Category: பெரியார் முழக்கம் 2012

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

(சென்ற இதழ் தொடர்ச்சி) ஏன், எதற்கு எப்படி? என்று எதையுமே ஆராய்ச்சி செய்து பார் என்று ஏதென்சு நகரத்து இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டிய அறிஞர் சாக்ரடீசு நஞ்சு கொடுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பகுத்தறிவு பேசிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த புரூனோ என்ற பகுத்தறிவாதி 16.2.1600 இல் ரோமன் சர்ச்சில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை! போலியான மதக் கருத்துகளை யாரும் எதிர்க்கத் துணியவில்லை! துணிந்த ஒரு சிலரோ மக்கள் கூட்டத்தின் முன்பாக எரிக்கப்பட்டனர்.! கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்! தூக்கிலிடப்பட்டனர்! கை கால்கள் துண்டிக்கப்பட்டனர்! இத்தகைய கொடுமையான தண்டனைகளை நேரில் கண்டபின் யாருக்கு போலி மதக் கருத்துகளை எதிர்க்கத் துணிவுண்டாயிருக்கும்? இவ்வாறு அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான கருத்துகளை தங்கள் மத நூல்களில் கொண்டுள்ள அனைத்து மதங்களும் மக்களின் அறியாமை அச்சம், மூடநம்பிக்கை போன்றவைகளை அடித்தளமாகக் கொண்டு அழகாகவும், உறுதியாகவும் மனித சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டன. உலகில்...

ராஜபக்சே நடத்தும் ‘ரவுடி அரசு’: அய்.நா. அதிகாரி கூறுகிறார்

ராஜபக்சே நடத்தும் ‘ரவுடி அரசு’: அய்.நா. அதிகாரி கூறுகிறார்

“ராஜபக்சே தனது அரசை ரவுடிகளின் நிறுவனமாக மாற்றியமைத்துள்ளார். (Rogue Institution) அப்படி மாற்றிக் கொண்ட சித்திரவதை, ஆள் கடத்தல் படுகொலைகளை அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவில் செய்து வருகிறார்” – இப்படி அய்.நா.வின் சித்திரவதைகளுக்கு எதிரான அய்.நா.வின் சிறப்புப் பிரதிநிதியே குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் வி.சுரேஷ் மற்றும் டி.கே. நாகசாய்யா, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளனர். (மார்ச் 16, 2012) எந்த ஒரு குறிப்பிட்ட அரசுக்கும் எதிராக கண்டன தீர்மானம் வருவதை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய அரசு எடுத்துள்ள நிலையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். மனித உரிமை மீறல் என்பதற்கான விளக்கம் என்ன? ஏதேனும் ஒருவர் அக்குற்றத்தை செய்கிறார்; அவர் இராணுவத்தினராக இருக்கலாம்; போலீசாக இருக்கலாம். மனித உரிமை மீறலுக்கு உள்ளாகிறவர், பொது மக்கள்; ஆயுதமற்ற நிராயுதபாணிகள். இவை எல்லாமே எப்படி நிகழ்கின்றன? சூன்யத்திலா? ஏதேனும் ஒரு...

‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

மக்களின் அச்சத்தைப் போக்கிய பிறகே கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றார், முதல்வர் ஜெயலலிதா. அச்சத்தைப் போக்கும் வரை, திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், தமிழக முதல்வர் நியமித்த விஞ்ஞானிகள் குழு, கூடங்குளம் இடிந்தகரை பகுதி மக்களை சந்திக்கவே மறுத்தது. மக்களின் அச்சம் அப்படியே நீடிக்கிறது. இப்போது முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை அச்சுறுத்தி, 5000 போலீசையும், துணை ராணுவப் படைகளையும் குவித்து, போராட்டக் குழு தலைவர்கள் மீது தேச விரோதம் உள்ளிட்ட கொடூரமான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, கைது செய்து சிறையிலடைத்து, கூடங்குளம் அணு உலையைத் திறக்கப் போகிறது. ஈழத்தில் தமிழர்களை ஒழிக்கத் திட்டமிட்ட இலங்கை ராணுவம், அவர்களை முல்லைத் தீவு நோக்கி நெருக்கித் தள்ளியதுபோல், இடிந்தகரை மக்களும் இப்போது துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று நாடகமாடிய ஜெயலலிதா – இப்போது மக்களை அச்சுறுத்தி கூடங்குளம்...

அடக்கு முறையில் திணிக்கப்படும் அணுமின் நிலையம்

அடக்கு முறையில் திணிக்கப்படும் அணுமின் நிலையம்

எதிர்பார்த்தது நடந்து விட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் எதிர்ப்பை யும் மீறி துப்பாக்கி முனையில் இயங்கச் செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவெடுத் துள்ளது. ஒரு அணுஉலை அமைப்பதற்கு மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படையான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஒப்பந்தத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரம் தேவைக்காக இந்தியப் பார்ப்பன பனியா ஆட்சி, மக்கள் மீது திணிப்பதற்கு இப்போது மாநில ஆட்சியும் துணை போகிறது. அணு உலை தேவையா இல்லையா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; ஒரு அணு உலை அமையப் போகும் இடத்தின் நிலவியல் என்பது மிக முக்கியமாக ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். அதற்காக அணுசக்தித் துறை வி.ஆர். வென்குலேர்ச்சர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 1972 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.   நிலவியல் அமைப்பு, அதன் நிலைத்த தன்மை (ழுநடிடடிபiஉயட ளவயbடைவைல) கட்டாயம் ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்திய பல்வேறு அம்சங்களில் முக்கியமானதாகும்....

கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒடுக்காதே! தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒடுக்காதே! தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் இடிந்த கரை மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாளையங்கோட்டையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர்  மணி, இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு விடுத்திருந்தார். மார்ச் 23 ஆம் தேதி பாளையங்கோட்டை ஜவகர் திடலில் பெரியார் திராவிடர் கழகம் ம.தி.மு.க., நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, த.தே.பொ.க., தமிழர் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, பா.ம.க., எஸ்.டி.பி.அய்., தமிழ்ப் புலிகள், காஞ்சி மக்கள்  மன்றம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், இந்திய தவ்ஹித் ஜமாத், அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு அமைப்பினரும், அணுஉலை எதிர்ப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். பாளையங்கோட்டையிலிருந்து இடிந்தகரை நோக்கி பேரணியாக பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்படத் தயாரானார்கள். முன்னதாக ஜவகர் திடலில் நடந்த...

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போருக்குப் பிறகு சட்ட விரோத கைது-சித்திரவதைகள்

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போருக்குப் பிறகு சட்ட விரோத கைது-சித்திரவதைகள்

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை: இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ், எந்தக் குற்றமும் குறிப்பிடாது ஒருவரை 18 மாதம் காவலில் வைக்க முடியும். அதற்குப் பிறகு, அவர் விடுதலை செய்யப்பட் டால், அவரது நடமாட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடக்க முடியும். இந்த நடவடிக்கைகளை கேள்வி கேட்கவோ அல்லது நீதிமன்றம் தலையிடவோ உரிமையில்லை என்று பயங்கரவாத தடுப்புச் சட்டம் கூறுகிறது. கைதுக்கான ஆணை இல்லாமலே போலீஸ் கைது செய்யலாம். 72 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கைது சட்டப்படி சரியானதுதானா என்று கேள்வி...

