அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

மேட்டூர் கழகத் தோழர் செ.மார்ட்டின் -பொ. விஜயலட்சுமி ஆகியோரின் மகள் வி.மா. அன்புக்கரசி, பி.ஈ., டி.அய்.வி., கொளத்தூர் கு.மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலீப்குமார் ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாய்க்கை இணை ஏற்பு விழா 21.8.2016 அன்று பகல் 11 மணியளவில் கொளத்தூர் எம்.எஸ். திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், டைகர் பாலன் வாய்த்துரை வழங்கினர். இசைமதி, ‘பெண்ணுரிமை’ குறித்தப் பாடல் பாடினார். கணவரை இழந்த மணமகள்மணமகன் பாட்டிமார்கள் வெள்ளை உடையுடன் மேடையில் மணமக்களுக்கு மாலை, தங்க சங்கிலிகளை மண மக்களிடம் எடுத்துத் தந்தபோது மண்டபமே கரவொலியால் அதிர்ந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு திரண்டு வந்திருந்தனர். கழக மாநாடு போலவே மணவிழா காட்சி அளித்தது.

பெரியார் முழக்கம் 01092016 இதழ்

You may also like...