Category: நிமிர்-கட்டுரைகள்

பார்ப்பனரல்லாத இடது சக்திகளின் சாதனைகள் – ஆர்.முத்துக்குமார்

கல்லடி விழும் காய்த்த மரம் என்று நீதிக் கட்சியைச் சொல்லிவிடலாம். எத்தனை யெத்தனை விமரிசனங்கள் அந்தக் கட்சியின் மீது. நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையிலும் அதன்மீதான சொல்லடிகள் நின்றபாடில்லை. வேடிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு விமரிசனத்துக்கும் உரிய முறையில் பதில் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, வலுக்கட்டாயமாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரம் பற்றி இன்றைக்கு அறிவுஜீவிகள் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதி மக்கள் என்றால், எல்லா மட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள். மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு என்று எந்த வித்தியாசமும் பெண்கள் விஷயத்தில் பார்க்கப் படுவதில்லை. வெள்ளையனுக்கு வால் பிடித்த கட்சி, சுதந்தரத்துக்கு எதிரான கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, பெண்களை இழிவாக நினைக்கும் கட்சி என்பன போன்ற புளித்துப்போன புரட்டுகளுக்குப் பதிலளிப்பதைக் காட்டிலும் நீதிக்கட்சி இங்கே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்துப் பேசுவது சரியாக இருக்கும். குறிப்பாக, இது நீதிக்கட்சியால் அமலுக்கு...

அம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சிப் பெறலாமா இந்துமதம்? – ஜெயராணி

மற்ற நாட்டில் மனிதனிடம்மனிதனுக்குப் பற்றும் அன்பும் உண்டாகவே  கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும் வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி இருக்கின்றன.  –பெரியார்   அந்தத் தேர் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. ஆதிக்கம், மூடத்தனம், வெறுப்புணர்வு, பகைமை, வன்மம் நிறைந்தவர்கள் அதற்காக தம் பலமனைத்தையும் திரட்டுகின்றனர். இப்போது வரை அந்த தேரை அசைக்க முடியவில்லை என்றாலும் அவர்களது முயற்சி மிகத் தீவிரமானதாகவும் தீவிரவாதத் தனமானதாகவும் இருக்கிறது. பாகுபாட்டையும் சக மனிதரை ஒடுக்குவதையும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட அவர்களது கிளைகள் எங்கும் பரவுவதைப் பார்க்கிறோம். அவர்களது வன்ம வேர்கள் இந்த ஜனநாயகப் பூமியைப் பதம் பார்க்கின்றன. இந்நாட்டின் ஜனநாயகம் முற்றிலுமாக வேரறுக்கப்படும் சேரிகள் தொடங்கி அதை நிலைநிறுத்தும் பேரதிகாரத்தைக் கொண்ட நாடாளுமன்றம் வரை எங்கும் அவர்கள் வியாபித்துவிட்டனர். சனாதன தர்மம் எனும் கதிர்வீச்சு ஒவ்வொரு மூளைக்குள்ளும் ஊடுருவிப் பாய்ச்சப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டு அறச்சிதைவு வரலாறு கொண்ட இந்நாட்டை பண்படுத்தும்...

தந்தை பெரியார் கருத்துமரபை முன்னெடுத்த எழுத்தாளர் விந்தன்.. வீ.அரசு

இதழியல்வழி உருவாவதே குட்டிக்கதை எனும் வடிவம். பக்க வரையறைகள் இதழியலில் பல வடிவங்களை உருவாக்கியுள்ளது என்று கூற முடியும். சிறுகதையும்கூட அவ்வாறு உருவானதுதான். கல்கி இதழில் விந்தன் எழுதிய குட்டிக்கதைகள் நகைச்சுவை உணர்வு, எள்ளல் பாணி ஆகியவற்றைக் கொண்டவை. மரபான விழுமியங்களை நக்கல் செய்து, புதிய விழுமியங்களைக் குழந்தைகளுக்கு சொல்வதில் விந்தன் தனித்தவராக அமைகிறார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த அ.மாதவையா(1872-1925), வ.ரா. (18891951), புதுமைப்பித்தன் (1906-1948) ஆகியோர் கரடுதட்டிப்போன சமூகக் கொடுமைகளைத் தம் எழுத்துக்களில், தோலுரித்தவர்களில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியவர்கள். சாதியக் கொடுமை, பெண்ணடிமை போன்றவற்றைத் தமது ஆக்கங்களில் பதிவு செய்தவர்கள். இந்த காலங்களில் சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகள் குறித்து தம் ஆக்கங்களில் பதிவு செய்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மூடநம்பிக்கைக்கு எதிரான பல படைப்பாளிகள் தமிழில் உருவாகிவிட்டனர். அவர்களில் தற் போது நூற் றாண் டு நிறைவெய்தியிருக்கும்...

பெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும் – வ.கீதா

ரஷ்யப் புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டாகிறது. புரட்சிக் காலகட்டத்தில் பெரியாரும், அதுகுறித்த விரிவாக நடத்திய விவாதங்களை முன்வைக்கிறது இக்கட்டுரை, பெரியார் விட்டுச சென்ற நுட்பமான சமூகப் புரிதலை சமகாலத்தில் முன்னெடுப்பதில் தவறிவிட்டோம் என்ற விமர்சனத்தையும் கட்டுரை பதிவு செய்கிறது. போல்ஷெவிக் புரட்சியின் 100ஆவது ஆண்ட விழாவை அடுத்தாண்டு நாம் அனுசரிக்க இருக்கும் வேளையில் அப்புரட்சி மரபு ஈன்ற முக்கியமான அரசியல் ஆளுமைகளில் ஒருவரான ஃபிடல் காஸ்டிரோவை நினைவு கோராமல் இருக்க முடியாது. காரணம், போல்ஷெவிக் புரட்சியாளர்களான லெனின், ட்ராட்ஸ்கி ஆகியோரை போல அவருமே சோசலிசத்தை கட்டியெழுப்பும் பணியை புதிய மானுடத்தை உருவாக்க முனையும் பணியுடன் அடையாளப்படுத்தினார். அவரின் சக புரட்சியாளரான செ குவேரா, உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது எத்தனை அவசியமோ, புதிய மனிதனை உருவாக்கும் செயல்பாடும் அத்தனை அவசியமானது என்று வாதிட்டார். இத்தகைய உருவாக்கத்தை கட்டளைகள் மூலமோ புரட்சி நடந்து முடிந்த மாத்திரத்திலோ சாதிக்க முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கல்வி,...

உங்கள் கரங்களில்

உங்கள் கரங்களில்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு ஓர் மாத இதழின் தேவையை தோழர்களும் ஆதரவாளர் களும் நீண்டகாலமாக வற்புறுத்தி வந்தார்கள், அவர்களின் விருப்பம். இப்போது செயல் வடிவ மாகியுள்ளது. ‘நிமிர்வோம்’வந்துவிட்டது.இதுஒருஇயக்கத்தின் ஏடு என்றாலும் ‘நிமிர்வோம்’ பெரியாரியம் குறித்த விரிவான விவாதத்துக்கும் -உரையாடல்களுக்கும் தனது பக்கங்களைத் திறந்த வைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறோம். இந்துத்துவா சக்திகளின் நவீன அவதாரங்கள், உலகமயமாக்கலை உருவாக்கி வரும புதிய பண்பாட்டு நெருக்கடிகள், ஜாதி படிநிலைக் கட்டமைப்பில் உருவாகி வரும் மாற்றங்கள், மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் மூலாம் பூசும் முயற்சிகள், பெண்ணியம் குறித்த நவீன சிந்தனைகள் உள்ளிட்ட கருத்துகளைப்பரிமாறும் களமாக ‘நிமிர்வோம்’ நிற்கும். தமிழ்நாட்டில் சமூக-பொருளாதார மாற்றங் களை கோரி நிற்கும் -சமூக சக்திகளின் -தோழர்களின்ஆதரவுத்தளத்தைவிரிவாக்க, ‘நிமிர் வோம்’ தொடர்ந்து செயலாற்றும். நிமிர் ஜனவரி 2017 இதழ்

நமக்கு இலக்கியம் உண்டா

நமக்கு இலக்கியம் உண்டா

பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான். அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால் சுவாமிகள், அடிகள், நாயன்மார், ஆழ்வார் ஆகிவிடுவார்கள். அவர்கள் அதிகமாகப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிந்து பக்கத்தில் உள்ள கடவுள்களைப் பற்றிப் பாடிய பாட்டுக்கள் பிரபந்தங்கள் ஆகிவிடுகின்றன. அக்கோவில்கள்பாடல்பெற்றகோவில்‘ஸ்தலங்கள்’ஆகிவிடுகின்றன. பாட்டு ‘தேவ ஆரங்கள்’ ஆகிவிடுகின்றன. யாரோ ஒரு சில புலவர்கள் வள்ளுவர், அவ்வை, கபிலர் போன்றவர்கள் நீதிநூல், நீதி மஞ்சுரி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சதகம், நாலடி முதலிய பல நீதிகளைப் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ள இலக்கியங்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார்கள். 60, 70 ஆண்டுகளுக்கு முன் நான் திண்ணைப் பள்ளிகளில் படிக்கும்பொழுது இவையே தலைசிறந்து விளங்கின. இப்போது அவை குப்பைமேட்டிற்கு போகச் செய்யப்பட்டு விட்டன....