போராட்டத்தில் கழகத் தோழர்கள்

போராட்டத்தில் கழகத் தோழர்கள்

நெல்லையில் நடைபெற்ற இடிந்தகரை நோக்கிய பயணத்தில் பங்கேற்க தமிழகம் முழுதுமிருந்தும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், கோவை தோழர்களோடு கலந்து கொண்டார். சென்னையிலிருந்து 90 கழகத் தோழர்கள் இரயில் மூலமாக நெல்லைக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 29032012 இதழ்

தூது போனாரா ‘துக்ளக்’ சோ?

தூது போனாரா ‘துக்ளக்’ சோ?

தமிழக அரசு கூடங்குளம் விவகாரத்தில் இப்படியொரு முடிவை அறிவித்ததில், பத்திரிகையாளர் சோவின் பங்கும் உண்டு என்கிறார்கள். இந்த அணு உலையை இயங்க வைப்பதையே தனது ஒரே பணியாகக் கொண்டு சுழன்று வந்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, தனது கடைசி அஸ்திரமாக சோவைத்தான் நம்பினாராம். இது சம்பந்தமாக அமைச்சரின் பிரதிநிதிகள் சோவைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் பின்னரே அரசின் நடவடிக்கையில் விறுவிறு மாற்றங்கள் ஏற்பட்டதாம். – ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 29.3.2012 பெரியார் முழக்கம் 29032012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (4) பகுத்தறிவும் – ஆன்மீகமும் கைகோர்த்தது!

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (4) பகுத்தறிவும் – ஆன்மீகமும் கைகோர்த்தது!

1916 திராவிடர் சங்கத்தின் சாதனைகளில் ஒன்று, டாக்டர் நடேசனார் அவர்களின் பெருமுயற்சியால், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு என அமைக்கப்பட்ட திராவிடர் இல்லம் எனும் விடுதியாகும். வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து பட்டப் படிப்புப் படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் உணவுக்கும் தங்குவதற்கும் விடுதி வசதியின்றி இடையூறுகளுக்கு ஆளாயினர். பார்ப்பன விடுதிகளில் இவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. எனவே, இவர்களின் நலன் காக்கும் பொருட்டு திராவிடர் இல்லம் எனும் விடுதியானது, ஜூலை மாதத்தில், திருவல்லிக்கேணி அக்பர் சாய்பு தெருவிலுள்ள விசாலமான கட்டடத்தில் நடேசனாரின் திறமையான நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இந்த விடுதியானது வெளியூரிலிருந்து படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு நல்லதொரு புகலிடமாக அமைந்தது. பார்ப்பனரல்லாத தலைவர்களான நாயரும், தியாகராயரும் ஒருவருக்கொருவர் மன வேற்றுமைக்கு உட்பட்டிருந்தது வலிமை யுடன் கூடிய பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்குத் தடையாக இருந்தது என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் மனக்கசப்புக்கு ஆளானதற்குக் காரணமான, (சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த) பழைய சம்பவம் ஒன்று உண்டு....

தலையங்கம் அய்.நா. தீர்மானத்துக்குப் பிறகு….

தலையங்கம் அய்.நா. தீர்மானத்துக்குப் பிறகு….

அய்.நா. மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா-இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம், மார்ச் 22 ஆம் தேதி ஓட்டெடுப்பு வழியாக நிறைவேறிவிட்டது. தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தன. இறுதிக் கடடத்தில் தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்த இந்தியா தீர்மானத்தின் நகலை திருத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதன்படி தீர்மானத்தில் இலங்கை மீது சர்வதேசப் பிடிக்கு ஓரளவு வழிகுத்த வாசகங்கள் அகற்றப்பட்டன. இலங்கை அரசு தமிழர் பிரச்சனை தீர்வுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனித உரிமைக் கவுன்சிலுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்; இலங்கை அரசே நியமித்த பாடம் கற்றல் மற்றும் நல்லிணக்க விசாரணை அறிக்கையின் போதாமையை சரி செய்து முழுமையான அறிக்கையாக்குவதற்கு அய்.நா.வின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கைப் பெற வேண்டும் என்ற வாசகங்கள் தீர்மானத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இந்தப் பிரச்சனைகளில் இலங்கை அரசின் சம்மதம், விருப்பம் இருந்தால் மட்டுமே,...

விஞ்ஞானிகள்-உயரதிகாரிகள் அணுஉலை தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

விஞ்ஞானிகள்-உயரதிகாரிகள் அணுஉலை தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதால் அச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், அதுவரை, புதிய அணுஉலைகள் தொடங்க தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விஞ்ஞானிகள், உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் பொது நலன் வழக்கை தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கடந்த வாரம்  வழக்கை விசாரணைக்கு அனுமதித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும் அணுசக்தி தொடர்பான அமைப்புகளுக்கும் தாக்கீது பிறப்பித்துள்ளது. ‘பொது நலன்’அமைப்பின் இயக்குனர், ‘பொது நல வழக்கு மய்ய’த்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஈ.ஏ.எஸ்.சர்மா (எரிசக்தித் துறை முன்னாள் செயலாளர்), டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் (முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர்), பேராசிரியர் டி.சிவாஜிராவ் (ஆந்திர மாநில மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் உறுப்பினர்), என்.கோபால்சாமி (முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்), கே.ஆர்.வேணுகோபால் (பிரதமரின் முன்னாள் செயலர்), டாக்டர் பி.எம்.பார்கவா (தேசிய அறிவுசார் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்), அட்மிரல் லக்ஷ்மிநாராயணன் இராமதாசு (முன்னாள்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதியக் கட்டமைப்புகளை எதிர்த்து கழகம் களமிறங்குகிறது

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதியக் கட்டமைப்புகளை எதிர்த்து கழகம் களமிறங்குகிறது

இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு போன்று இரட்டை வாழ்விடங்களாக பிரிந்து கிடக்கும் ‘ஊர் – சேரி’ப் பிளவுக்கு எதிராக கழகம் கள  இறங்குகிறது. இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை: திராவிட இயக்க நூற்றாண்டில் சாதியக் கட்டமைப்புகளுக்கு எதிரான பெரியார் திராவிடர் கழகம் பரப்புரைப் பயணம். “… நம்மவர்கள் தங்களுக்கு சூத்திரப் பட்டமும், தீண்டாதார், பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமே யாகும். ஏனெனில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல் லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக் கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போக மாட்டார்கள். அதுபோலவே இந்துமத வேதமும், சாஸ்திரமும், இராமாயண பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும்...

கழகத்தின் புதிய வெளியீடுகள்

கழகத்தின் புதிய வெளியீடுகள்

“இராவண லீலா”  – தமிழ்நாட்டின் தேசிய விழா – ஈ.வெ.ரா. மணியம்மையார் 1974 ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் நடத்திய ‘இராவண லீலா’ தொடர்பாக ‘விடுதலை’ ஏட்டில் வெளியிட்ட அறிக்கைகள்.      பக்.32; விலை: ரூ.10 “தமிழ்நாடு தமிழருக்கே” – ஈ.வெ.ரா. மணியம்மையார் ‘விடுதலை’யில் எழுதிய அறிக்கைகள், சொற் பொழிவுகளின் தொகுப்பு.  பக்.16;  விலை: ரூ.5 (திருப்பூரில் மார்ச் 18 அன்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை வெளியிட்டு, அறிமுக உரை நிகழ்த்தினார்.) நூல் பெற தொடர்புக்கு: பெரியார் திராவிடர் கழகம் தலைமையகம், 95 டாக்டர் நடேசன் சாலை, (முதல் மாடி), அம்பேத்கர் பாலம், சென்னை – 600 004. பேசி: 9941613535 பெரியார் முழக்கம் 05042012 இதழ்

