Tagged: மாபெரும் கையெழுத்து இயக்கம்

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கம்

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு சார்பாக 27.08.2016 அன்று மாலை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் , தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

காவிரி ஆறு எங்கள் ஆறு!! மணல் கொள்ளையனே வெளியேறு!! – மாபெரும் கையெழுத்து இயக்கம்

கரூர் மாவட்டம் புகழூரில் 14082016 அன்று காவிரிப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக மணல் குவாரி அமைத்து மணல் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது,இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மணல் கொள்ளைக்கெதிராக கண்டன உரையாற்றி முதல் கையெழுத்திட்டு ,கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்..