Tagged: 17032016

செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை 17032016 விடுதலை இராசேந்திரன்

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகள் மற்றும் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்திருந்து செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு நமது கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னணி வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...