சாதி அமைப்பைத் தகர்க்காமல் புரட்சி மலராது: மாவோயிசப் பெண் போராளி கூறுகிறார்

சாதி அமைப்பைத் தகர்க்காமல் புரட்சி மலராது: மாவோயிசப் பெண் போராளி கூறுகிறார்

பார்ப்பனர்கள் உருவாக்கிய சாதியமைப்பு இந்து மதத்தின் கோட்பாடாகி அதுவே சமூக அமைப்பாக கெட்டிப் படுத்தப்பட்ட நிலையில் சாதியமைப்பு தகர்க்கப்படாதவரை எந்த சமூகப் புரட்சியையும் கொண்டு வர முடியாது என்று பெரியாரும் அம்பேத்கரும் கூறினார்கள். சாதியக் கட்டமைப்பின் இறுக்கத்தைப் புரிந்து கொள்ளாத இடதுசாரிகள் வர்க்கப் போராட்டம் வெற்றிப் பெற்றால் சாதியை ஒழித்து விடலாம் என்றனர். இப்போது, தமிழ் தேசியம் பேசும் சில அமைப்புகள்கூட தமிழ் தேசியம் கிடைத்தால் சாதியை ஒழித்து விடலாம் என்கிறார்கள். சாதி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தாமலே தமிழ் தேசியத்தைக் கூர்மைப்படுத்திவிட முடியும் என்று கருதுகிறார்கள். இடதுசாரி கட்சிகள் சாதியப் பிரச்சனையைக் கடப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்ற முடிவுக்கு வந்து இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்றாகவே இருப்பதாகக் கூறி வருகிறார்கள். மார்க்சிய லெனினிய, மாவோயிச, புரட்சிகர குழுக்கள் நிலபிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சியை முன் வைக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய புரட்சியை முன்னெடுக்கும் மாவோயிச புரட்சியாளர்களும் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். இந்த இயக்கத்திலும்...

“குடிஅரசு” வாசகர் வட்டம் தொடக்க விழா

“குடிஅரசு” வாசகர் வட்டம் தொடக்க விழா

24.3.2012 சென்னை பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கத்தில் குடிஅரசு வாசகர் வட்டம் தொடக்க விழாவும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் தலைவர் வழக்கறிஞர் குமாரதேவன் தலைமையேற்க செயலாளர் க.ராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கழகத்தின் துணைத்தலைவர் ஆனூர் செகதீசன், பெரம்பூர் கந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்புரையாற்றியவர்களுக்கு ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் சார்பாக நினைவு பரிசும் பொன்னாடையும் வழங்கப்பட்டன. ‘திராவிடர் இயக்கம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி’ என்ற தலைப்பில் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் துரைசாமி, ‘திராவிடர் இயக்கத்தின் தேவை இப்பொழுதும்’ எனற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினர். இறுதியாக ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் பொருளாளர் வி.ஜனார்த்தனன் நன்றியுரையாற்றினார். திராவிடர் இயக்க உணர்வாளர்களும், நடுநிலை யாளர்களும் பெருமளவில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 05042012 இதழ்

கழக தலைமை நிலையத்தில் திராவிடர் இயக்கக் கருத்தரங்கு

கழக தலைமை நிலையத்தில் திராவிடர் இயக்கக் கருத்தரங்கு

18.3.2012 அன்று மாலை 5 மணிக்கு சென்னை கழக தலைமை அலுவலகத்தில் பட்டுக்கோட்டை இராமசாமி மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு குரு. சரவணன் தலைமை வகித்தார். ‘திராவிடர் இயக்கம் – ஓர் ஓய்வு’ என்ற தலைப்பில் ஆய்வாளர் க. திருநாவுக்கரசு கருத்துரை வழங்கினார். 70-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர்களின் கேள்விகளுக்கு க. திருநாவுக்கரசு பதிலளித்தார். பெரியார் முழக்கம் 05042012 இதழ்

சேலம் மாணவர்களுக்கு கழகத்தினர் வழங்கிய இலவச குறுந்தகடுகள்

சேலம் மாணவர்களுக்கு கழகத்தினர் வழங்கிய இலவச குறுந்தகடுகள்

சிங்கள ராணுவம் ஈழத்தில் நடத்திய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் குறுந்தகடுகள், தாதகாப்பட்டி பெரியார் நூலகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு, பொது மக்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 1350 குறுந்தகடுகள் வழங்கப்பட்டன. 16.3.2012 வெள்ளியன்று சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடம் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை 650 குறுந்தகடுகளும், 17.3.2012 சனி அன்று சேலம் சட்டக் கல்லூரி சேலம் கெண்டலாம்பட்டி சௌடேஸ்வரி கல்லூரி மாணவர்களிடமும் மற்றும் பொது மக்கள், சமூக ஆர்வலர்களிடமும் சேலம் பழைய சூரமங்கலம் நீலாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் குறுந்தகடுகள் வழங்கப்பட்டன. கழகத் தோழர்கள் வெ.ப.அம்பிகாபதி (சிவசக்தி நகர்), செந்தில்குமார் (கொண்டலாம்பட்டி), செந்தில் (அன்னதானப்பட்டி), ல.லோகநாதன் (இந்திய பொதுவுடைமை கட்சி), மணிகண்டன் (இந்திய பொதுவுடைமை கட்சி) ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர். பெரியார் முழக்கம் 05042012 இதழ்

இது ஜனநாயகமா? சாதிய நாயகமா?

இது ஜனநாயகமா? சாதிய நாயகமா?

25.3.2012 ‘இந்து’ நாளேட்டில் பேராசிரியர் சுரா தராபுரி – இந்தியாவில் சாதிய தீண்டாமைக் கொடுமைகளை விளக்கி எழுதிய கட்டுரையின் சுருக்கம்: 1949 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்ட வரைவு நகலை முன்மொழிந்த அம்பேத்கர், மனிதர்களை பிளவுபடுத்தும் ஒரு சமூகமாக இந்த நாடு இருக்கிறதே, அதன் விளைவுகள் என்னவாகும் என்று தனது அச்சத்தைத் தெரிவித்தார். நிறுவனமாக்கப் பட்ட சாதிய கட்டமைப்பில் தலித் மக்கள் சந்திக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு கொடுமைகள்  பற்றிய சரியான புரிதல் அவருக்கு இருந்தது. மேல் கீழ் என்று ஏணிப்படி வரிசை போல் இந்த ஏற்றத் தாழ்வுகள்  நிலைநிறுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். தீண்டாமைக் கொடுமைகளை அவரே தனது வாழ்க்கையில் சந்தித்தார். சாதிக் கட்டமைப் பின் விளைவான தீண்டாமைக் கொடுமைகள் இப்போதும் தொடருகின்றன. 2012 பிப்.15 அன்று அரியானா மாநிலம் தவுகாத்பூர் கிராமத்தில் ஒரு தலித் இளைஞன் பொது குடிநீர்ப் பானையில் தண்ணீர் குடித்ததற்காக உயர்சாதியினர், அவரது கையை வெட்டினர்....

