமிழர் விடுதலலைக்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய் துள்ள இந்தப் பேரணியில் கழகத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

கொளத்தூர் மணி

தலைவர்

திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 09062016 இதழ்

You may also like...