தமிழ்ச் செல்வன் – தனவதி வாழ்க்கை ஒப்பந்தம்

தமிழ்ச் செல்வன் – தனவதி வாழ்க்கை ஒப்பந்தம்

கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வடலூர் வே. கலியமுர்த்தி-இராதா ஆகியோரது மகன் க. தமிழ்ச்செல்வன், எம்.எஸ்.சி., பிஎச்.டி. – செ. தனவதி, பி.எஸ்சி., பி.ஜி.டி.சி.ஏ. ஆகியோரது வாழ்க்கைத் துணை ஏற்பு விழா, 29.1.2012 காலை 7 மணிக்கு வடலூர் இராதா திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மத்திய அமைச்சர் வி.நாரா யணசாமி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு அய்யப்பன் உள்பட பலரும் வாழ்த்தினர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏடு வளர்ச்சிக்கு ரூ.2000 கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 05042012 இதழ்

சைதையில் கழகக் கூட்டம்

சைதையில் கழகக் கூட்டம்

19.3.2012 திங்கள் மாலை 6 மணிக்கு மேற்கு ஜோன்ஸ் சாலை, மேற்கு சைதாப்பேட்டையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி விளக்க  கூட்டம் நடை பெற்றது. சா. இராசு தலைமை வகித்தார். அ. தியாகு வரவேற் புரையாற்ற, ப. மனோகர் முன்னிலை வகித்தார். உடுமலை தமிழ்ச் செல்வன், கு. அன்பு தனசேகர் சிறப்புரை யாற்றினர். நிகழ்வின் தொடக்கத்தில் சம்பூகன் இசைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. தோழர் நாத்திகன், ஜெயந்தி அம்பிகா பாடல்கள் பாடினார். கழகத் தோழர் அருண், தபேலா வாசித்தார். பெரியார் முழக்கம் 05042012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (5)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (5)

அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கப் பணிகள் செப்டம்பரில் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் பார்ப்பன ரல்லாத இனத்திற்கு பெரும் பாதிப்பு நிகழக் கூடும் என்கிற நியாயமான அச்சம், பார்ப்பனரல்லாதார் பெரிய அளவில் ஒன்றுபட்டு ஒரு இயக்கமாக இணைந்து இயங்க வேண்டியதின் இன்றியமையாமை யினை உணர்த்திற்று. இந்த முயற்சியின் விளைவாக, நவம்பர் 20 இல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.எத்திராஜ் (முதலியார்) வீட்டில் நடேசனார், தியாகராயர், நாயர் உட்பட ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள், நாடெங்கிலும் இருந்து வந்து கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். (“விக்டோரியா பப்ளிக் ஹாலில்” கூடியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது) அவர்களுள் பனகல் அரசர், நாகை பக்கிரிசாமி, சர்.எ.ராமசாமி (முதலியார்), சேலம் எல்லப்பன், தஞ்சை அப்பாசாமி (வாண்டையார்), கரந்தை உமா மகேஸ்வரன் (பிள்ளை), மதுரை எம்.டி. சுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இக்கூட்டத்தில் “தென்னிந்திய மக்கள் சங்கம்” என்ற பெயரில் ஒரு ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி துவக்குவது என்றும், அதன்...

தலித் பத்திரிகையாளர்கள் இல்லாத ஊடகங்கள்

தலித் பத்திரிகையாளர்கள் இல்லாத ஊடகங்கள்

இந்தியாவின் செய்தி ஏடுகளின் அறைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களின் ‘கேமரா’ அறைகளிலும் பட்டியல் இனப்பிரிவினரையோ பழங்குடியினரையோ காண முடியவில்லை. இவர்களின் பங்கேற்பு இல்லாமலே ஊடகத் துறைகள் செயல்படுகின்றன என்று, இத்துறையில் நீண்டகாலமாக கவனம் செலுத்திவரும் பேராசிரியர் ஜெஃபிரே, புதுடில்லி பத்திரிகை ஆசிரியர் சங்கத்தில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார். தேசிய ஊடகங்களில் இந்தப் பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தியிருந்தால், இந்த அநீதியை நீக்கியிருக்க முடியும் என்றார். அமெரிக்க ஊடகங்களில் கறுப்பின மைனாரிட்டியினர் பங்கேற்பு இல்லாமல் இருந்ததைக் கண்டறிந்து அந்நாட்டு பத்திரிகையாளர் கழகம் கறுப்பின மைனாரிட்டியினரின் பங்கேற்பை ஒரு காலக்கெடு நிர்ணயித்து உறுதிப்படுத்தியது. அதுபோன்ற சமூகத் தணிக்கை இங்கே கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பட்டியல் இன பழங்குடியினரின் பிரச்சனைகளுக்காக தரமான பத்திரிகை கொண்டு வருவதற்கு தனியாக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனையையும் அவர் முன் வைத்தார். மார்ச் 31 ஆம் தேதி பத்திரிகையாளர்...

தாம்பரம் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் உரை சேது சமுத்திரத் திட்டம்: ஜெயலலிதாவின் இரட்டை வேடம்

தாம்பரம் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் உரை சேது சமுத்திரத் திட்டம்: ஜெயலலிதாவின் இரட்டை வேடம்

ஆடம்ஸ் பாலத்தை ராமன் பாலம் என்று இந்துத்துவ பார்ப்பன சக்திகள் கூறி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மதவெறி கருத்துகளையே முன் வைத்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்திவிட்டு, ‘ராமன் பாலத்தை’ இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மத்திய அரசிடம் உச்சநீதி மன்றம் கருத்து கேட்டுள்ளது. இந்த நிலையில் ‘இராமன் பாலத்தை’ தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி, தனது பார்ப்பன இந்துத்துவா ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இதே ஜெயலலிதா கடந்த காலங்களில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து அமுல்படுத்தக் கோரி தேர்தல் அறிக்கைகளில் கூறியதையும் ‘ராமன் பாலம்’ என்ற கற்பனைக்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை என்பதையும் விளக்கி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து: இந்தப்...

கல்பாக்கம் அணுமின் நிலைய கதை என்ன?

கல்பாக்கம் அணுமின் நிலைய கதை என்ன?

கல்பாக்கம் அணுமின் நிலையம் – அதன் இலக்கு உற்பத்தி திறனில் 30 சதவீதத்தைத் தாண்டியதே இல்லை 1969 இல் கட்டுமானத்தைத் துவங்கிய மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் என்ற கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு உலைகளின் முதல் யூனிட் தன் மின் உற்பத்தியை ஜூலை 1983 இல் துவங்கியது. இது 235 மெகாவாட் திறனுள்ள அணு உலையாகும். இரண்டாவது யூனிட் 23.1.1986 இல் தன் உற்பத்தியைச் துவங்கியது. 1983-84-லிருந்து 2007-08 ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் இந்த அணுமின் நிலையமானது – 50 சதவீதம் மேலாக இரண்டு ஆண்டுகளிலும் (1987-88 = 53.42ரூ, 2006-07 = 58.26ரூ) 40 ரூ – 50ரூ உற்பத்தியை நான்கு ஆண்டுகளிலும் (1984-85 = 45.04ரூ, 1985-86 = 48.46ரூ, 1986-86 = 41.71ரூ, 2005-06 = 40.58ரூ) 30ரூ – 40ரூ – உற்பத்தியை நான்கு ஆண்டுகளிலும் (1988-89 = 30.46ரூ, 2003-04...

சங்கமித்ரா முடிவெய்தினார்

சங்கமித்ரா முடிவெய்தினார்

நெருப்பு எழுத்துகளால் ஆரியத்தை அலற வைத்த ஆற்றல்மிகு எழுத்தாளர் சங்கமித்ரா (72) முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கடந்த சில மாதங்களாக இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, திருச்சி கி.ஆ.பெ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த 7 ஆம் தேதி காலை முடிவெய்தினார். 1970களில் ‘விடுதலை’ நாளேட்டில், ‘காஞ்சிப் பெரியவாளின் கல்கி முகாரி’ என்று எழுதத் தொடங்கிய அவர், தனது எண்ணங்களை எழுதிக் குவித்துக் கொண்டே இருந்தார். ‘பெரியார் தமிழ்ப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்த அவர், வே. ஆனைமுத்து அவர்களுடன் வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, வகுப்புவாரி உரிமை, பெரியார் சிந்தனைகளை ‘இந்தி’ மொழியில் பேசி பரப்பி வந்தார். ‘ஸ்டேட் வங்கி’யில் உயரதிகாரியாகப் பணியாற்றி, பார்ப்பன அதிகாரிகளின் பூணூல் வெறி சகிக்காது, பதவியை உதறி வெளியே வந்த அவர், பார்ப்பன அதிகார வர்க்கத்தை தனது எழுத்துகளால் தோலுரித்துக் காட்டி வந்தார். திருச்சி தென்னூரில் அவரது உறவினர்...

லஞ்சம் வாங்குவதற்கு சித்திரவதை செய்யும் இராணுவம்-3

லஞ்சம் வாங்குவதற்கு சித்திரவதை செய்யும் இராணுவம்-3

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை: பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழோ, சந்தேகத்தில் பேரிலோ கைது செய்யப்படுகிறவர் களுக்கு எந்த முறையான சட்ட நடைமுறைகளை யும் இலங்கை அரசு பின்பற்றுவது கிடையாது. ‘ஆம்னஸ்ட்டி இன்டர் நேஷனல்’ இப்படி ஏராளமான வழக்குகளை கண்டறிந்துள்ளது. பிரிட்டனில் செயல்படும் ஒரு மனித உரிமை அமைப்பு (குசநநனடிஅ கசடிஅ வடிசவரசந) இலங்கையில் செயல்படும் தமது பிரதிநிதிகளிடமிருந்து பெற்ற புகார்களை அறிக்கையாக 2011 டிசம்பரில் வெளி யிட்டுள்ளது. இதன்படி 32 மனித உரிமை களப் பணியாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, ராணுவ தடுப்பு முகாம்களிலும் காவல் நிலையங் களிலும்...

கழகத் தோழர்களை தாக்கிய  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கழகத் தோழர்களை தாக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கிருட்டிணகிரி மாவட்டம் நீலகிரியில் கழகத் தோழர்கள் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த கழகத் தோழர்கள் ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது மருத்துவமனைக்குள்ளும் நுழைந்து தாக்கினர். இதனால் மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ள இராமச்சந்திரா என்பவரின் அண்ணன் வரதராசன் என்பவரே வேன்களில் ஆட்களை அழைத்து வந்து 6 ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு கழகத்தினர் மீது தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் குடும்பத்தினரை எதிர்த்து வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடாத நிலையில் கழகத்தைச் சார்ந்த தோழர் மாருதி, தனது குடும்பத்தவரை வேட்பாளராக நிறுத்தியதால் ஆத்திரமடைந்தனர். ராமச்சந்திரனும் அவரது ஆதரவாளர்களும் பெரியார் திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விடுமாறு கட்டாயப்படுத்தினர். தோழர்கள் அதை ஏற்க மறுத்து வருவதால் இந்தத் தாக்குதல்...

பெ. மணியரசன் கூறுகிறார்…

பெ. மணியரசன் கூறுகிறார்…

“தமிழர் ஒற்றுமை என்ற பெயரில் சாதி ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டோம். சாதி ஒடுக்கு முறை நீங்கும்போதுதான் உண்மையான தமிழர் ஒற்றுமை ஏற்படும் என்பது எங்கள் கொள்கை.” – த.தே.பொ.க. செயலாளர் பெ. மணியரசன் பேட்டியிலிருந்து – ‘கருக்கல்’ இதழ் மார்ச்-ஏப். 2012 பெரியார் முழக்கம் 12042012 இதழ்

கோயில் சொத்துகளை  ஏப்பமிடும் பார்ப்பனர்கள்

கோயில் சொத்துகளை ஏப்பமிடும் பார்ப்பனர்கள்

கோயில் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டி லிருந்து நீக்கி, தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராமகோபாலன் ‘பிராமண சங்கம்’ இந்து முன்னணி போன்ற பார்ப்பன பார்ப்பனிய அமைப்புகள் கூப்பாடு போடுகின்றன. கோயில் சொத்துகளை சுருட்டுவதில் பார்ப்பனாகளே முன்னணியில் இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது. மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் நிர்வாக அதிகாரி பரஞ்சோதி, கோயில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். 473 பேரில், இரண்டு பேர் மட்டுமே முஸ்லீம்கள், இந்துக்களில் ஒரு சில பார்ப்பனரல்லாதார் தவிர, பெரும்பான்மையினர், அய்யர், அய்யங்கார்கள்தான். கே.எம்.முன்ஷி ராஜ கோபாலாச்சாரி பார்ப்பனர்களால் தொடங்கப் பட்ட பாரதிய வித்யாபவன், ‘காபாலீசுவரனுக்கு’ 35 லட்சம் ரூபாய் வாடகை தரவில்லை. 1903 ஆம் ஆண்டு பார்ப்பனர்கள் தொடங்கிய மயிலாப்பூர் கிளப் ‘கபாலீசுவரனுக்கு’ தரவேண்டிய வாடகை பாக்கி 3.57 கோடி, ‘புதிய ஜனநாயகம்’ பத்திரிகை  இதை விரிவாக அம்பலப்படுத்தியுள்ளது. தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தீட்சப் பார்ப்பனர் கோயில்...

பா.ஜ.க.வின் ‘தமிழ் தேசியம்’

பா.ஜ.க.வின் ‘தமிழ் தேசியம்’

சாதி எதிர்ப்பு – பார்ப்பன எதிர்ப்பு – இந்து மத எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டு, மொழி அடிப்படையில் முன் வைக்கப்படும் தமிழ் தேசிய முழக்கத்தில் பா.ஜ.க.வினரும் பங்கேற்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதை அண்மையில் வந்துள்ள செய்திகள் உறுதி செய்கின்றன. தமிழக பா.ஜ.க. மதுரையில் ஏப்ரல் மாதத்தில் ‘தாமரை சங்கமம்’ என்ற பெயரில் மாநாடு நடத்தவிருக்கிறது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பா.ஜ.க. தலைவர் பொன். இராதா கிருட்டிணன், “மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 2 தமிழ்த் தாய் சிலைகளின் பவனி 8 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் (‘தினத்தந்தி’ 6.4.2012) என்று கூறியுள்ளார். மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜரத்தினம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “கன்யாகுமரியிலிருந்து தமிழன்னை சிலை மதுரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படவிருக்கிறது. தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க பா.ஜ.க.வால் தான் முடியும் என்பதோடு, தமிழ் உணர்வு கலந்த தேசியமே...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (6)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (6)

1917 “தென்னிந்திய மக்கள் சங்கம்” சார்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் நாளிதழ்கள் வெளி வந்தன. ஆங்கில நாளிதழ் ‘ஜஸ்டிஸ்’ பிப்ரவரி 26-ல் வெளியிடப்பட்டது. இவ்விதழுக்கு ஆசிரியராகப் பணியாற்ற சி.கருணாகரமேனன் ஒப்புக் கொண்டிருந்தார். அன்னிபெசன்ட் சர். சி.பி.ராமசாமி (அய்யர்), கேசவ (பிள்ளை) ஆகியோர் குறுக்கிட்டு அவரைத் தடுத்தனர். எனவே ஜஸ்டிஸ் நாளிதழ் வெளிவர 6 நாட்களே இருக்கும் நிலையில் கருணாகரமேனன் ‘பல்டி’ அடித்து ஆசிரியராக இருக்க மறுத்து விட்டார். பின்னர், நாயரே கவுரவ ஆசிரியர் ஆனார். ‘மதராஸ் ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த பி. ராமன் (பிள்ளை) துணை ஆசிரியர் ஆனார். தமிழ் நாளிதழ் ‘திராவிடன்’ ஜூன் மாதத்தி லிருந்து வெளிவரத் துவங்கியது. இவ்விதழின் ஆசிரியராக என்.பகவத்சலம் (பிள்ளை), துணை ஆசிரியர்களாக சாமி ருத்ர கோடீஸ்வரர், பண்டித வில்வபதி (செட்டியார்) ஆகியோர் பணியாற்றினர். ஏற்கனவே நடைபெற்று வந்த (நிறுவியது 1885-ல்) ‘ஆந்திரப் பிரகா சிகா’ என்ற தெலுங்கு வார இதழின்...

உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நர்மதா அணைக்கு ஒரு தீர்ப்பு, சேது சமுத்திரத்துக்கு வேறு ஒரு தீர்ப்பா?

உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நர்மதா அணைக்கு ஒரு தீர்ப்பு, சேது சமுத்திரத்துக்கு வேறு ஒரு தீர்ப்பா?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையி லிருந்து: இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் இராமாயணத்தைப் பற்றி பேச வேண்டி வந்துள்ளது. சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் அக்டோபர் 1 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்று தி.மு.க.வும் அதன் தோழமை கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இதில் நீதிமன்றங்களின் போக்கைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரி தடை ஆணை கேட்டு சுப்ரமணியசாமி வழக்குத் தொடுத்தார். மத்திய அரசிடம் எந்த கருத்தும் கேட்காமல், இராமர் பாலத்திற்கு எந்தவித சேதமும் வராமல் வேலை நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் ஆணை வழங்கியது. (நாம் சாதாரண ஒரு குடிமகன் நினைத்தால்கூட என்னுடைய நிலத்தில் ஒருவன் ஆக்கிரமிப்பு செய்கிறான் என்றோ, அல்லது எனது வீட்டை இடிக்க...

86 ஆம் அகவையில்  மூத்த பெரியார் தொண்டர் திருவாரூர் தங்கராசு

86 ஆம் அகவையில் மூத்த பெரியார் தொண்டர் திருவாரூர் தங்கராசு

கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடறிந்த பேச்சாளருமான திருவாரூர் தங்கராசு அவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி 86 ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாளில் இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லம் சென்று கழகத் தோழர்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோ, வழக்கறிஞர் குமாரதேவன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் உமாபதி, அன்பு தனசேகர், சுகுமார், இராவணன், கோவை ராசுக்குமார், ஜான் உள்ளிட்ட தோழர்கள் திருவாரூர் தங்கராசு அவர்களை சந்தித்து  சால்வை அணிவித்து, மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கழகத் தோழர்களை சந்தித்த மகிழ்வில் பழைய வரலாறுகளை நினைவுகூர்ந்து, திருவாரூர் தங்கராசு நீண்ட நேரம் உரையாடினார். பெரியார் கொள்கைக்கே அர்ப்பணித்து, நாடு முழுதும் கொள்கைகளை எடுத்துச் சென்ற திருவாரூர் தங்கராசு அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது. பெரியார் முழக்கம் 12042012 இதழ்

அணி திரட்ட முடியுமா?

அணி திரட்ட முடியுமா?

பொருளாதாரப் புரட்சி ஒன்றை ஏற்படுத்த, பாட்டாளிகளைத் தட்டி எழுப்ப அவர்களிடம் மார்க்ஸ் கூறினார்: “அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவும் உங்களிடம் இல்லை” என்று. ஆனால், சமுதாய மற்றும் மதவியல் உரிமைகளை சில சாதிகளுக்கு அதிகமாகவும், சில சாதிகளுக்கு குறைவாகவும் பல்வேறு சாதிகளுக்கு இடையே மிக வஞ்சகமாகவும் பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ள நிலையில், சாதியமைப்புக்கு எதிராக இந்துக்களைத் தட்டி எழுப்ப, காரல்மார்க்சின் முழக்கம் சிறிதும் பயன் அளிக்காது. சாதிகள் உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற வரிசைப்படி தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தங்கள் அந்தஸ்தை சாதிகள் மிகவும் அக்கறையோடு காப்பாற்றி வர எண்ணு கின்றன. சாதிய அமைப்பு ஒழிக்கப்பட்டால், சில சாதிகள் மற்ற சாதிகளைவிட அதிகமாக தங்கள் தனியுரிமைகளையும், அதிகாரங்களையும் இழக்க வேண்டியிருக்கும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. எனவே, சாதி அமைப்பு என்னும் கோட்டையைத் தகர்க்க, இந்துக்களை பொதுவான ஓர் அணியாக ஒன்று திரட்ட உங்களால் முடியாது. புரட்சியாளர் அம்பேத்கர் பெரியார் முழக்கம்...

ஊர்த் தமிழன் – சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்!

ஊர்த் தமிழன் – சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்!

இரட்டை தம்ளர், இரட்டை சுடுகாடு என்ற சாதித் தீண்டாமை வடிவங்களை எதிர்த்து பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் பிறந்த நாளில் பரமக்குடியிலிருந்து ‘ஊர்-சேரி’ என்ற இரட்டை வாழ்வுரிமை அவலங்களை எதிர்த்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ‘சுதந்திரம்’ பெற்று விட்டதாக கூறப்படும் ஒரு நாட்டில், ஊரின் கடைக் கோடியில் சாதியால் ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் தனியாகக் குடியமர்த்தப்பட்டுக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு கிராமமும், ‘ஊர்-சேரி’ என்று பிரிந்து கிடக்கிறது. இப்படி ஒரு இழிவானதலைகுனியத்தக்க பிரிவினை அமைப்பு நீடித்து வருகிறதே என்ற சிந்தனைகூட வற்றிப் போய், தமிழர் சமூகம் கிடக்கிறது என்பதுதான் வேதனை. “மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும். ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த...

வடசென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வடசென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புளியந்தோப்பு பகுதி கழகத்தின் சார்பில் அம்பேத்கரின் 122-வது பிறந்த நாளை முன் னிட்டு “அம்பேத்கரின் எதிர்பார்ப்பு நிறைவேறி யுள்ளதா” என்ற தலைப் பில் மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. சி.அருள்தாஸ் தலைமை வகிக்க, விசுயன், தா.இ.கோவிந்தன் முன்னிலை வகிக்க வரவேற்புரையினை அ.அமுல்ராசு நிறைவேற்றினார். தொடர்ந்து மாவட்டக் கழகத் தலைவர் ஏ.கேசவன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ச.குமாரதேவன், கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சிற்பிராஜனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிற்பிராசன் நடத்தி முடிக்கும்போது ஆரவாரமும், கைத்தட்டலுமாக பொதுமக்கள் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் புதிதாக ஏழு தோழர்கள் (மது, விஜி, அண்ணாமலை, தமிழ், ராஜசேகர், அப்பு, சுதாகர்) கழகத்தில் இணைந்தனர். நன்றியுரையினை சுப்ரமணியன் நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் 19042012 இதழ்

பெரியாரின் தொண்டு: தலைமை நீதிபதி பெருமிதம்

பெரியாரின் தொண்டு: தலைமை நீதிபதி பெருமிதம்

கடந்த காலங்களில் சாதி ரீதியான பாகுபாட்டை மிக அதிகமாக கண்டிருக்கிறோம். அவையெல்லாம் இந்திய வரலாற்றின் கருப்பு நாட்கள். தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது. பெரியாரின் குரலை அடுத்துதான், இடஒதுக்கீட்டு கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இன்று பல்வேறு துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற சாதியினருக்குவேலை கிடைப்பதற்கான வழியை அமைத்துக் கொடுத்தவர் அந்த பெரியார்தான். – உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உரையிலிருந்து. (நன்றி: ‘தினத்தந்தி’ 17.4.2012) பெரியார் முழக்கம் 19042012 இதழ்

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலித் குழந்தைகூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலித் குழந்தைகூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பச்சயன்காடு என்ற ஊரில் உள்ளாட்சித் துறை நடத்தும் தொடக்கப் பள்ளியில் ஒரு தலித் மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது. இது குறித்து ‘இந்து’ நாளேடு (ஏப், 2012) முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பச்சயன்காடு கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு குழந்தைகூட படிக்க முன் வரவில்லை. இந்தப் பள்ளி இயங்கும் பகுதியில், பச்சயன்காடு, தெருக்காடு கிராமங்களில் தலித் குடியிருப்புகள் இருக்கின்றன. 1980 ஆம் ஆண்டுக்கு முன் இப்பகுதி  தலித் மக்கள் தங்கள் குழந்தை களை இப்பள்ளியில் சேர்த்து வந்தனர். அதே ஆண்டின் இடைக்காலத்தில் தலித் குழந்தைகள் மீது அவமதிப்பும், பாகுபாடும் திணிக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளை அப்பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திக் கொண்டனர். இந்த அவமதிப்பை எதிர்த்து இப்படி ஒரு முடிவை எடுத்தவரின் பேரன்...

காஞ்சியில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

காஞ்சியில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

சென்னை தாம்பரத்தில் 31.3.2012 மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ம.ரே.ராச குமார் தலைமை வகிக்க, க.வே.சேகர் வரவேற்புரையாற்ற, மு.தினேசு குமார், டேவிட் பெரியார் முன்னிலை யில் கா.ரவிபாரதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந் திரன் கருத்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தனது உரையில் அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் பற்றியும், இராஜீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும் தனித் தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார் பெரியார் முழக்கம் 19042012 இதழ்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை தமிழகத்தில் நடந்த இராமாயண எதிர்ப்பு இயக்கங்கள்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை தமிழகத்தில் நடந்த இராமாயண எதிர்ப்பு இயக்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையி லிருந்து: “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்களுக்கு வால்மீகி இராமாயணமோ, துளசிதாச இராமா யணமோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது கம்ப இராமாயணம தான். இராவணன என்பவன் ஒரு ஒழுக்கமான மன்னன் என்றும், கடத்தி வந்த சீதையைக்கூட மாண்புடன் நடத்திய பண்பாளன் என்றும்தான் நினைக்கிறார்களே தவிர, வில்லன் கொடியவன் என்ற சிந்தனையே தமிழ்நாட்டு மக்களிடம் இல்லை” என்று மற்றொரு ஆய்வாளர் எழுதுகிறார். ஒரு பெரிய பிரச்சார இயக்கம் இரா மனுக்கு எதிராக நடைபெறுகிறது; இராவணனை வைத்து காவியங்கள் உள்ளன என்றும் எழுதியுள்ளார். 1922 ஆம் ஆண்டு திருப்பூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாநாடு நடக்கின்றது. கோவில் களில் நுழைய இதுவரை அனுமதிக்கப்படாத நாடார்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று, பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். (1950 வரை நாடார்களும்  கோவிலுக்குள்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (7)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (7)

1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (2) நீதிக்கட்சியின் வளர்ச்சியைக் கண்ட காங்கிரஸ் கட்சியினர், தமது கட்சியிலுள்ள பார்ப்பன ரல்லாதாரை திருப்தி செய்யவும், பார்ப்பனரல்லாதார் நலனில் காங்கிரசுக்கும் அக்கறையுள்ளது என்பதாகக் காட்டிக் கொள்ளவும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பார்ப்பனரல்லாதார் அமைப் பினை ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற பெயரில் தோற்றுவிக்கலாயினர். இதன் அமைப்புக் கூட்டம் செப்டம்பர் 15 இல் கூட்டப்பட்டு, அடிதடி ரகளையில் முடிந்தது. அதன் பின் மீண்டும் செப்டம்பர் 20 இல் கூட்டப்பட்டு, இதன் அமைப்பாளர் கேசவபிள்ளையால் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘பார்ப்பனரல்லாதாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்று மாண்டேகுவிடம் கூறுதல்’ இச்சங்கத்தின் நோக்கம் என்பதால் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ‘சென்னை மாகாண சங்கம்’ என்பது மதுரைப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் உண்டான ஒரு சங்கம் என்று நீதிக்கட்சியினர் எடுத்துக் கூறினர். ‘இந்து’ நாளிதழ் இச்சங்கம் மிகவும் அவசியமானது என்று எழுதியது. சென்னை மாகாணச் சங்கத்தின் தலைவராக...

சேலம் கிழக்கு கழகம் சாதனை; கழக ஏட்டுக்கு 580 சந்தாக்கள்

சேலம் கிழக்கு கழகம் சாதனை; கழக ஏட்டுக்கு 580 சந்தாக்கள்

2.4.2012 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு சேலம் தாதகாப்பட்டி பெரியார் உடற்பயிற்சி மையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்க, மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா ஆயிரம் சேர்ப்பது என முடிவு செய்து முதல் தவணையாக 580 சந்தாக்கள் தலைமைக்கு அனுப்பப்பட்டது. மீதி சந்தாக்களை விரைவில் வசூலித்து ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. மே மாதம் 26 ஆம் தேதி, ஓமலூரில் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் நாத்திகர் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஏற்காடு கோடை விழாவின்போது, அரசு கண்காட்சி சாலையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து, புகைப்பட கண்காட்சி மற்றும் புத்தக விற்பனை செய்வது என்றும், ஜூன் மாதம் ஏற்காடு பகுதியில் படிப்பகம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மே 6 ஆம் தேதி ஆத்தூரிலும், ஜூன்...

தலையங்கம் ‘மனுதர்மத்துக்கு’ மரண அடி

தலையங்கம் ‘மனுதர்மத்துக்கு’ மரண அடி

‘சூத்திரர்களுக்கு கல்வி தரக் கூடாது’ என்று கூறியது ‘மனுதர்மம்’. அந்த பார்ப்பன மனுதர்மக் கோட்பாட்டுக்கு தந்துள்ள மரண அடிதான். 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வித் திட்டம், 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வியை இலவசமாக கட்டாயமாக வழங்குவதை உறுதி செய்யும் இத் திட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதி சுவதந்தர் குமார் ஆகியோர், அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார், நீதிபதி கே.எஸ். இராதா கிருஷ்ணன்.  இத் தீர்ப்பு அரசு நிதி உதவி பெறாத மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்ற மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை தீர்ப்பின் படி அரசின் இந்த சட்டம், அரசு  உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறாத மைனாரிட்டி அல்லாத பள்ளிகளுக்கு பொருந்தும்....

ஆனூராருக்குப் ‘பெரியார் ஒளி’ விருது

ஆனூராருக்குப் ‘பெரியார் ஒளி’ விருது

நெய்வேலியில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கினார் 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் சமூகத் தொண்டாற்றி வரும் தலித் அல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி வருகின்றனர். 2012 ஆம் ஆண் டிற்கான ‘பெரியார் ஒளி’ விருது கழகத் தின் துணைத் தலைவர் ஆனூர் செகதீச னுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதேபோல் ‘அம்பேத்கர் சுடர்’ விருது முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தோழர் என். வரதராஜனுக் கும், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது ஆய்வறிஞர் கந்தசாமிக்கும் ‘காமராசர் கதிர்’ விருது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமாருக்கும், ‘காயிதே மில்லத் பிறை’ விருது பேராசிரியர் அப்துல் காதருக்கும், ‘மொழி ஞாயிறு’ விருது பேராசிரியர் க.பா.அறவாணனுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் அன்று மாலை 7 மணிக்கு நெய்வேலியில் நடந்த எழுச்சியான...

சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை வளர்க்கும் சாதிய வாழ்க்கைக்கு முடிவு கட்டுவோம்

சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை வளர்க்கும் சாதிய வாழ்க்கைக்கு முடிவு கட்டுவோம்

பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கழகத்தின் 15 நாள் பரப்புரை இயக்கம் தொடங்கியது உசிலம்பட்டியில் சாதி வெறியர்கள் கல்வீச்சில் தோழர் படுகாயம்; சலசலப்புகளுக்கு அஞ்சாமல் பயணம் தொடருகிறது இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு போன்றவற்றிற்கு எதிராக பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், இந்த ஆண்டு ஊர் – சேரி என்று இருப்பதற்கு எதிராக, பரப்புரை பயணத்தை துவங்கியுள்ளது. அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், சாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கழகம் பயணத்தை துவங்கியது. தாழ்த்தப்பட்டவர் மத்தியில் மட்டுமே பேசிய சாதி ஒழிப்பு இயக்கங்களுக்கு மாறாக, பிற்படுத்தப் பட்டவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, அவர்களிடத்திலே தீண்டாமை கொடுமைகளை விட்டொழிக்குமாறு வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பரப்புரை செய்து வரும் கழகம், இவ்வாண்டு தாழ்த்தப்பட்ட அமைப்புகளோ, சாதி ஒழிப்பு...

இதுவா, தமிழ்ப் புத்தாண்டு?

இதுவா, தமிழ்ப் புத்தாண்டு?

சித்திரையில் தொடங்குகிறதாம் ‘தமிழ்ப் புத்தாண்டு’. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுதுதான் தமிழர்களின் ‘புத்தாண்டு’ என்று நீட்டி முழக்குகிறார். இப்போது பிறந்துள்ள “தமிழ்” வருடத்தின் பெயர் என்ன தெரியுமா? “நந்தன” – இது தமிழா என்று கேட்டு விடாதீர்கள். வடமொழி தான்! ‘பிரபவ’ தொடங்கி ‘அட்சய’வில் முடியும் 60 ஆண்டுகளின் பெயர் களுமே சமஸ்கிருதம் தான்! மருந்துக்குக்கூடதமிழ் இல்லை. ஆனால், இதற்குப் பெயர் ‘தமிழ்’ப் புத்தாண்டாம்! இதோ 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்! பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ,...

பன்னாட்டு நிறுவனங்கள் – பார்ப்பனர்கள் – ‘பகவான்கள்’ கூட்டுக் கொள்ளை

பன்னாட்டு நிறுவனங்கள் – பார்ப்பனர்கள் – ‘பகவான்கள்’ கூட்டுக் கொள்ளை

விவசாய மான்யம், உணவு மான்யம் போன்ற மான்யங்கள் வழங்குவதால்தான் கடும் நிதி நெருக்கடிகளை சந்திப்பதாக மத்திய அரசு புலம்புகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச நிதியமைப்புகளான உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு போன்ற நிறுவனங்களும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால், பெரும் தொழில் நிறுவனங்களான கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் பெரும் தொகை ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி செய்யப்படுவது பற்றி, பார்ப்பன ஊடகங்களோ, இந்திய பார்ப்பன ஆட்சியோ, சர்வதேச நிதியமைப்புகளோ, வாய் திறப்பதில்லை. 2005 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை பெரும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட வருமான வரி மட்டும் ரூ.3,95,878 கோடி. (2005 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக 48.17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது) இதே காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ‘எக்சைஸ்’ வரி – ரூ.9,55,726 கோடி. (217.81 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது) இதே காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட சுங்கவரி (கஸ்டம்ஸ் டூட்டி) –...

அஞ்சலகத்தில் “தீண்டாமை”யை  கண்டித்து கழகம் போராட்டம்

அஞ்சலகத்தில் “தீண்டாமை”யை கண்டித்து கழகம் போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் வடவள்ளி ஊராட்சியில் அஞ்சலகத்தில் அங்குள்ள தலித் மக்களை அனுமதிக்காததை கண்டித்தும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட தாத்தம்பலயத்தில் செயல்படும் அங்கன்வாடியில் தலித் குழந்தைகளை அனுமதிக்காததை கண்டித்தும் சின்னவடவல்லியில் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் 16.4.2012  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் து.ராமசாமி, கலங்கல் வேலுசாமி, சூலூர் குமாரவேல், கோவை வே.கோபால், இர. இரஞ்சித் பிரபு, சா.கதிவரன், அன்னூர் பொறுப்பாளர்கள் ஜோதி ராம், ஈஸ்வரன், இராமன், கணேசன், வீரமுத்து மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்கள், பெண்கள் பங்கேற்றனர். கழகம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தவுடன் ஊராட்சி தலைவர் கணேசன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அங்கன்வாடி செயல்படும் கட்டிடம் தனியாருக்கு சொந்தம் என்பதால் பொது கட்டிடம் தேவை என்று முறையிட்டதை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் தனது சிறப்பு நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் ஒதுக்கி யுள்ளார். பெரியார் முழக்கம் 26042012 இதழ்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகத்தைத் தடுக்க வந்த சட்டம்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகத்தைத் தடுக்க வந்த சட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: எம்.ஆர்.இராதா நாடக உலகில் முழுக்க முழுக்க பெரியார் கருத்துகளைப் பற்றி மட்டுமே பேசியவர். சினிமாவை விரும்பியவர் அல்ல. 1937 முதல் 1942 வரை சினிமாவில் நடித்து, சினிமா வேண்டாம் என்று நாடகம் நடிக்க வந்தவர். பன்னிரண்டு ஆண்டு களுக்குப் பிறகு, ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று, பி.ஏ. பெருமாள் கேட்ட பிறகு சினிமாவில் நடிக்க வருகிறார். அப்போதுகூட, “நான் தினமும் நாடகம் நடிப்பேன், நேரம் இருக்கும்போது மட்டும் தான் படப்பிடிப்பிற்கு வருவேன், என்னை தொல்லை கொடுக்கக் கூடாது” என்று சொல்வாராம். இன்னொன்று ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தில் தன் மனைவியை நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சியை எந்த காரணத்தைக் கொண்டும் நீக்கிவிடக் கூடாது என்பது எம்.ஆர்.இராதாவின் மற்றொரு கோரிக்கை. அவர் நாடகத்தை துவக்கும் போதெல் லாம் பெரியார்...

நன்கொடை

நன்கொடை

தென் சென்னை மாவட்டக் கழகப் பொருளாளர் கரு. அண்ணாமலை-வெ.தமிழ்ச் செல்வி ஆகியோரின் 2வது மகன் அண்.அன்பரசன், 12.4.2012 அன்று 14 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ.2000 அளித்தார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்.) பல்லாவரம் பம்மல் அ.பா. செல்வராசு நினைவு  (16.3.2012) நாளை முன்னிட்டு தலைமைக் கழக அலுவலக நிதியாக அவரது மகள் ஜோசப் ஸ்டாலின் ரூ.5000 நன்கொடை அளித்தார். தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி குமரன் பெற்றுக் கொண்டார். பெரியார் முழக்கம் 26042012 இதழ்